மறந்தும் புதன்கிழமைகளில் இந்த காரியங்களை செஞ்சுடாதீங்க.. இல்ல பெரிய நஷ்டத்தை சந்திப்பீங்க...

ஜோதிடத்தின் படி, மங்களகரமான புதன்கிழமைகளில் ஒருசில விஷயங்களை ஒருவர் செய்யக்கூடாது. அப்படி செய்தால், அது ஒருவரது வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

Wednesday Activities: இந்து புராணங்களின் படி, நமது சூரிய மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு கிரகமும் வாரத்தின் ஒவ்வொரு நாட்களுடன் இணைக்கப்படுகிறது. இதேப்போல் ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கடவுளுடன் இணைக்கப்படுகிறது. அதில் புதன் கிரகத்தின் அதிபதி புதன் பகவான். இந்த புதன் பகவானை வழிபட சிறந்த நாளாக புதன்கிழமை கருதப்படுகிறது. மேலும் புதன்கிழமையில் புதன் பகவானைத் தவிர, விநாயாக பெருமானையும் பக்தர்கள் வழிபடுகிறார்கள்.

அதுமட்டுமின்றி, எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு புதன்கிழமை சிறந்த நாளாக கருதப்படுகிறது. ஒருவரது ஜாதகத்தில் புதன் பலவீனமாக இருந்தால், புதன்கிழமைகளில் விரதமிருந்து விநாயகரை வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதன் மூலம் புதனால் சந்திக்கும் பிரச்சனைகள் குறைவதோடு, வாழ்வில் உள்ள தடைகள் நீங்கி, முன்னேற்றம் ஏற்படத் தொடங்கும்.

Wednesday Activities: Things To Avoid Doing On Wednesday In Tamil

ஜோதிடத்தின் படி, மங்களகரமான புதன்கிழமைகளில் ஒருசில விஷயங்களை ஒருவர் செய்யக்கூடாது. அப்படி செய்தால், அது ஒருவரது வாழ்வில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். இப்போது எந்த காரியங்களை புதன்கிழமைகளில் செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.

1. புதன்கிழமைகளில் எவரும் தாய், தங்கை மற்றும் மகளை அவமதிக்கக்கூடாது. மேலும் பச்சை நிற ஆடைகள் அல்லது வளையல்களை பெண்களுக்கு தானம் செய்வது நல்லது.

2. புதன்கிழமைகளில் கடன் வாங்குவது மற்றும் கடன் கொடுப்பது கெட்டதாக கருதப்படுகிறது. இந்நாளில் கடன் வாங்கினால், அதனால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாது, இழப்புக்களே ஏற்படும். எனவே மறந்தும் புதன்கிழமைகளில் கடன் வாங்கிவிடாதீர்கள்.

3. புதன்கிழமைகளில் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தினால், அது ஜாதகத்தில் புதனை பலவீனமாக்கும். எனவே இந்நாளில் மற்றவர்களை திட்டுவதற்கு கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

4. புதன்கிழமைகளில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்கள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்க வேண்டுமானால், அதை வெள்ளிக்கிழமைகளில் செய்யுங்கள்.

5. திருநங்கைகளை புதன்கிழமைகளில் அவமதிக்கக்கூடாது. சொல்லப்போனால், இந்நாளில் அவர்களிடம் ஆசியை வாங்கினால், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். முக்கியமாக இந்நாளில் திருநங்கைகளுக்கு உதவி செய்வது நல்லது.

6. புதன்கிழமைகளில் மேற்கு திசையை நோக்கி பயணம் மேற்கொள்வது கெட்டதாக கருமப்படுகிறது. உங்களின் வேலைகள் தடையின்றி வெற்றிகரமாக முடிக்க வேண்டுமானால், புதன்கிழமைகளில் விநாயகரை வணங்கிவிட்டு தொடங்குங்கள்.

7. திருமணமான பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் நீடிக்க வேண்டுமானால், புதன்கிழமைகளில் கருப்பு நிற ஆடைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும். நற்பலன்கள் கிடைக்க பச்சை நிற ஆடைகளை அணிவதே நல்லது.

Story first published: Wednesday, March 22, 2023, 11:37 [IST]
Desktop Bottom Promotion