Latest Updates
-
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க.. -
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
ஒரு நாடே சுற்றுலா பயணிகளுக்கு வாடைக்கு விடப்பட்ட அதிசயம்... எந்த நாடு? எவ்வளவு வாடகை தெரியுமா?
நாம் அனைவரும் வீடு, கார், பைக் மற்றும் சில சமயங்களில் எலக்ட்ரானிக் பொருட்களை கூட வாடகைக்கு எடுத்திருப்போம். உண்மையில் உலகின் சில பகுதிகளில் காதலர்கள் மற்றும் மனைவிகளை கூட வாடகைக்கு எடுக்கலாம். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நாடே வாடகைக்கு விடப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த நாட்டின் பெயர் லிச்சென்ஸ்டைன்.
ஐரோப்பாவில் அமைந்துள்ள இந்த சிறிய நாடு, சுவிட்சர்லாந்துக்கும் ஆஸ்திரியாவுக்கும் நடுவில் இருந்தது. 2011 வரை ஒரு இரவு தங்குவதற்கு இங்கு முன்பதிவு செய்யலாம். நம்புவதற்கு கடினமாக இருந்தாலும், அது உண்மைதான். சுமார் 40,000 மக்கள் மட்டுமே வசிக்கும் இந்த வினோதமான நாட்டை அதிக விலைக்கு வாடகைக்கு எடுக்க முடியும்.

ஒரு இரவுக்கு ஒரு முழு நாட்டையும் வாடகைக்கு எடுப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். அதற்கான கட்டணம் 70,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 60 லட்சம்). கற்பனை கூட செய்து பார்க்க முடியாத இந்த அனுபவத்தை சாத்தியமாக்க, லிச்சென்ஸ்டைன் பிரபலமான தங்குமிட தளமான AirBNB இல் பட்டியலிடப்பட்டது. மார்க்கெட்டிங் மற்றும் தயாரிப்பு நிறுவனத்திற்கு இடையேயான ஒப்பந்தத்தால், இது ஒரு விளம்பர பிரச்சாரமாக இந்த சேவைத் தொடங்கப்பட்டது.
லிச்டென்ஸ்டைனை வாடகைக்கு எடுப்பது சாதாரண விஷயமல்ல. ஒருவர் நாட்டை முன்பதிவு செய்தபோது, அவர்களின் நிகழ்வு விவரங்கள் தெருப் பலகைகள் மற்றும் அந்த நாடு முழுவதும் காட்சிப்படுத்தப்பட்டன. வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டைகள் உட்பட நாட்டின் சில முக்கிய சின்னங்களுக்கு விருந்தினர்களுக்குத் தடையற்ற அணுகல் வழங்கப்பட்டது. அனைத்திற்கும் மேலாக லிச்சென்ஸ்டைனின் ஆளும் மன்னரே தனிப்பட்ட முறையில் சாவியை விருந்தினர்களிடம் ஒப்படைப்பார்.
விருந்தினர்கள் தங்கள் ஓய்வு நேரத்தில் நாட்டை சுற்றி பார்ப்பது மட்டுமல்லாமல், கம்பீரமான ஆல்ப்ஸ் மலையில் அவர்களுக்கென தனித்துவமான பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் வானவேடிக்கை காட்சிகளை அனுபவித்தனர், இது ஒரு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கியது.
இந்த தனித்துவமான வாய்ப்பு பலருக்கும் கனவாக இருந்தாலும், துரதிர்ஷ்டவசமாக 2011 ஆம் ஆண்டிலிருந்து இந்த சேவை நிறுத்தப்பட்டது. சமீபத்தில் ஒரு வைரல் வீடியோ இந்த கதையை கதையை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது, மேலும் பலர் இந்த அசாதாரண கதையைப் பற்றியும், இந்த நாட்டின் வரலாறு பற்றியும் இப்போது தெரிந்து ஆச்சரியப்படுகிறார்கள்.
இந்த வாடகை சேவை இனி கிடைக்காது என்றாலும், உலகில் லிச்சென்ஸ்டைனின் சுருக்கமான பயணம் ஒரு ஆர்வமான மற்றும் புதிரான வரலாறாகவே உள்ளது. கிரியேட்டிவ் மார்க்கெட்டிங் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை மீண்டும் ஒருமுறை உலகிற்கு நினைவூட்டுகிறது. மார்க்கெட்டிங் நினைத்தால் முழு நாட்டையும் கூட சரியான விலைக்கு வாடகைக்கு விடலாம்.



Click it and Unblock the Notifications












