Latest Updates
-
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்த 5 ராசிக்காரங்க எப்பவும் மிருகத்தனமாதான் நடந்துக்குவாங்களாம்... அந்த வெறி இவங்க இரத்தத்துலையே இருக்காம்!
நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணநலன்கள் இருக்கும். அதன்படி நல்லவர்களாகவும், பொய்யானவர்களாகவும், சண்டை போடுபவர்களாகவும், காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்பவர்களாகவும் இருக்கலாம். அது ஒவ்வொருவரின் ஆளுமை பண்பை பொறுத்தும் மாறுபடும்.
காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்பவர்களிடம் இருந்து மக்கள் விலகி இருக்க முயற்சி செய்வார்கள். ஏனெனில், அவர்கள் கொடூரமானவர்களாக இருக்கலாம். இவர்கள் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள மாட்டார்கள், அவர்களை மிகவும் துன்புறுத்தலாம் அல்லது கவலையடைச் செய்யலாம்.

சிலர் சில தருணங்களில் மிகவும் பொறுமையாகவும் உணர்ச்சியற்றவர்களாகவும் இருப்பார்கள். அதனால் அவர்களின் காட்டுமிராண்டித்தனமான பக்கம் எப்போது வேண்டுமானாலும் வெளியே வரும். பலருக்கு, அவர்கள் ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது மட்டுமே வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் சிலருக்கு, இந்த குணம் இயல்பாகவே இருக்கலாம்.
உங்கள் முதலாளி, நண்பர் அல்லது உறவினர் அல்லது நீங்கள் கூட அவர்களில் ஒருவராக இருக்கலாம் என யோசிக்கிறீர்களா? அப்படியானால், இதற்கு ஜோதிடம் உங்களுக்கு உதவும். எந்த ராசிக்காரர்கள் கொடூரமானவர்கள் மற்றும் காட்டுமிராண்டித்தனமானவர்கள் என்று தெரிந்துகொள்ள இக்கட்டுரையை படியுங்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் வலுவான உறுதித்தன்மையை கொண்டுள்ளனர். அத்துடன் விருப்பத்தின் மீது அதிக ஆசையையும் போட்டித் தன்மை கொண்டவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்கள் பெரும்பாலும் அவர்களின் ஆர்வம் மற்றும் வழிநடத்தும் தந்திரத்தின் காரணமாக எல்லா விஷயங்களிலும் தீவிரமாக செயல்படலாம்.
பலர் தங்கள் வெற்றியைத் தேடுவதில் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்வதை பார்க்கலாம். ஆனால் நீங்கள் அதை நேர்மறையான அர்த்தத்தில் பார்த்தால், சிலர் தங்கள் ஆற்றலை நேர்மறையான முயற்சிகளுக்குப் பயன்படுத்த முடியும் என்பதை உணரலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் ஆழ்ந்த உணர்ச்சிகள் மற்றும் ஆழமான இணைப்புகளை உருவாக்க விரும்புவதால் பெரும்பாலும் தீவிரமான நபர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களின் உறுதிப்பாடு சில சமயங்களில் இரக்கமற்றதாகவும் மனிதாபிமானம் அற்றதாகவும் காணப்படலாம்.
ஆனால், இந்த ராசிக்காரர்கள் நம்பகத்தன்மைக்காகவும் அர்த்தமுள்ள உறவுகளுக்காகவும் சில நேரங்களில் மோசமாக நடந்துகொள்ளலாம். அவர்களின் இலக்குகளில் தீவிர கவனம் செலுத்தும் திறன் சில சமயங்களில் "காட்டுமிராண்டித்தனமான" மனிதர்களாக அவர்களை காட்டலாம். அந்த நேரத்தில், இவர்களை பார்த்து மற்றவர்கள் பயம் கொள்ளலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் நேர்மை மற்றும் சாகச மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் நேரடியான தன்மை காட்டுமிராண்டித்தனமாக காணப்பட்டாலும், அது பெரும்பாலும் நம்பகத்தன்மைக்கான அவர்களின் ஆசை மற்றும் பாசாங்கு செய்வதற்கான வெறுப்பின் விளைவாகும்.
இந்த ராசிக்காரர்களின் சாகச இயல்பால் சில நேரங்களில் பொறுப்பற்றவர்களாக தோன்றலாம். ஆனால் புதிய எல்லைகளை ஆராய்வதில் இந்த ராசிக்காரர்கள் சிறந்து விளங்குகிறார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தங்கள் லட்சியங்கள் மற்றும் வெற்றிக்கான உறுதியால் இயக்கப்படுகிறார்கள். அவர்கள் சிறப்பான விஷயங்களில் பின்தொடர்வதில் கொடூரமானவர்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் பார்க்கப்படலாம். ஆனால் அது அவர்களின் வலுவான பணி நெறிமுறை மற்றும் அவர்களின் இலக்குகளுக்கான அர்ப்பணிப்பு காரணமாகும்.
வாழ்க்கைக்கான அவர்களின் ஒழுக்கமான அணுகுமுறை சில நேரங்களில் கடுமையானதாக இருக்கலாம். ஆனால் அது நிலைத்தன்மைக்கான அவர்களின் விருப்பத்தில் வேரூன்றியுள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஒரு தனித்துவமான முன்னோக்கு குணம் கொண்டவர்கள். புதுமை மற்றும் மாற்றத்திற்கான அவர்களின் விருப்பம் காரணமாக மக்களிடம் அவர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொள்ளலாம். அவை விதிமுறைகளுக்கு சவால் விடுவது போன்று, எல்லைகளை மீறி நடந்துகொள்வதை குறிக்கலாம்.
உலகத்தை சிறந்த இடமாக மாற்றுவதற்கான அவர்களின் ஆர்வம் சில சமயங்களில் பாரம்பரிய நம்பிக்கைகளுடன் மோதல்களுக்கு வழிவகுக்கும்.
இதர ராசிக்காரர்கள்
ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் அந்த விளிம்பிற்குத் தள்ளப்பட்டலாம். வேறு வழியின்றித் தள்ளப்பட்டால்தான் காட்டுமிராண்டித்தனமாகவும், கொடூரமானவர்களாகவும் அவர்கள் மாறலாம் அல்லது மாறாமலும் இருக்கலாம். அப்படிச் செயல்பட வேண்டியிருக்கும் போது அவர்களே அதை வெறுக்கிறார்கள் என்பதால் அவர்களுக்குள்ளே அதை மறைக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications












