Latest Updates
-
புதன் சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 01-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
பெங்காலி வெஜ் புலாவ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க -
கோவிலுக்குள் செல்வதற்கு முன் ஏன் செருப்பை அவசியம் கழட்ட வேண்டும் தெரியுமா? இதுல பல ரகசியம் இருக்கு -
ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் டிக்கா மசாலா - எப்படி செய்யணும் தெரியுமா? -
உங்க கழுத்து கருப்பா இருக்குதா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
August 2026 Monthly Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் ஆபத்துக்களையும், அவமானங்களையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
August 2026 Horoscope: ஆகஸ்ட் மாதத்தில் இந்த 5 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சியும், லாபமும் கிடைக்கப்போகுது.. -
ஒரு ரயில் டிக்கெட்டின் விலை 17 லட்சத்திற்கு விற்கப்படும் உலகின் ஆடம்பர ரயில் - எந்த நாட்டில் ஓடுது தெரியுமா? -
பருப்பு குழம்பு - சிம்பிளா 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
ஒருவரின் கைரேகை ஏன் எப்போதும் இன்னொருவரின் கைரேகை மாதிரி இருப்பதில்லை...அதுக்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்!
அலுவலப் பணியில் இருப்பவர்கள் முதல் ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் வரை அனைவரும் தினமும் தங்களின் கைரேகையை பயன்படுத்துகிறார்கள். உலகம் முழுக்க பல தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் அரசாங்கங்களால் ஒருவரின் அடையாளத்தைத் தெரிந்து கொள்ள பயன்படுத்தப்படும் மிகவும் நம்பகமான முறைகளில் ஒன்றாக கைரேகைகள்.
ஸ்மார்ட்போன்களைத் திறப்பது முதல் உயர்-பாதுகாப்பு வசதிகளைப் பாதுகாப்பது வரை, ஒருவரின் தனிப்பட்ட அடையாளத்தை பரிசோதிக்கும் அமைப்புகளின் ஒருங்கிணைந்த பகுதியாக கைரேகைகள் மாறிவிட்டன. அவற்றின் பயன்பாடு சட்ட அமலாக்கம், தடயவியல் விசாரணைகள் மற்றும் அன்றாட வாழ்வில் பயோமெட்ரிக் அடையாளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரவியுள்ளது.

ஒருவரின் மரபணு கூட மற்றொருவருடன் ஒத்துப்போகும் போது ஒருவரின் கைரேகை மட்டும் எப்படி தனித்வமானதாக இருக்கிறது என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
'செல்' இதழில் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வு கைரேகை பற்றிய மர்மத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. நமது தனித்துவமான கைரேகைகளின் உருவாக்கம் வரிக்குதிரைகள் மற்றும் சிறுத்தைகளில் புள்ளிகளை உருவாக்கும் அதே உயிரியல் வடிவ செயல்முறையைப் பின்பற்றுகிறது என்று அந்த ஆய்வு கூறுகிறது.
கைரேகைகள் தானாக உருவானதாக நம்பப்படுகிறது, ஏனெனில் அவை பொருள்களின் அமைப்பைப் பிடிக்கும் அல்லது உணரும் திறனை மேம்படுத்துகின்றன, ஆனால் அவை உருவான உண்மையான வழிமுறை ஒரு புதிராகவே இப்போதும் இருக்கிறது.

கைரேகை பற்றிய ஒரு தீர்க்கமான முடிவைக் கண்டறிய நிறுவ, ஆராய்ச்சியாளர்கள் குழு கருவில் உள்ள எலிகளில் இந்த வடிவங்களின் உருவாக்கம் மற்றும் அவற்றின் வளர்ச்சியின் பின்னணியில் உள்ள மரபியல் பற்றி ஆய்வு செய்தது. Turing reaction-diffusion system எனப்படும் ஒரு நிகழ்வை இந்த ஆராய்ச்சி குழு கண்டறிந்தது, இதுதான் ஒருவரின் தனித்துவமான கைரேகைகளுக்கு காரணமாக இருக்கிறது.
இந்த வளர்ச்சி செயல்முறையானது 1950 ஆம் ஆண்டில் ஆலன் டூரிங் என்பவரால் முதன்முதலில் முன்மொழியப்பட்டது, இலைகள் ஏன் தனித்துவமான வடிவத்தில் வளர்கின்றன என்பதை இந்த கோட்பாடு விளக்கியது. வளரும் அமைப்பில் இரண்டு முரண்பாடான ஆற்றல்கள் முக்கியப்பங்கு வகிக்கிறது என்று அவர் விளக்கினார், இதில் ஒன்று செல் வளர்ச்சியை ஆதரிக்கிறது மற்றும் மற்றொன்று வளர்ச்சியைத் தடுக்கிறது. இது முகடுகளை உருவாக்குவதற்கு வழிவகுத்தது, இதுதான் வரிக்குதிரை மீது கோடுகள் அல்லது விரல் நுனியில் சுழல்கள் போன்ற தனித்துவமான அமைப்புகளுக்கு வழிவகுத்தது.
இந்த ஆய்வின் விஞ்ஞானிகள் கருவில் உள்ள எலிகளிடம் இந்த நிகழ்வை கவனித்தனர். விரல் நுனியின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் முனை, மையம் மற்றும் மேல் மூட்டுக்கு அருகில் முகடுகள் உருவாகியிருப்பதை அவர்கள் கண்டனர். செல்களின் வெவ்வேறு குழுக்கள் அவற்றின் நிலையின் அடிப்படையில் ஒன்றோடு ஒன்று தொடர்பு கொள்ளும்போது, சிக்கலான சுழல் வடிவங்கள் வெளிவரத் தொடங்கின.
எனவே கைரேகைகள் கருப்பையில் விரல்களை சீரற்ற முறையில் வைப்பதன் மூலம் உருவாகின்றன, செல்கள் ஒன்றுக்கொன்று எதிராக முகடுகளை உருவாக்குகின்றன. அதனால்தான், ஒரே மாதிரியான இரட்டையர்கள் கூட வெவ்வேறு கைரேகைகளைக் கொண்டுள்ளனர். கைரேகை பற்றிய இந்த ஆய்வு இதுவரை இருந்த பல கேள்விகளுக்கு பதிலைக் கொடுத்துள்ளது.



Click it and Unblock the Notifications