Doomsday Vault என்றால் என்ன? இது நாட்டில் உள்ளது? இந்த ரகசிய அறையில் இந்தியா எதை சேமித்து வைத்துள்ள தெரியுமா?

உலகில் பல மர்மமான இடங்கள் உள்ளது. இந்த இடங்களைப் பற்றி பொது மக்கள் பலருக்கும் தெரியாது. பூமியின் எல்லையில், பனி, அச்சுறுத்தும் அமைதி மற்றும் இருள் மட்டுமே நிறைந்த ஒரு இடம் உள்ளது. அங்கு மனிதர்கள் வாழ்வதற்கான எந்த சுவடும் இல்லை. அந்த இடம் நார்வேயில் உள்ள ஒரு சிறிய பகுதியாகும். அது லாங்கியர்பியன் என்று அழைக்கப்படுகிறது, இது வட துருவத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய தீவாகும்.

இந்த தீவில் மாதக்கணக்கில் சூரிய ஒளி இருப்பதில்லை, மேலும் வெப்பநிலை உறைநிலைக்குக் கீழே மிகக் குறைவாக இருக்கும். இந்த இடம் துருவக் கரடிகளின் வாழ்விடமாக உள்ளது. ஆனால் இங்குதான், மனித இனம் தனது மிகவும் விலைமதிப்பற்ற பாரம்பரியத்தையும், ரகசியங்களையும் எதிர்காலத்திற்காகப் பாதுகாத்து வைத்துள்ளது.

What is Doomsday Vault What India Preserved in This Secret Vault

உலகின் மிகவும் பாதுகாப்பான இடம்

இந்த தீவில் ஒரு மலை உள்ளது, அதுதான் உலகின் மிகவும் பாதுகாப்பான இடம் என்று கூறப்படுகிறது. அது ஸ்வால்பார்ட் குளோபல் சீட் வால்ட் என்று அழைக்கப்படுகிறது, இது பொதுவாக 'டூம்ஸ்டே வால்ட்' என்று அறியப்படுகிறது. ஒருவேளை பூமி அழிந்து விட்டால் மனித நாகரிகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அனைத்தும் இங்கே உள்ளது. ஆரம்பத்தில், இது உலகளாவிய விதை பாதுகாப்புப் பெட்டகமாக உருவாக்கப்பட்டது. இதில், உலகெங்கிலும் உள்ள பயிர்களின் விதைகள் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன, இதன் மூலம் ஒருவேளை உலகளாவிய பேரழிவு ஏற்பட்டால், விவசாயத்தையும், மனிதர்களின் வாழ்க்கையையும் மீண்டும் தொடங்க முடியும்.

டிஜிட்டல் நாகரிகத்தின் பேக்கப் இங்கு உள்ளது

பின்னர், இந்த மலையில் மற்றொரு திட்டம் தொடங்கப்பட்டது, அதுதான் Arctic World Archive. இதன் அர்த்தம், இப்போது விதைகள் மட்டுமல்லாமல், முழு டிஜிட்டல் நாகரிகத்தின் பிரதியும் இங்கு சேமிக்கப்படுகிறது. உலகம் எதிர்காலத்தில் இண்டர்நெட் இல்லாததாக மாறினாலும், சர்வர்கள் எரிந்து போனாலும், அல்லது தரவுகள் அழிக்கப்பட்டாலும், மனிதகுலத்தின் அறிவு முழுமையாக இழக்கப்படக்கூடாது என்பதே இதன் நோக்கம். இதனால்தான், உலகின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களும், அமைப்புகளும் தங்களின் டிஜிட்டல் தரவுகளை இங்கு பாதுகாப்பாக வைத்துள்ளன. ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேர் முதல் நவீன தொழில்நுட்பத்தின் சோர்ஸ் கோட் வரை அனைத்தும் இந்த பெட்டகத்தில் பாதுகாப்பாக உள்ளன.

இந்தியா இந்த இடத்தில் எதை சேமித்துள்ளது?

இந்தியா தனது தொழில்நுட்ப ஆவணங்களை மட்டுமின்றி, தனது கலாச்சார அடையாளத்தையும் டிஜிட்டல் வடிவில் இங்கு பாதுகாத்துள்ளது. தாஜ்மகாலின் 3D டிஜிட்டல் பதிவு, அரசியலமைப்பின் ஒரு நகல், அரிய கையெழுத்துப் பிரதிகள் மற்றும் இஸ்ரோவின் முக்கிய திட்டங்களின் தரவுகளும் எதிர்கால சந்ததியினருக்காக இங்கு இந்தியா சார்பில் பாதுகாக்கப்படுகின்றன.

இது மட்டுமின்றி ஹைதராபாத்தில் உள்ள ICRISAT மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விதை மாதிரிகள் இங்கு அனுப்பப்பட்டுள்ளன. இவற்றில் சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் மற்றும் பயறு வகைகள், அரிசியின் அரிய ரகங்கள் போன்றவை அடங்கும். இந்த விதைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்ட கொள்கலன்களில் பாதுகாக்கப்படுகின்றன; இவற்றின் முழுமையான உரிமையும் இந்தியாவுக்கே சொந்தமானது.

பேரழிவுகளிலிருந்து இந்த இடம் எப்படி பாதுகாக்கப்படும்?

Arctic World Archiv-ன் மிகப்பெரிய பலம், அது முற்றிலும் இணைய இணைப்பு இல்லாமல் இருப்பதுதான். அங்கு இணைய இணைப்பு இல்லை, எனவே யாராலும் அதை ஹேக் செய்ய முடியாது. தரவுகள் ஒரு சிறப்புப் பிலிமில் பதிவு செய்யப்படுகின்றன, அது மின்சாரம் இல்லாமலேயே நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடியது. இந்த பகுதியில் இயற்கையான உறை பனி, இந்த பாதுகாப்புக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்குகிறது. உலகம் முழுவதும் இருளில் மூழ்கினாலும், இங்கு சேமிக்கப்பட்டுள்ள தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். மனிதகுலத்தைப் பாதுகாப்பதே இதன் ஒரே நோக்கம். அதனால்தான் இந்த இடம் எதிர்காலத்தின் கருப்புப் பெட்டி என்று அழைக்கப்படுகிறது.

Story first published: Monday, February 2, 2026, 19:10 [IST]
Desktop Bottom Promotion