Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
வைகாசி விசாகம் 2024 எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்..!
Vaikasi Visakam 2024: வைகாசி விசாகம் முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமானின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. 2024 ஆம் ஆண்டு, வைகாசி மாதத்தில் (தமிழ் நாட்காட்டியின்படி) அதாவது மே 22ம் தேதி புதன்கிழமை வருகிறது. மே 22ம் காலை 08.18 மணிக்கு துவங்கி, மே 23ம் தேதி காலை 09.43 மணி வரை விசாகம் நட்சத்திரம் உள்ளது. இதனால் வைகாசி விசாகம் விரதம் இருப்பவர்கள் மே 22ம் தேதி நாள் முழுவதும் விசாகம் நட்சத்திரம் உள்ளதால் அன்றைய தினம் விரதம், வழிபாடு, பூஜைகளை மேற்கொள்ளலாம்.
முருகப்பெருமான், கார்த்திகேயர் என்றும் அழைக்கப்படுகிறார். அவர் சிவன் மற்றும் பார்வதி தேவியின் மகன். தமிழர்களின் தலையாய கடவுளாகக் கருதப்படுபவர் முருகன். முருகன் விசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் பிறந்தார். முருகன் தைரியம் மற்றும் ஞானத்தின் இறைவனாக கருதப்படுகிறார். அவர் அனைத்து கடவுள்களின் தலைவர் மற்றும் போர்வீரர் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்.

இந்து மத நூல்களின்படி, அவர் ஆறு முகங்கள் மற்றும் பன்னிரண்டு கரங்களுடன் பிறந்த சிவன் மற்றும் பார்வதி தேவியின் தெய்வீக மகன். அவர்தான் தரகாசுரன் என்ற அரக்கனைக் கொன்றவர். இவருடைய வாகனம் மயில், மிகுந்த பக்தியுடனும், அர்ப்பணிப்புடனும் தம்மை வழிபடும் பக்தர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கிறார்.
வைகாசி விசாகத்தன்று அனைத்து முருகன் கோவில்களிலும் விசேஷக பூஜைகள், அபிஷேகங்கள், காவடி எடுத்து வந்து வேண்டுதல் நிறைவேற்றுதல் ஆகியவற்றை பக்தர்கள் செய்வதுண்டு. வீட்டிலேயே விரதம் இருப்பவர்கள் கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் விரதம் இருப்பதை போல் விரதம் இருக்கலாம். அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம். முருகனுக்கு அபிஷேகம் செய்வதற்கு பால் உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம்.
புராணக்கதை
முருகப்பெருமான் பிறந்ததற்குப் பின்னால் உள்ள கதை மிகவும் சுவாரஸ்யமானது. சிவபெருமான் தனது மறைந்த மனைவி சதியின் இறப்பிற்காக துக்கத்தில் இருந்தபோது, அவர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆழ்ந்த தியானத்தைத் தொடங்கினார். இதற்கிடையில், தாரகாசுரன், சூரபத்மன், சிங்கமுஹன் என்ற மூன்று அசுரர்கள் பூமியிலும், சொர்க்கத்திலும் அழிவை உண்டாக்கினார்கள். மூன்று அரக்கர்களும் சிவபெருமானின் மகனின் கைகளில் மட்டுமே இறக்க வேண்டும் என்ற வரம் பெற்றனர். பின்னர், பிரம்மாவும், விஷ்ணுவும் கவலையடைந்தனர்.
அவர்கள் சிவபெருமானின் தலையீட்டைக் கோர உடனே அவர் முன் தோன்றினர். சிவபெருமான் தனது நெற்றியில் அமைந்துள்ள மூன்றாவது கண்ணிலிருந்து பதிலளித்ததாகவும், பின்னர் ஆறு தீப்பொறிகளை வெளிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. தீப்பொறிகளில் இருந்து எரியும் வெப்பத்தை தணிக்க, வாயு (காற்று) மற்றும் அக்னி (நெருப்பு) அதை கங்கைக்கு கொண்டு சென்றனர், அதில் நீர் ஓட்டம் அவர்களை தாமரைகள் நிறைந்த சரவணை ஏரிக்கு தள்ளியது. ஏரியில், கிருத்திகா கன்னிப் பெண்களால் பாலூட்டப்பட்ட ஆறு ஆன்மீகக் குழந்தைகளாக தீப்பொறிகள் தோன்றின. இந்த குழந்தைகள் பின்னர் பார்வதி தேவியால் தழுவப்பட்டு ஆறு முகங்கள் மற்றும் 12 கைகளுடன் ஒன்றாக ஆனார்கள் என்று புராணங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.
விசாக விரதமும் பலன்களும்
வைகாசி விசாகம் நாளில் விரதம் இருப்பவர்கள் இன்றைய தினம் நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு மட்டும் சாப்பிடலாம். மற்றவர்கள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம். முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரங்களான 'ஓம் சரவணபவ', 'ஓம் முருகா' என்பவற்றில் ஏதாவது ஒன்றை சொல்லலாம். திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.
வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமண பேறு கிட்டும். குழந்தைபேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துக்கள் அகலும்.
பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்கள் முருகப் பெருமானுக்கு சஷ்டி திதியில் விரதம் இருப்பார்கள். அவர்கள் முருகன் அவதரித்த வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து வழிபட்டால், அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்திற்குள் நிச்சயம் குழந்தைப் பேறு ஏற்படும் என்பது நம்பிக்கை.



Click it and Unblock the Notifications