Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படும் காய்கறி எது தெரியுமா? உங்களுக்கு இந்த காய் பிடிக்குமா?
நமது ஆரோக்கிய வாழ்வில் காய்கறிகளின் பங்கு என்பது மிகவும் முக்கியமானது. நமது அன்றாட உணவில் காய்கறிகள் பிரிக்க முடியாதவையாக உள்ளது. நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதிலிருந்து, உடலின் வலிமை மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்துவதில் காய்கறிகள் மிகவும் முக்கியமானவை, அனைத்திற்கும் மேலாக காய்கறிகள் பல நோய்களிலிருந்து நம்மைக் பாதுகாக்கின்றன.
நூற்றுக்கணக்கான காய்கறிகள் இருந்தாலும் சில காய்கறிகள் சுவையாக இருப்பதாலும், சமைப்பதற்கு எளிதாக இருப்பதாலும், பலவிதமான உணவுகளில் பயன்படுத்தப்படுவதாலும், அவை மக்களால் அதிகளவில் விரும்பப்படுகின்றன. அனைத்து காய்கறிகளிலும், ஒரு காய்கறி மட்டும் அதன் பிரபலம் மற்றும் பரவலான பயன்பாடு காரணமாக, பெரும்பாலும் காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. அது எந்த காய்கறி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

காய்கறிகளின் ராஜா
கத்திரிக்காய் காய்கறிகளின் ராஜா என்று அறியப்படுகிறது. இது பல நாடுகளில், குறிப்பாக இந்தியாவில், பரவலாகப் பயிரிடப்படுகிறது. கத்திரிக்காய் ஆண்டு முழுவதும் பல்வேறு வகைகளில் கிடைக்கிறது மற்றும் பலவிதமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது பயிரிட எளிதானது, பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது, மேலும் மசாலாப் பொருட்களை எளிதில் உறிஞ்சும் தன்மைக்காக விரும்பப்படுகிறது. இதனால் இது இந்தியா முழுவதும் அன்றாட உணவுகளில் மிகவும் பிரபலமான ஒரு காய்கறியாகத் திகழ்கிறது.
கத்தரிக்காய் ஏன் காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது?
கத்தரிக்காய் இந்தியா முழுவதும் அதிகம் பயிரிடப்படும் மற்றும் அதிகம் உண்ணப்படும் காய்கறிகளில் ஒன்றாக இருப்பதால், அது காய்கறிகளின் ராஜா என்று அழைக்கப்படுகிறது. இது பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும் மண்ணிலும் எளிதாக வளரும். விவசாயிகள் ஒரே செடியிலிருந்து பலமுறை அறுவடை செய்ய முடியும். சந்தைகளிலும், வீடுகளிலும் இதற்குத் தொடர்ச்சியான தேவை இருப்பதால், இது இந்திய உணவுகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
பயிரிடுவதும், வளர்ப்பதும் எளிதானது
கத்தரிக்காய் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இந்தியாவில் கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் பயிரிடப்படுகிறது. இது மிதமான மற்றும் வெப்பமான காலநிலைகளில் வளரக்கூடியது, மேலும் இதற்கென மிகவும் சிறப்பான மண் தேவையில்லை. இதன் காரணமாக, விவசாயிகள் இதை பயிரிட விரும்புகிறார்கள், மேலும் இது ஆண்டு முழுவதும் சந்தைகளில் கிடைக்கிறது.
ஊட்டச்சத்து மதிப்பு நிறைந்தது
கத்தரிக்காய் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை ஏற்படுத்தக்கூடியது. இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் உள்ளன. இது உடலைப் பாதுகாக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் கொண்டுள்ளது. இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், இது அனைத்து வயதினருக்கும் ஏற்றது.
இந்திய உணவுகளில் முக்கியமானது
கத்தரிக்காய் பல இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது குழம்பாகச் சமைக்கப்படுகிறது, பொரிக்கப்படுகிறது அல்லது உள்ளே மசாலா நிரப்பிச் சமைக்கப்படுகிறது. கத்தரிக்காய் சாம்பார், பொரியல், எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு என பல வழிகளில் அதை நாம் சமைக்கிறோம். இந்த காய்கறி மசாலாப் பொருட்களை நன்கு உறிஞ்சும் தன்மை கொண்டது, இது உணவைச் சுவையாக மாற்றுகிறது. இந்தியாவின் ஏறக்குறைய ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அதன் சொந்த பிரபலமான கத்தரிக்காய் செய்முறை உள்ளது.
கத்தரிக்காய் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது
உலகிலேயே கத்தரிக்காயை அதிகம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. சாதகமான காலநிலை, பரந்த விவசாய நிலப்பரப்பு மற்றும் அதிக நுகர்வு ஆகியவை இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்க உதவுகின்றன. இந்தியாவின் காய்கறி உற்பத்தியில் கத்தரிக்காய் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.
கத்தரிக்காயை அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
மேற்கு வங்கம் இந்தியாவில் கத்தரிக்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. ஒடிசா, தமிழ்நாடு, பீகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம் போன்ற பிற மாநிலங்களும் இந்த காய்கறியை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன.
உலகின் பழமையான காய்கறிகளில் ஒன்று
கத்தரிக்காய் மனிதர்களால் பயிரிடப்பட்ட மிகவும் பழமையான காய்கறிகளில் ஒன்றாகும். கத்தரிக்காய் 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்டது. இது இந்தியப் பகுதியில் தோன்றியது மற்றும் பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய உணவின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.



Click it and Unblock the Notifications












