பாம்புகளை காய்கறிகள் போல விவசாயம் செய்யும் அதிசய நாடு... ஏன் இப்படி பண்றாங்க தெரியுமா?

இன்று உலக பாம்புகள் தினம். உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் மர்மங்கள் நிறைந்த உயிரினங்களில் ஒன்று பாம்பு. இந்த விஷ உயிரினம் உலகின் பல புராணங்களிலும், மதக் கதைகளிலும் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. உலகின் சில பகுதிகளில், பாம்புகள் கடவுளாக வணங்கப்படுகின்றன, மற்ற பகுதிகளில், அவை ஆபத்தான உயிரினங்கள் என்று கருதப்படுகின்றன.

இயற்கையின் மிகவும் ஆபத்தான மற்றும் புத்திசாலித்தனமாக வேட்டையாடும் உயிரினங்களில் பாம்புகளும் ஒன்று, மேலும் வேட்டையாடும் போது, அவை தங்கள் இரைக்கு இரக்கம் காட்டுவதில்லை. சில பாம்புகள் மனிதர்களை சில நிமிடங்களில் கொல்லக்கூடிய சக்திவாய்ந்த விஷத்தைக் கொண்டவையாக இருக்கின்றன. அதேபோல சில பாம்புகள் அவற்றின் நீளம் மற்றும் எடைக்கு பெயர் பெற்றவை. இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் கிட்டத்தட்ட 90% பாம்புகள் விஷம் இல்லாதவை.

Which Country Farm Snake Like Vegetables

எதேர்ச்சையாக பார்த்தாலும் சரி, மிருக்காட்சி சாலைகளில் பார்த்தாலும் சரி பாம்புகளை எங்கு பார்த்தாலும் அவை உடனடி நடுக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் சில நாடுகளில் பாம்புகள் காய்கறிகளைப் போல வளர்க்கப்படுகின்றன. இந்த நாடுகளில் விவசாயிகள் விஷ பாம்புகளை வளர்க்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

பாம்புகளை வளர்க்கும் நாடுகள் எவை?

உலகில் சில நாடுகள் காய்கறிகளைப் போல பாம்புகளை வளர்க்கும் நாடுகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். இந்தியா ஒரு விவசாய நாடு, இங்கு பல வகையான காய்கறிகள், பழங்கள் மற்றும் பூக்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் இங்கு நாம் பார்க்கப்போகும் நாடு பண்ணை பாம்புகளை உருவாக்குகிறது. சுவாரஸ்யமாக, இது மாம்பழங்களையோ அல்லது லிச்சிகளையோ வளர்க்காது, ஆனால் பாம்புகளை வளர்க்கிறது.

வியட்நாமின் பாம்பு விவசாயம்

பாம்புகளை விவசாயம் செய்யும் அந்த நாடு வியட்நாம், அங்கு ட்ரை ராச் டோங் டாமில் பாம்புகள் வளர்க்கப்படுகின்றன. இங்கே ஒவ்வொரு கிளையிலும் பாம்புகள் தொங்குகின்றன. ட்ரை ராச் டோங் டாமில், ஆண் மற்றும் பெண் பாம்புகளுக்கு ஒரு சரியான சூழல் வழங்கப்படுகிறது, இதனால் அவை இனப்பெருக்கம் செய்து அதிக முட்டையிட முடியும். இந்த இடத்திற்கு சென்றால் நீங்கள் பாம்புகள் தொங்குவதை மட்டுமே பார்க்கலாம், அதனால்தான் இந்த இடம் பாம்புகளின் தோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.

Which Country Farm Snake Like Vegetables

பாம்புகளை விவசாயம் செய்வதன் நோக்கம் என்ன?

ஊடக அறிக்கைகளின் படி, இங்கு பாம்பு வளர்ப்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், பாம்புகள் பல வகையான மருந்துகளைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படுகின்றன. அதன் விஷம் மற்றும் உடல் பாகங்கள் மருத்துவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இது தவிர, பிற மருத்துவப் பொருட்களும் இந்த பண்ணையில் வளர்க்கப்படுகின்றன. 400 க்கும் மேற்பட்ட வகையான விஷ பாம்புகள் இந்த பண்ணையில் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன, மேலும் அவற்றின் விஷங்கள் மருந்துகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செயப்படுகின்றன.

வியட்நாமின் முக்கிய சுற்றுலாத்தலம்

டோங் டாம் பாம்புப் பண்ணை வியட்நாமின் பிரபலமான சுற்றுலாத் தலமாகும், இது ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது. பல பார்வையாளர்கள் தங்கள் அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள், இதன் விளைவாக பல வைரல் வீடியோக்கள் வருகின்றன.

Desktop Bottom Promotion