Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்...
ஒருவரின் கைரேகை ஏன் எப்போதும் இன்னொருவரின் கைரேகை மாதிரி இருப்பதில்லை...அதுக்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்!
அலுவலப் பணியில் இருப்பவர்கள் முதல் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் வரை அனைவரும் தினமும் தங்களின் கைரேகையை பயன்படுத்துகிறார்கள். உலகம் முழுக்க பல தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களால் ஒருவரின் அடையாளத்தைத் தெரிந்து கொள்ள பயன்படுத்தப்படும் மிகவும் நம்பகமான முறைகளில் ஒன்றாக கைரேகைகள்.
ஸ்மார்ட்போன்களைத் திறப்பது முதல் உயர்-பாதுகாப்பு வசதிகளைப் பாதுகாப்பது வரை, ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தை பரிசோதிக்கும் அமைப்புகளின் ஒருங்கிணைந்த பகுதியாக கைரேகைகள் மாறிவிட்டன. அவற்றின் பயன்பாடு சட்ட அமலாக்கம், தடயவியல் விசாரணைகள் மற்றும் அன்றாட வாழ்வில் பயோமெட்ரிக் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரவியுள்ளது.

ஒருவரின் மரபணு கூட மற்றொருவருடன் ஒத்துப்போகும் போது ஒருவரின் கைரேகை மட்டும் எப்படி தனித்வமானதாக இருக்கிறது என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
'செல்' இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு கைரேகை பற்றிய மர்மத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. நமது தனித்துவமான கைரேகைகளின் உருவாக்கம் வரிக்குதிரைகள் மற்றும் சிறுத்தைகளில் புள்ளிகளை உருவாக்கும் அதே உயிரியல் வடிவ செயல்முறையைப் பின்பற்றுகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.
கைரேகைகள் தானாக உருவானதாக நம்பப்படுகிறது, ஏனெனில் அவை பொருள்களின் அமைப்பைப் பிடிக்கும் அல்லது உணரும் திறனை மேம்படுத்துகின்றன, ஆனால் அவை உருவான உண்மையான வழிமுறை ஒரு புதிராகவே இப்போதும் இருக்கிறது.

கைரேகை பற்றிய ஒரு தீர்க்கமான முடிவைக் கண்டறிய நிறுவ, ஆராய்ச்சியாளர்கள் குழு கருவில் உள்ள எலிகளில் இந்த வடிவங்களின் உருவாக்கம் மற்றும் அவற்றின் வளர்ச்சியின் பின்னணியில் உள்ள மரபியல் பற்றி ஆய்வு செய்தது. Turing reaction-diffusion system எனப்படும் ஒரு நிகழ்வை இந்த ஆராய்ச்சி குழு கண்டறிந்தது, இதுதான் ஒருவரின் தனித்துவமான கைரேகைகளுக்கு காரணமாக இருக்கிறது.
இந்த வளர்ச்சி செயல்முறையானது 1950 ஆம் ஆண்டில் ஆலன் டூரிங் என்பவரால் முதன்முதலில் முன்மொழியப்பட்டது, இலைகள் ஏன் தனித்துவமான வடிவத்தில் வளர்கின்றன என்பதை இந்த கோட்பாடு விளக்கியது. வளரும் அமைப்பில் இரண்டு முரண்பாடான ஆற்றல்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது என்று அவர் விளக்கினார், இதில் ஒன்று செல் வளர்ச்சியை ஆதரிக்கிறது மற்றும் மற்றொன்று வளர்ச்சியைத் தடுக்கிறது. இது முகடுகளை உருவாக்குவதற்கு வழிவகுத்தது, இதுதான் வரிக்குதிரை மீது கோடுகள் அல்லது விரல் நுனியில் சுழல்கள் போன்ற தனித்துவமான அமைப்புகளுக்கு வழிவகுத்தது.
இந்த ஆய்வின் விஞ்ஞானிகள் கருவில் உள்ள எலிகளிடம் இந்த நிகழ்வை கவனித்தனர். விரல் நுனியின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் முனை, மையம் மற்றும் மேல் மூட்டுக்கு அருகில் முகடுகள் உருவாகியிருப்பதை அவர்கள் கண்டனர். செல்களின் வெவ்வேறு குழுக்கள் அவற்றின் நிலையின் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும்போது, சிக்கலான சுழல் வடிவங்கள் வெளிவரத் தொடங்கின.
எனவே கைரேகைகள் கருப்பையில் விரல்களை சீரற்ற முறையில் வைப்பதன் மூலம் உருவாகின்றன, செல்கள் ஒன்றுக்கொன்று எதிராக முகடுகளை உருவாக்குகின்றன. அதனால்தான், ஒரே மாதிரியான இரட்டையர்கள் கூட வெவ்வேறு கைரேகைகளைக் கொண்டுள்ளனர். கைரேகை பற்றிய இந்த ஆய்வு இதுவரை இருந்த பல கேள்விகளுக்கு பதிலைக் கொடுத்துள்ளது.



Click it and Unblock the Notifications











