Latest Updates
-
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்...
17 கோடி ஏக்கர் நிலத்துடன் இந்தியாவிலேயே அதிக நிலத்தை வைத்திருப்பது இவர்கள்தானாம்..இதன் மதிப்பு எவ்ளோ தெரியுமா?
ஒரு நாட்டின் பொருளதார வளர்ச்சியை நிர்ணயிப்பதில் நில் உடைமை என்பது முக்கியமான அம்சமாகும். இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 2017 இல் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அறிக்கையின்படி, இந்தியாவில் நில உரிமையைப் பொறுத்தவரையில், இந்திய அரசாங்கமே மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளது. இருப்பினும், அரசாங்கத்திற்குப் பிறகு, மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கும், தொழிலதிபர்களுக்கும் பதிலாக கத்தோலிக்க சர்ச் ஆஃப் இந்தியா அமைப்பே இந்தியாவில் அதிகளவில் அதிகளவு நிலத்தை வைத்துள்ளது.

கிறிஸ்தவ அறக்கட்டளைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பாக இந்த திருச்சபையானது கிறிஸ்தவத்தின் செய்தியைப் பரப்புவதில் அர்ப்பணித்துள்ள ஆயர்கள், பாதிரியார்கள், சகோதர சகோதரிகள் உட்பட ஒரு பரந்த வலையமைப்பைக் கொண்டுள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு பல்லாயிரம் கோடிகளாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய நில உரிமையாளர் யார்?
கத்தோலிக்க சர்ச் ஆஃப் இந்தியா, இந்திய அரசாங்கத்திற்குப் பிறகு மிகப்பெரிய விவசாயம் அல்லாத நில உரிமையாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஏராளமான சொத்துக்களுடன், அதன் மொத்த மதிப்பீடு மிகப்பெரிய தொகையாகும், இது இந்தியாவின் கடற்படை பட்ஜெட்டுக்கு சமமானதாகும். கூடுதலாக, கத்தோலிக்க சர்ச் ஆஃப் இந்தியா நாட்டின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.
எங்கெல்லாம் நிலம் உள்ளது?
இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள கோவாவாக இருந்தாலும் சரி, வடகிழக்கு இந்தியாவில் உள்ள கோஹிமாவாக இருந்தாலும் சரி, இந்தியாவின் கத்தோலிக்க திருச்சபை நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இவர்களுக்கு நிலம் உள்ளது. 2012 டெலிகிராப்-கல்கத்தா அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் சுமார் 2457 மருத்துவமனை மருந்தகங்கள், 240 மருத்துவ அல்லது நர்சிங் கல்லூரிகள், 28 பொதுக் கல்லூரிகள், 5 பொறியியல் கல்லூரிகள், 3765 மேல்நிலைப் பள்ளிகள், 7319 தொடக்கப் பள்ளிகள், பள்ளிகள் மற்றும் 3187 நர்சரி பள்ளிகள் உள்ளன. இது இந்திய அரசாங்கத்திற்குப் பிறகு இந்தியாவில் இரண்டாவது பெரிய நில உரிமையாளராவர்.
விவசாய நிலங்களிலும் இவர்கள் களமிறங்கியுள்ளனர். உதாரணமாக, 2009ல் கேரளாவில் 123 கோடி ரூபாய் மதிப்பிலான தோட்டத்தை கையகப்படுத்தினர்.
இவ்வளவு நிலங்களை எப்படி கையகப்படுத்தினர்?
இது முக்கியமாக 1927 ஆம் ஆண்டின் இந்திய தேவாலயங்கள் சட்டம் மூலம், அப்போது பிரிட்டிஷ் ஆதிக்கத்தால் நிறுவப்பட்டது. பிரிட்டாஷாரின் ஆதிக்கம் அவர்கள் பல்வேறு போர்களினால் கைப்பற்றிய நிலங்களை மலிவு விலையில் குத்தகைக்கு வழங்கியது. இதன் மூலம், அவர்கள் இந்தியா முழுவதும் நிலத்தை கையகப்படுத்த முடிந்தது மற்றும் பல்வேறு நிறுவனங்களைத் திறந்தனர். இந்த நிலங்களின் சட்டப்பூர்வ தன்மை இன்னும் விவாதிக்கப்படுகிறது.
எத்தனை ஏக்கர் நிலம் வைத்துள்ளனர்?
அரசாங்க நிலத் தகவல் இணையத்தளத்தின் தரவுகளின் அடிப்படையில் சமீபத்திய வெளிப்பாடுகள் கத்தோலிக்க திருச்சபையின் விரிவான நிலத்தை எடுத்துக்காட்டுகின்றன, இது நாடு முழுவதும் 7 கோடி ஹெக்டேர் (17.29 கோடி ஏக்கர்) என மதிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2021 நிலவரப்படி, இந்திய அரசாங்கமே ஏறக்குறைய 15,531 சதுர கிலோமீட்டர் நிலத்தைக் கொண்டுள்ளது, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்கள் அதன் பகுதிகளைப் பயன்படுத்துகின்றன. இதற்கு நேர்மாறாக, கத்தோலிக்க திருச்சபையின் பரந்த நிலப்பரப்பு பல்வேறு சொத்துக்களை உள்ளடக்கியது, தேவாலயங்கள் முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் வரை பல சொத்துக்கள் இவர்களிடம் உள்ளது. இந்த சொத்துக்களின் மொத்த மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. போப் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில், கத்தோலிக்க திருச்சபையானது இந்திய கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டின் (CBCI) மூலம் அதன் விரிவான நில சொத்துக்களை நிர்வகிக்கிறது.
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் நில மானியங்களை அங்கீகரிப்பது தொடர்பாக 1965 இல் அரசாங்க உத்தரவுகள் வெளியிடப்பட்ட போதிலும், இந்த விவகாரம் இணங்காததாலும், இந்த உடைமைகளின் சட்டப்பூர்வத் தன்மை தொடர்பான சர்ச்சைகளாலும் தீர்க்கப்படாமல் உள்ளது.



Click it and Unblock the Notifications












