இத்தாலியில் கிரிக்கெட் விளையாட தடை... மீறினால் அபராதம்.. ஏன் தெரியுமா?

இத்தாலி, மோன்பால்கோன் நகரில் கிரிக்கெட் விளையாட தடை விதித்துள்ளனர். இத்தகைய தடையை விதிப்பதற்கான காரணம் என்ன? ஏன் இந்த திடீர் முடிவு? என்பது குறித்து அந்த நாட்டின் மேயர் அன்னா மரியா சிசிண்ட் , ஒரு பத்திரிக்கைக்கு விளக்கம் அளித்துள்ளார்.. அது என்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

இத்தாலியின் மேயர் அன்னா மரியா சிசிண்ட் கருத்துப்படி, மோன்பால்கோனின் கலாச்சாரத்தை கிரிக்கெட் ஆபத்தில் சிக்க வைப்பதாக கூறினார்.. அதனால்தான் நகர மேயர் விளையாட்டை தடை செய்துள்ளதாக பிபிசி செய்திச் சேவை கூறியுள்ளது.

why-has-a-this-little-town-in-italy-banned-cricket-here-the-reason

மோன்பால்கோனில் வெறும் 30,000 மக்கள்தான் வசிக்கின்றனர். அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாட்டினர், அவர்களில் பெரும்பாலோர் பங்களாதேஷ் முஸ்லிம்கள். அவர்கள் 1990 களில் ராட்சத பயணக் கப்பல்களை உருவாக்க நகரத்தை அடைந்தனர்.

இந்த நிலையில் அமலுக்கு வந்துள்ள புதிய சட்டத்தின் படி, நகரில் கிரிக்கெட் விளையாடி பிடிபட்டால் 100 யூரோ ($111) வரை அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. மேயர் அன்னா மரியா சிசிண்ட் தனது நகரத்தையும் கிறிஸ்தவ விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார்.. அதோடு கிரிக்கெட்டுக்காகப் பயன்படுத்தப்படும் பந்துகள் ஆபத்தானவை என்றும், தனது ஊரில் விளையாட்டு மைதானம் அமைக்க தன்னிடம் இடமோ பணமோ இல்லை என்றும் கூறி, தனது ஊரையும் கிறிஸ்தவ விழுமியங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் இத்தடை விதிக்கப்பட்டுள்ளது என அவர் விளக்கமளித்தார்..

தி கார்டியனின் கூற்றுப்படி, அரசுக்கு சொந்தமான நிறுவனமான ஃபின்காண்டியேரியின் தாயகமான நகரம், ராட்சத பயணக் கப்பல்களை உருவாக்குவதற்கான மையமாக அறியப்படுகிறது . இந்த நிறுவனம் திறமையான வெளிநாட்டு பணியாளர்களை குறிப்பாக பங்களாதேஷில் இருந்து வேலைக்கு அமர்த்துவதாக அறியப்படுகிறது. அவர்களின் வருகையின் விளைவாக, நகரத்தில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு வெளிநாட்டினர்தான் வசிக்கின்றனர்..

அதனால் இது ஒரு பிரச்சனை. "எங்கள் வரலாறு அழிக்கப்படுகிறது," என்று சிசிண்ட் கூறினார். ஆனால் கிரிக்கெட்டுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? புதிய கிரிக்கெட் ஆடுகளத்தை அமைக்க நகரத்தில் நிதி இல்லை என்று சிசின்ட் கூறியுள்ளார். கிரிக்கெட் பந்துகள் பொதுமக்களுக்கு ஆபத்து என்று அவர் வாதிடுகிறார்.

மேலும் மேயர் கூறுகையில்,” புலம் பெயர்ந்தோர் இந்த நகரத்திற்கு, எங்கள் சமூகத்திற்கு எதுவும் கொடுக்கவில்லை. பூஜ்யம்,என கூறினார். "மோன்பால்கோனுக்கு வெளியே வேறு எங்கும் சென்று கிரிக்கெட் விளையாட அவர்கள் அனுமதிக்கப்படுகின்ரனர்”.. என்றார்.

2017 இல், ஹிந்துஸ்தான் டைம்ஸ் படி, பால்கனியில் இரண்டு வயது குழந்தை கிரிக்கெட் பந்தால் தாக்கப்பட்டதை அடுத்து, போல்சானோவின் மேயர் பொது பூங்காக்களில் கிரிக்கெட்டை தடை செய்தார் . சிறுவனின் பெற்றோரின் புகாருக்குப் பிறகு வடக்கு இத்தாலியில் உள்ள நகரத்தின் மேயர் ரென்சோ கரமாச்சி அவ்வாறு செய்தார். சிறுவனுக்கு மூளையதிர்ச்சி ஏற்பட்டது, ஆனால் விரைவில் குணமடைந்தார். அதேபோலவே 2009 ஆம் ஆண்டில், மற்றொரு வடக்கு நகரமான ப்ரெசியா, இத்தாலிய நாளிதழான Corriere della Sera இன் படி, பொது இடங்களில் கிரிக்கெட்டையும் தடை செய்தது குறிப்பிடத்தக்கது..

Story first published: Saturday, September 7, 2024, 19:05 [IST]
Desktop Bottom Promotion