2 நோபல் பரிசு வென்ற மேரி கியூரியின் சவப்பெட்டியில் இப்போதும் ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா?

ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த விஞ்ஞானத் துறையில், நோபல் பரிசு வென்ற முதல் பெண்மணியாகவும், இயற்பியல் மற்றும் வேதியியல் துறையில் தன்னுடைய இணையற்ற பங்களிப்புகளுக்காக வெவ்வேறு துறைகளில் இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற ஒரே பெண்மணியாகவும், மேரி கியூரி வரலாற்றில் அசைக்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளார்.

இருப்பினும், கதிரியக்கம் பற்றிய அவரது ஆபத்தான மற்றும் தனித்துவமான ஆராய்ச்சி அவருடைய தனிப்பட்ட செலவில் நடந்தது. தொடர்ச்சியாக கதிர்வீச்சு வெளிப்பாட்டின் கீழ் இருந்த ஆபத்துகள் குறித்து கியூரி எதுவும் அறியவில்லை, மேலும் ரேடியம் மற்றும் பொலோனியம் போன்ற கதிரியக்கப் பொருட்களுடன் தொடர்ந்து பயணித்ததால் அவரது உடல் அதிக கதிரியக்கத்திற்கு ஆளாக்கியது.

Why Marie Curie Has Been Buried in a Special Coffin

நவீன இயற்பியலின் தாய்

கதிரியக்கம் பற்றிய ஆராய்ச்சியை நிறுவுவதன் மூலம் அறிவியல் உலகத்தை முற்றிலுமாக மாற்றியமைத்த "நவீன இயற்பியலின் தாய்" என்று அவர் கொண்டாடப்படுகிறார். அவர் தனது கணவர் பியருடன் சேர்ந்து ரேடியம் மற்றும் பொலோனியம் ஆகிய இரண்டு புதிய கூறுகளைக் கண்டுபிடித்தார், இது அவருக்கு சர்வதேச அளவில் புகழையும், இரண்டு நோபல் பரிசுகளையும் பெற்றுத் தந்தது. அவர் கடினமாக உழைத்து சம்பாதித்த வெற்றி இருந்தபோதிலும், அவரது பணி எதிர்பாராத விளைவுகளையும் கொண்டு வந்தது.

1906 ஆம் ஆண்டு அவரது கணவர் பியர் கியூரியின் ஆழ்ந்த தனிப்பட்ட இழப்பைத் தொடர்ந்து, 1911 ஆம் ஆண்டு, தூய ரேடியத்தை தனிமைப்படுத்தியதில் அவர் செய்த சாதனைகளுக்காக வேதியியலுக்கான நோபல் பரிசு மேரி கியூரிக்கு வழங்கப்பட்டது. கதிரியக்கப் பொருட்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்துவதற்கும், அவற்றின் வேதியியல் பண்புகள் மற்றும் சாத்தியமான மருத்துவ பயன்பாடுகளில் கவனம் செலுத்துவதற்கும் அவர் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவரது தீவிர முயற்சிகள் நவீன புற்றுநோய் சிகிச்சைகளுக்கு அடித்தளம் அமைத்தது.

மேரி கியூரிக்கு என்ன நேர்ந்தது?

மேரி கியூரி அவர் அறியாமலேயே ஆபத்தான அளவிலான கதிர்வீச்சுக்கு ஆளாகினார், தனது பைகளில் ரேடியத்தை சுமந்து சென்று இரவில் அதன் பளபளப்பை சோதித்தார். இந்த நீண்டகால கதிரியக்க வெளிப்பட்டால் இறுதியில் 1934 ஆம் ஆண்டில் அப்லாஸ்டிக் அனீமியாவால் இறந்தார், இது கதிர்வீச்சுடன் தொடர்புடைய ஒரு ஆபத்தான நிலையாகும், இந்த நிலை ஏற்பட்டால் எலும்பு மஜ்ஜையால் உடல் சரியாக செயல்பட போதுமான இரத்த அணுக்களை உற்பத்தி செய்ய இயலாது.

மேரி கியூரியின் சவப்பெட்டியின் சிறப்பு என்ன?

1995 ஆம் ஆண்டு பிரெஞ்சு அதிகாரிகள் மேரி கியூரியையும், பியரையும் கௌரவிக்க அவர்களின் உடல்களை பாரிஸில் உள்ள பாந்தியோனுக்கு மாற்ற முயன்றபோது, ​​கதிர்வீச்சு அளவுகள் பற்றிய அச்சம் எழுந்தன. அந்த இடத்தை ஆய்வு செய்ய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர், மேலும் அவரது சவப்பெட்டி தோண்டி எடுக்கப்பட்டபோது, ​​அது 2.5 மில்லிமீட்டர் ஈயத்தால் மூடப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தனர். இந்த அமைப்பு கியூரியின் உடல்களால் வெளிப்படும் கதிர்வீச்சை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியது.

முன்னெச்சரிக்கை நடடிக்கைகள் இருந்தபோதிலும், இந்த கண்டுபிடிப்பு அவரது உடலின் கதிரியக்க வெளிப்பாட்டின் அளவை எடுத்துக்காட்டுகிறது. அவரது உடல் நன்கு பாதுகாக்கப்பட்டது, சிறிய அளவிலான கதிரியக்க மாசுபாடு மட்டுமே இருந்தது. இந்த பாதுகாப்பு, கியூரி தனது கதிரியக்க வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்த வாழ்க்கையின் பிற்பகுதியில் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இருக்கலாம்.

மேரி கியூரியின் பொருட்கள்

இருப்பினும், கியூரியின் உடைமைகள் வேறு மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தின. அவரது பரசனிச்சர்கள் முதல் ஆய்வக குறிப்பேடுகள் வரை அவரது பல தனிப்பட்ட பொருட்கள் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகும் அதிக கதிரியக்கத்தன்மையுடன் உள்ளன. அவரது ஆய்வக குறிப்புகள் பிரான்சின் பிப்லியோதெக் நேஷனலில் ஈயம் பூசப்பட்ட பெட்டிகளில் சேமிக்கப்பட்டுள்ளன, ஆராய்ச்சியாளர்கள் அவற்றை அணுக பாதுகாப்பு ஆடை அணிந்து கையொப்பமிட வேண்டும்.

Story first published: Tuesday, March 18, 2025, 14:05 [IST]
Desktop Bottom Promotion