Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
தமிழ்நாட்டின் டாப் 10 கோடீஸ்வரர்கள் இவங்கதான்... முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா?
Top 10 Richest People In Tamil Nadu: தமிழ்நாடு இந்திய ஒன்றியத்தின் மிகவும் முக்கியமான ஒரு மாநிலமாகும். வளமான வரலாறு, பாரம்பரியம் முதல் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பதன் மூலம் தமிழ்நாடு இந்தியாவின் தவிர்க்க முடியாத மாநிலமாக மாறியுள்ளது. தமிழ்நாடு பொருளாதாரத்தில் எவ்வளவு வேகமாக முன்னேறுகிறதோ அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் செல்வந்தர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாடு இந்தியாவின் சில பணக்காரர்களின் தாயகமாக உள்ளது. அவர்கள் தங்களின் வியாபார யுக்தியாலும், ஆடம்பர வாழக்கையாலும் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தங்கள் வியாபார சாம்ராஜ்ஜியத்தை நிறுவியுள்ளனர். இந்தியாவில் பெரிய பணக்காரர் யாரென்றால் முகேஷ் அம்பானி மற்றும் அணில் அம்பானி என்று கூறுவோம். ஆனால் தமிழ்நாட்டின் பெரிய பணக்காரர் யாரென்றால் நமக்கே அதில் பல குழப்பம் இருக்கும். அந்த குழப்பத்தை போக்கும் பதிவுதான் இது. இந்த பதிவில் தமிழ்நாட்டின் டாப் 10 பணக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

ஷிவ் நாடார்
HCL டெக்னாலஜிஸின் நிறுவனரான ஷிவ் நாடார், தனது பரந்த அளவிலான முதலீடுகளின் காரணமாக தொடர்ந்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். $36.5 பில்லியன் நிகர மதிப்புடன், அவர் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் பணக்காரராக உள்ளார்.
சேனாபதி கிறிஸ் கோபாலகிருஷ்ணன்
இந்திய கோடீஸ்வரர் எஸ்.கே. கோபாலகிருஷ்ணன் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். Infosys நிறுவனத்தின் இணை நிறுவனரான இவர் இந்தியாவின் தொழில்நுட்ப துறையில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார். மேலும் இன்போசிஸை உலகளாவிய ஆலோசனை மற்றும் ஐடி சேவைத் தலைவராக வடிவமைப்பதில் மிகவும் முக்கிய பங்கு வகித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த தொழிலதிபரின் நிகர மதிப்பு $4.1 பில்லியன் என்று கூறப்படுகிறது.
கலாநிதி மாறன்
சன் குழுமம் இந்தியாவின் மிகவும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தற்போதைய தலைவர் கலாநிதி மாறன் ஆவார். அந்த நபர் FM வானொலி நிலையங்கள், செய்தித்தாள்கள், வார இதழ்கள், ஐபிஎல் டீம் மற்றும் தொலைக்காட்சி நெட்வொர்க்குகளின் உரிமையாளராக தமிழ்நாட்டு தொழில்துறையின் முக்கிய முகமாக உள்ளார். மேலும் அவர் அவர் திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்தையும், DTH நிறுவனங்களையும் வைத்திருக்கிறார். கலாநிதி மாறனின் மதிப்பிடப்பட்ட நிகர மதிப்பு $3.07 பில்லியன் ஆகும்.
அருணாச்சலம் வெள்ளையன்
முருகப்பா குழுமத்தின் முன்னாள் நிர்வாகத் தலைவரான ஏ. வெள்ளையன் உரங்கள், சர்க்கரை மற்றும் நிதி சேவைகளில் தமிழகத்தின் முகவரியாக உள்ளார், மேலும்அவரது தொலைநோக்குப் பார்வை மூலம் அவர் முருகப்பா குழுவின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு முன்னணி பங்களிப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அருணாச்சலம் வெள்ளையனின் நிகர மதிப்பு $805 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்பாத்தி எஸ். அகோரம்
AGS சினிமாஸ் மற்றும் AGS என்டர்டெயின்மென்ட் ஆகியவை பொழுதுபோக்குத் துறையில் ஒரு முக்கிய நபரான கல்பாத்தி எஸ். அகோரமால் நிறுவப்பட்டன. $250 மில்லியன் சொத்துக்களுடன், தமிழ் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் அவருக்கு குறிப்பிடத்தக்க பங்கு உள்ளது. அது மட்டுமின்றி அகோரம் குரூப்ஸ் பல்வேறு துறைகளில் வெற்றியை அடைந்துள்ளது.
ஏ.எம். நாயக்
Larsen & Toubro-ன் குழுமத் தலைவரான ஏ.எம். நாயக், $132 மில்லியன் நிகர மதிப்புடன், ததமிழ்நாட்டின் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து தனது பெயரை நிலைநிறுத்தியுள்ளார். இந்தியாவின் கட்டுமானம் மற்றும் பொறியியல் வளர்ச்சியில் அவரது பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவை.
அரவிந்த் தாம்
சிலிக்கான் லேப்ஸின் இணை நிறுவனரான அரவிந்த் தாம், Semiconductor துறையில் நன்கு அறியப்பட்டவர். $5.9 மில்லியன் நிகர மதிப்பைக் கொண்ட அவர், தொழில்நுட்பத் துறையில் இன்னும் இந்திய அளவில் ஒரு முக்கிய நபராக உள்ளார்.
எம். ஏ. சிதம்பரம்
தமிழ்நாட்டின் முக்கிய தொழிலதிபரும் கிரிக்கெட் நிர்வாகியுமான எம். ஏ. சிதம்பரம் இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார். அவரது தமிழ்நாட்டின் வாகனத் தொழில் மற்றும் விளையாட்டு உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்.
வேணு ஸ்ரீனிவாசன்
இந்தியாவின் முதன்மையான இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்றாக மாறுவதற்கு உதவிய TVS மோட்டார் நிறுவனத்தின் தலைவராக வேணு சீனிவாசன் உள்ளார். ஆட்டோமொபைல் துறையில் அந்த நிறுவனத்தை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவர் சமீபத்திய ஃபோர்ப்ஸ் பட்டியலில் சிறந்த தொழிலதிபர்களில் 217-வது இடத்தில் உள்ளார்.
ராம் ஸ்ரீராம்
ராம் ஸ்ரீராம் Google நிறுவனத்தின் ஆரம்பகால முதலீட்டாளர்களில் ஒருவரான அவர் ஒரு பிரபலமான முதலீட்டாளர் ஆவார். அவர் இந்திய தொழில்நுட்பத் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார். தனது முதலீடுகளிலிருந்து, அவர் நிறைய சம்பாதித்ததன் மூலம், அவர் தொடர்ந்து தமிழ்நாட்டின் செல்வந்தர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.



Click it and Unblock the Notifications
