Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
வாஸ்து படி நீங்க தூங்கும் போது இந்த பொருட்கள் உங்க அருகில் இருந்தால் பணநஷ்டம் உங்களை தேடிவருமாம்...!
நாம் தூங்கும் போது நம் வசதிக்காக நம் அறையில் பல பொருட்களை வைத்திருக்கிறோம். ஆனால் அது பல எதிர்மறை பிரச்சினைகளை ஏற்படுத்தும். இந்தப் பழக்கங்கள் உங்களுக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தும் நினைவில் கொள்ளுங்கள் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
இந்த பழக்கங்களில் பல உண்மையில் உங்களுக்கு நிதி பிரச்சினைகளையும், ஆரோக்கிய சிக்கல்களையும் ஏற்படுத்தும். இந்த பதிவில் வாஸ்து சாஸ்திர படி தூங்கும் போது பக்கத்தில் வைத்துக்கொள்ள கூடாத பொருட்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

எலக்ட்ரானிக் கேஜெட்டுகள்
மொபைல் போன் அல்லது வாட்ச் போன்ற எலெக்ட்ரானிக் கேட்ஜெட்களுடன் ஒருவர் தூங்கக் கூடாது. இது பண இழப்புக்கு வழிவகுக்கும், மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் இது மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. மொபைல் போனை பக்கத்தில் வைத்துத் தூங்குவது ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
கழுவாத கப்கள்
சில சமயங்களில் படுக்கைக்கு அருகில் இரவில் அருந்திய தேநீர் அல்லது காபி கோப்பையை அப்படியே விட்டுவிடுவோம். உங்கள் படுக்கையிலோ அல்லது அறையிலோ கழுவப்படாத பாத்திரங்களை வைக்காதீர்கள். ஏனெனில், அது வறுமைக்கு வழிவகுக்கும். அவை தூங்கும் போது கெட்ட கனவுகளுக்கு வழிவகுக்கும் மற்றும் பொதுவாக வீட்டில் எதிர்மறை ஆற்றலை பரப்பும்.
செய்தித்தாள்கள் அல்லது புத்தகங்கள்
செய்தித்தாள்கள் அல்லது புத்தகங்கள் தொடர்பான எதையும் உங்கள் தலையணையின் கீழ் வைக்க வேண்டாம். இதுபோன்ற விஷயங்களை ஒருவர் தலைக்குக் கீழே வைத்திருப்பது வாழ்க்கையில் எதிர்மறை ஆற்றலின் விளைவை அதிகரிக்கிறது. அப்படிப்பட்டவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் முன்னேற முடியாது.
தங்கம்
பலர் விரல் மோதிரங்கள் அல்லது காதணிகள் அல்லது சங்கிலி போன்ற தங்க நகைகளை, தலையணையின் கீழ், தூங்குவதற்கு முன் வைத்திருப்பார்கள். தூங்கும் போது தலைக்கு அடியில் அப்படி எதுவும் இருக்கக்கூடாது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது, ஏனெனில் அவை எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இது உங்களுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தலாம் அல்லது உறவுகளை கசப்பானதாக மாற்றலாம். இந்த நடைமுறையை பின்பற்றுபவர்கள் வாழ்க்கையில் நிறைய தடைகளை சந்திக்கிறார்கள்.
கண்ணாடி
தலைக்கு அருகில் அல்லது படுக்கைக்கு முன் வைக்கக்கூடாது. இது திருமண வாழ்க்கையில் சிக்கலை ஏற்படுத்தும். தூங்கும் போது கண்ணாடியில் உங்கள் பிம்பம் தெரியக்கூடாது. இது இரவில் பயங்கரமான கனவுகளுக்கு வழிவகுக்கும்.
அழுக்கு உடைகள்
சிலர் தங்களின் சோம்பேறித்தனத்தால் அழுக்கு உடைகளை படுக்கையிலேயே விட்டுவிடுகிறார்கள். இந்த நடைமுறையின் விளைவாக, கெட்ட கனவுகள், எதிர்மறை ஆற்றல் மற்றும் வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தும்.
தண்ணீர் பாட்டில்கள்
இது ஒரு பொதுவான நடைமுறை, ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, தலைக்கு கீழ் தண்ணீர் இருந்தால் சந்திரன் பாதிக்கப்படுகிறது. இதனால் எதிர்மறை, மனநல பிரச்சனைகள் ஏற்படும். எனவே தூங்கும் முன் படுக்கைக்கு கீழே எந்த பாத்திரத்திலும் தண்ணீரை வைக்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications













