Latest Updates
-
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பாரம்பரிய நெய் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
டாய்லெட் பேப்பரை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா? கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க -
இந்த பிரச்சனை இருந்தா, பூண்டு அதிகமா சாப்பிடாதீங்க.. - எச்சரிக்கும் டாக்டர்! -
நாகர்கோயில் வாழைக்காய் துவட்டல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
September 2026 Career Horoscope: செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இந்தியாவில் பின்னோக்கி பாயும் ஒரேயொரு நதி எது தெரியுமா? இது பின்னோக்கி பாய காரணம் என்ன தெரியுமா? -
லன்ச்பாக்ஸ்-க்கு ஒருடைம் இப்படி கீரை சாதம் செஞ்சு குடுங்க.. ருசியாவும் இருக்கும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு நல்ல நேரம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் உருவாக்கும் பத்ரா ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு நிறைய லாபமும், தொழிலில் வளர்ச்சியும் ஏற்படும்..
தமிழ்நாட்டிலேயே அதிக கல்வியறிவு உள்ள மாவட்டம் எது தெரியுமா? எதுன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க...!
தமிழ்நாடு இந்தியாவின் மிகவும் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாகும்.கலாச்சாரரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், கல்வி தரத்திலும் தமிழ்நாடு இந்தியாவின் தவிர்க்க முடியாத மாநிலங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்நாடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலமாக உள்ளது. அதனால்தான் இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் தமிழ்நாடு முக்கியப்பங்கு வகிக்கிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்டமும் பல்வேறு அளவிலான கல்வியறிவைக் கொண்டுள்ளது. அதில் எந்த மாவட்டம் அதிக கல்வியறிவு கொண்டதாக உள்ளது என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? அதற்கான பதிலை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு
இந்தியாவின் தெற்கு மூலையில் அமைந்துள்ள தமிழ்நாடு, அதன் கலாச்சார பாரம்பரியத்திற்கும், மொழியியல் மரபுக்கும் பெயர் பெற்றது. பரப்பளவில் இது இந்தியாவின் பத்தாவது பெரிய மாநிலமாகவும், மக்கள் தொகையில் ஆறாவது பெரிய மாநிலமாகவும் உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் வங்காள விரிகுடாவால் சூழப்பட்ட இதன் தலைநகரம் உலகப்புகழ் பெற்ற சென்னை ஆகும். உலகின் பழமையான செம்மொழிகளில் ஒன்றான தமிழ், மாநிலத்தின் அலுவல் மொழியாகும்.
தமிழ்நாட்டின் நிர்வாகம்
தமிழ்நாடு 38 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறை நோக்கங்களுக்காக, இந்த 38 மாவட்டங்கள் 87 வருவாய் கோட்டங்களாகவும், 310 வட்டங்களாகவும், 1,349 வருவாய் குறுவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 17,680 வருவாய் கிராமங்கள் அடங்கியுள்ளன. உள்ளாட்சி நிர்வாகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 12,618 கிராம ஊராட்சிகள் அடங்கும். 1688-ல் நிறுவப்பட்ட சென்னை மாநகராட்சி, உலகின் இரண்டாவது பழமையான மாநகராட்சியாகும்.
தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம்
சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் எழுத்தறிவு விகிதம் 80.09% ஆகும். ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 86.77% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 73.44% ஆகவும் உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்கவும், தமிழ்நாட்டின் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதங்களை மேம்படுத்தவும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டின் அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தின் எழுத்தறிவு விகிதம் 91.75% ஆகும். கல்விக்கு இந்த மாவட்டம் அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த உயர் விகிதம் பிரதிபலிக்கிறது. கன்னியாகுமரியின் இந்த சாதனை மற்ற மாவட்டங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. இது மற்ற மாவட்டங்களில் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், அனைத்து மக்களுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் மற்ற மாவட்ட நிர்வாகத்தை ஊக்குவிக்கிறது.
கன்னியாகுமரியின் எழுத்தறிவு விகிதம்
1,870,374 மக்கள்தொகை கொண்ட கன்னியாகுமரி மாவட்டம், 91.75% எழுத்தறிவு விகிதத்துடன் தமிழ்நாட்டிலேயே அதிக எழுத்தறிவு பெற்ற மாவட்டமாகத் திகழ்கிறது. அதன் மொத்த மக்கள்தொகையில், 1,548,738 பேர் எழுத்தறிவு பெற்றவர்கள் ஆவர். இந்த உயர் எழுத்தறிவு விகிதம், மாவட்டத்தின் திறமையான கல்வி முயற்சிகளையும், மக்களிடையே எழுத்தறிவை மேம்படுத்துவதில் உள்ள அர்ப்பணிப்பையும் விளக்குகிறது.



Click it and Unblock the Notifications
