Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்தியாவின் அழகின் ராணி என்று அழைக்கப்பட்ட மகாராணி காயத்ரி தேவி ஏன் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார் தெரியுமா?
இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்மணி என்றால் நம் அனைவருக்கும் முதலில் நினைவு வருவது இந்திரா காந்திதான். மிகவும் பிரமிக்க வைக்கும், சமமான வலிமையான மற்றும் அறிவுத்திறன் மிக்க பெண்களின் பட்டியலில் இன்னொரு பெண்மணியும் இருக்கிறார். அவர்தான் மகாராணி காயத்ரி தேவி.
அவர்களின் ஈடு செய்ய முடியாத கருணை மற்றும் அழகுடன், இந்த இரண்டு பெண்களும் முழு உலகத்தையும் கவர்ந்தனர் மற்றும் அவர்களின் தேசத்தையும் அதன் குடிமக்களையும் செழிப்பை நோக்கி வழிநடத்தினர்.

மறுபுறம், இந்திரா காந்திக்கும், காயத்ரி தேவிக்கும் ஒத்துப் போகவில்லை. இந்த சண்டை மகாராணி காயத்ரி தேவியை கைது செய்ய வழிவகுத்தது. ஜூன் 26, 1975 அன்று, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, அகில இந்திய வானொலியில் (AIR) இந்தியாவின் மோசமான வரலாறான எமர்ஜென்சி நிலையை அறிவித்தார். எமர்ஜென்சி அறிவிப்புக்குப் பிறகு, ஒருவர் பின் ஒருவராக உயர்மட்ட பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.
ராஜமாதா காயத்ரியும் இந்த சூழ்நிலையில் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும், அவர் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு அரசியல் சண்டையாகவே பார்க்கப்பட்டது.
ஜெய்பிரகாஷ் நாராயணின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, ஜெய்ப்பூர் ராணியான காயத்ரி தேவி 1962 முதல் ஜெய்ப்பூர் சட்டமன்றத்தில் தீவிர உறுப்பினராக இருந்தார். இந்திரா காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக, ஜே.பி. நாராயண் மேலும் மேலும் முக்கியத்துவம் பெற்று வந்தார்.
ராஜ்மாதா காயத்ரி தேவி ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். 1.70 கோடி டாலர்கள் மற்றும் விலையுயர்ந்த நகைகள் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை கூறியது.
அந்த காலகட்டத்தில், காயத்ரி தேவி நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். அவர் தனது தனித்துவமான திறமை மற்றும் அழகு ஆகிய இரண்டிற்கும் பிரபலமானவர். ராஜஸ்தானி மக்கள் அவரை கடவுளாக வணங்கினர், மேலும் அவர் விவசாயிகள் மற்றும் பெண்கள் கல்வியில் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் உட்பட பல பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர பல திட்டங்களை வகுத்தார்.
மகாராணி காயத்ரி தேவி 1962 முதல் 1975 வரை எம்.பி.யாக இருந்தார். 1962ல் சுதந்திரக் கட்சி சார்பில் முதல்முறையாக போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளர் ஷர்திதேவியை அதிக வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். அவர் தகுதியான 250,272 வாக்குகளில் 192,909 வாக்குகளைப் பெற்றார், அதேசமயம் காங்கிரஸ் வேட்பாளர் 35,217 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்காக கின்னஸ் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications
