Latest Updates
-
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...!
உலகின் நம்பர் ஒன் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் உண்மையான ஓனர் யார் தெரியுமா? அந்த ஊர் ராஜா கூட இல்லையாம்!
உலகின் மிகவும் பணக்கார நகரம் என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது துபாய்தான். துபாய் என்றாலே, புர்ஜ் கலீஃபா என்ற மாபெரும் கட்டிடம்தான் நமக்கு நினைவுக்கு வரும். பல ஹாலிவுட் திரைப்படங்களில் ஹீரோக்கள் இந்த கட்டிடத்தில் சண்டை போடுவதை நாம் பார்த்திருப்போம்.
828 மீட்டர் உயரத்தில், 163 தளங்களைக் கொண்ட இந்த கட்டிடக்கலை அற்புதம், உலகின் மிகச்சிறந்த அடையாளங்களில் ஒன்றாகும். புர்ஜ் கலீஃபாவின் கட்டுமானம் 2004 இல் தொடங்கி 2010 இல் நிறைவடைந்தது. உலகின் மிகவும் ஆடம்பரமான மற்றும் விலையுயர்ந்த தங்கும் விடுதிகளில் இதுவும் ஒன்றாகும், ஆனால் இந்த அற்புதமான கட்டமைப்பு உண்மையில் யாருக்கு சொந்தமானது என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? உலகின் மிக உயரமான இந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கு பின்னணியைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புர்ஜ் கலீஃபாவின் உண்மையான உரிமையாளர் ஐக்கிய அரபு எமிரேட்ஸை மைய இடமாகக் கொண்ட புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான எமார் பிராபர்ட்டீஸ் ஆகும். எமார் பிராபர்ட்டீஸின் தலைவர் முகமது அலப்பார் ஆவார், அவர் இந்த கட்டுமான அதிசயத்தை உயிர்ப்பிப்பதில் முக்கியப்பங்கு வகித்த ஒரு முக்கியமான நபராவார்.
இருப்பினும், புர்ஜ் கலீஃபாவின் உருவாக்கம் என்பது ஒரு கூட்டு முயற்சியாகும், மூன்று முக்கிய நிறுவனங்கள் இணைந்து இந்த கட்டுமானத்திற்கு தங்கள் ஆதரவை வழங்கின. அந்த நிறுவனங்கள் என்னவெனில்,
Samsung C&T (தென் கொரியா): மேம்பட்ட பொறியியல் திறன்களுக்கு பெயர் பெற்ற இந்த நிறுவனம், கோபுரத்தை வடிவமைத்து நிர்மாணிப்பதில் முக்கிய பங்கு வகித்தனர்.
BESIX (பெல்ஜியம்): இந்த கட்டுமான நிறுவனம் அதன் தொழில்நுட்ப திறன்கள் மற்றும் வளங்களை பயன்படுத்த அனுமதித்தது.
Arabtec (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்): ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முன்னணி கட்டுமான நிறுவனங்களில் ஒன்றான Arabtec கட்டுமான செயல்முறைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.
புர்ஜ் கலீஃபாவை அசாதாரணமான கட்டுமானமாக்குவது அது தெரியும் நிலைதான், தெளிவான நாளில், 95 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் இதைக் காணலாம். பொறியியல் மற்றும் வடிவமைப்பின் இந்த நம்பமுடியாத சாதனை மனித கண்டுபிடிப்பு மற்றும் கற்பனைத் திறனுக்கு ஒரு சான்றாக நிற்கிறது.
இந்த தனித்துவமான மற்றும் உயரமான கட்டமைப்பு, அதிக எண்ணிக்கையிலான மாடிகள், அதிக ஆக்கிரமிக்கப்பட்ட தளம், மிக உயரமான வெளிப்புற கண்காணிப்பு தளம், மிக நீண்ட பயண தூரத்தைக் கொண்ட லிஃப்ட் மற்றும் மிக உயரமான சேவை லிஃப்ட் போன்ற பல உலக சாதனைகளைப் படைத்துள்ளது.
உலகின் மிக உயரமான கட்டிடமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், புர்ஜ் கலீஃபா இரண்டு முக்கிய சாதனைகளையும் முறியடித்துள்ளது: வடக்கு டகோட்டாவில் முன்பு KVLY-TV மாஸ்ட் இருந்த மிக உயரமான கட்டமைப்பு மற்றும் டொராண்டோவின் CN கோபுரத்திற்குப் பதிலாக மிக உயரமான தனித்திருக்கும் கட்டமைப்பு.
புர்ஜ் கலீஃபா, காலம் கடந்து நிற்பதை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், இது 15 மில்லியன் கேலன் தண்ணீரை சேகரிக்கிறது, இது நிர்வகிக்கப்பட்டு கட்டிடத்தின் தாவரங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.



Click it and Unblock the Notifications












