Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
இந்த 5 ராசிக்காரங்க இருக்குற இடத்துல நெகட்டிவ் எனர்ஜி நிரம்பி வழியுமாம்... இவங்ககிட்ட இருந்து விலகியே இருங்க!
ஒரு மனிதர் எப்படிப்பட்டவர் என்பதை அவர்களின் ஆளுமையே நிர்ணயிக்கிறது. சிலர் அனைவரும் விரும்பும் நேர்மறை ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். மறுபுறம் சிலர் எதிர்மறை ஆற்றலை பரப்புபவர்களாக இருப்பார்கள். துரதிர்ஷ்டவசமாக,சிலர் தங்களுக்கே தெரியாமல் பிறருக்கு எதிர்மறை ஆற்றலை கொடுத்து அவர்களை துன்பத்திற்கு ஆளாக்குகிறார்கள்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் எதிர்மறை ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அவர்களின் மோசமான ஆளுமை மற்றும் அணுகுமுறை அவர்களுக்கு தெரிந்தோ, தெரியாமாலோ அவர்கள் இருக்கும் இடத்தை நெகட்டிவான இடமாக மாற்றுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் எதிர்மறை ஆற்றலால் நிரம்பியிருப்பார்கள் என்று பார்க்கலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் ஆற்றல் மற்றும் உற்சாகம் நிறைந்தவர்கள், இது பொதுவாக கெட்ட விஷயமாக கருதப்படுவதில்லை. இந்த ராசியின் கீழ் பிறந்தவர்கள் மற்றவர்களை யோசனைகளை சுரண்டலாம் மற்றும் அவர்களின் நிராகரிக்கும் அணுகுமுறையால் அனைவரையும் துன்புறுத்தலாம். மிதுன ராசிக்கார்களை மகிழ்விப்பது மிகவும் கடினம், எனவே அவர்களுடன் அரட்டை அடிப்பது பெரும்பாலும் விரோதத்தில் முடிவடையலாம். அவர்களின் உமிழும் வார்த்தைகளுக்கு சில நேரங்களில் எல்லையே இருக்காது, இது அவர்களுடன் தொடர்புகொள்வதை மற்றவர்களுக்கு மிகவும் விரும்பத்தகாததாக மாற்றுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் தங்கள் கண்ணில் படும் அனைவரையும் அனைத்து விஷயங்களையும் விமர்சிக்கிறார்கள். நீங்கள் அவர்களிடம் கருத்து கேட்க விரும்பாவிட்டாலும், உங்களின் தவறுகளை அவர்கள் சுட்டிகாட்டிக் கொண்டே இருப்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை தொடர்ந்து நச்சரிப்பதன் மூலம் அவர்களை வெறுக்க வைக்கிறார்கள், அவர்கள் தங்கள் துணை அனைத்திலும் பர்பெக்ட்டானவர்களாக இருக்க வேண்டும் என்று நச்சரிப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் எதிர்மறையான கண்ணோட்டத்திலேயே அனைத்தையும் பார்க்கிறார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு தங்களின் உணர்ச்சிகளை எவ்வாறு கடைபிடிக்க வேண்டுமென்று தெரியும், ஆனால் அவர்கள் உணர்ச்சிகளை எவ்வளவு அதிகமாக கட்டுப்படுத்துகிறார்களோ, அவர்களைச் சுற்றியுள்ள சூழல் பதட்டமாகிறது, மேலும் அவர்கள் எப்போதும் பதட்டமாகவும், கோபமாகவும் இருப்பதால், அவர்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் இவர்களிடம் இதற்கு முற்றிலும் எதிர்மறையான ஒரு ஆளுமையும் உள்ளது. அவர்கள் மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உணர்ந்தால், அவர்களின் நேர்மறையான உணர்ச்சிகள் மற்றவர்களுக்கும் பரவுகின்றன. எனவே அவர்கள் நல்ல மனநிலையில் இருக்கும்போது அவர்களுடன் பேசுவது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் பெரும்பாலும் மோசமான மனநிலையில் இருப்பார்கள், எனவே இது அவர்களுக்கு எதிர்மறையாக இருப்பது ஒரு வாடிக்கையாக மாறும். அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள மகிழ்ச்சியான மற்றும் நேர்மறையான நபர்களைப் பார்ப்பதை வெறுக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் எப்போதும் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிவதில்லை. சில சமயங்களில் மகர ராசிக்காரர்கள் எப்படி நேர்மறையாக சிந்திக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொள்வார்கள், ஆனால் அவர்களின் இயல்பான ஆளுமை எதிர்மறையானது என்பதால் மீண்டும் எதிர்மறை பக்கத்திற்கு திரும்பி விடுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் அதீத சுய-உணர்வு கொண்டவர்கள், மேலும் அவர்களின் கெட்ட அதிர்வுகள் பெரும்பாலும் அவர்களை நோக்கியே திசைதிருப்பப்படுகின்றன, ஏனெனில் அவர்கள் தங்கள் குணாதிசயங்கள், பழக்கவழக்கங்கள் மற்றும் நடத்தை ஆகியவற்றில் தொடர்ந்து அதிருப்தி அடைகிறார்கள். அவர்களை சுற்றி நடக்கும் எந்தவொரு தவறுக்கும் தங்களைத் தாங்களே குற்றம் சாட்டிக்கொள்வார்கள், பெரும்பாலும் தங்களிடம் இல்லாத குறைகள் இருப்பதாக நினைத்து விரக்தியில் இருப்பார்கள். அவர்களை உற்சாகப்படுத்த நீங்கள் முயற்சித்தால் அந்த முயற்சி வீண்தான்.



Click it and Unblock the Notifications













