உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணை எந்த நாட்டிடம் இருக்கு தெரியுமா? அமெரிக்காகிட்ட கூட இல்லையாம் இது...!

உலகின் பல நாடுகளில் இப்போது போர் மூளும் பதட்டமான சூழல் நிலவுகிறது. கடந்த வாரம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த குட்டி போர் உலகம் முழுக்க பதட்டமான சூழலை ஏற்படுத்தியது. ஒருவழியாக போர் பதற்றம் முடிவுக்கு வந்து தற்போது இயல்பு நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இராணுவ மோதலில், ஏவுகணைகள் முக்கிய பங்கு வகித்தன, அவற்றின் உதவியுடன் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்துள்ள அனைத்து பயங்கரவாத தளங்களையும் இந்தியா அழித்தது.

Which Country Has the World s Most Powerful Missile

இதைத் தொடர்ந்து, உலகெங்கிலும் உள்ள நாடுகள் எதிரியைத் தோற்கடிக்க நவீன ஏவுகணை தொழில்நுட்பத்துடன் தங்கள் இராணுவத்தை தயார் நிலையில் வைத்துள்ளன. உலகெங்கிலும் பல நாடுகளில் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் உள்ளன. இருப்பினும், உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகணை எது மற்றும் எந்த நாட்டிடம் அது உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா? இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகணை எது?

தற்போது RS-28 சர்மாட் எனும் ஏவுகணைதான் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஏவுகணையாக கருதப்படுகிறது. ரஷ்யாவிடம் இருக்கும் இந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை உலகின் மிக சக்திவாய்ந்த ஏவுகணையாகக் கருதப்படுகிறது, மேலும் இது சாத்தான் II என்று அழைக்கப்படுகிறது. இது ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது, இந்த ஏவுகணையின் தாக்கும் வரம்பு 18000 கிலோமீட்டர் ஆகும், இது பூமியின் எந்தப் பகுதியையும் தாக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.

இதன் நீண்ட தூரம் தாக்கக் கூடிய திறன் இதை உலகின் மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் ICBM ஏவுகணையாக மாற்றியுள்ளது. இதன் எடை சுமார் 208 டன்கள் மற்றும் நீளம் சுமார் 35 மீட்டர். ஊடக அறிக்கைகளின்படி, RS-28 சர்மாட் MIRV தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரே நேரத்தில் 15 அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அதன் அழிவு திறன் மற்றும் அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் தற்போதுள்ள அனைத்து ICBM ஏவுகணைகளையும் விட மிகவும் மேம்பட்டதாக மாற்றுகிறது. இந்த ஏவுகணை அமெரிக்காவின் வான் பாதுகாப்பு அமைப்பையும் மீறி தாக்கக் கூடிய வலிமை கொண்டது.

Which Country Has the World s Most Powerful Missile

RS-28 சர்மாட் ஏவுகணையின் விலை என்ன?

இந்த சக்திவாய்ந்த ஏவுகணையின் விலை பற்றிய அதிகாரபூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஊடக அறிக்கைகளின்படி, ஒரு ஏவுகணையின் விலை சுமார் 35 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.290 கோடி என்று கூறப்படுகிறது. அது மட்டுமின்றி ஆராய்ச்சி, மேம்பாடு, சோதனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான செலவுகள் 85 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கலாம் என்று பிற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிடம் உள்ள ஏவுகணைகள்

இந்தியா ஏவுகணை தொழில்நுட்பத்தில் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன்பு, இந்தியாவில் பல ராஜ்ஜியங்கள் தங்கள் போரின் ஒரு பகுதியாக ராக்கெட்டுகளைப் பயன்படுத்தின. மைசூர் ஆட்சியாளர் ஹைதர் அலி 18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தனது படையில் இரும்பு உறை ராக்கெட்டுகளைச் சேர்க்கத் தொடங்கினார். ஹைதரின் மகன் திப்பு சுல்தான் இறந்த நேரத்தில், அவரது படையின் ஒவ்வொரு படைப்பிரிவிலும் ஒரு ராக்கெட் வீரர்கள் இணைக்கப்பட்டனர்.

தற்போது இந்தியாவின் தொழில் நுட்ப வளர்ச்சியால் இந்தியாவிடம் பல சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. தற்போது இந்தியாவிடம் Surface-to-Air Missiles (SAM), Air-to-Air Missiles (AAM), Surface-to-Surface Missiles, Ballistic Missile Defence (BMD)/ Interceptor Missiles, Cruise Missiles, Submarine-Launched Ballistic Missiles, Anti-Tank Missiles பொன்னர் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் உள்ளன. குறிப்பாக Ballistic Missile Defence (BMD)/ Interceptor Missiles-களில் மட்டுமே ப்ரம்மோஸ், அக்னி, திரிசூல், அஸ்திரம் போன்ற 30 வகையான ஏவுகணைகள் உள்ளது.

Desktop Bottom Promotion