Latest Updates
-
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
உலகில் அதிக வேலை நேரத்தைக் கொண்ட டாப் 10 நாடுகள்.. இந்தியா எத்தனாவது இடத்துல இருக்கு-ன்னு பாருங்க..
Countries With The Longest Working Hours: சமீபத்தில் அதிக வேலைப்பளு மற்றும் பணிச்சுமை காரணமாக இந்தியாவில் 26 வயதுடைய சி.ஏ பெண் ஒருவரின் மரணச் செய்தி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான ஒரு சம்பவத்திற்கு பின் வேலை-வாழ்க்கை பற்றிய விவாதத்தையும், நச்சு பணியிடங்கள் குறித்தும் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
சி.ஏ படித்த அன்னா செபாஸ்டியனின் தாயார் அனிதா MNC-யின் இந்தியா தலைவருக்கு தனது மகள் எவ்வளவு கனவுடன் இருந்தாள் என்பதை பகிர்ந்துள்ளார். ஆனால் பணியிடத்தில் உள்ள அதிகப்படியான வேலைப்பளுவும், மன அழுத்தமும் அவளை பெரிதளவில் பாதித்துவிட்டது. MNC-யில் சேர்ந்த நான்கு மாதத்திற்குள் அன்னா செபாஸ்டியன் திடீரென்று இறந்துவிட்டார். அனிதாவின் இந்த கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, MNC-யின் இந்தியா தலைவர், அண்ணாவின் பெற்றோருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார். மேலும் அனைவருக்கும் ஆரோக்கியமான பணியிடத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

இப்படிப்பட்டசூழ்நிலையில், உலகில் அதிக வேலை நேரம் கொண்ட டாப் 10 நாடுகள் எவை என்பதை பற்றி கீழே கொடுத்துள்ளோம். இதில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த பட்டியலானது சமீகத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) பகிர்ந்துள்ள தரவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
1. பூட்டான்
7 லட்சம் மக்கள்தொகையை பூட்டான் கொண்டிருந்தாலும், இந்நாட்டில் உள்ளவர்கள் அதிக வேலை நேரத்துடன் இந்த பட்டியலின் முதல் இடத்தில் உள்ளனர். பூட்டானில் உள்ள ஊழியர்கள் வாரத்திற்கு சுமார் 54.4 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.
2. UAE
இந்த பட்டியலில் அடுத்ததாக இருப்பது, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகும். இங்குள்ள ஊழியர்கள் தங்களின் பெருளாதாரத்திற்காக வாரத்திற்கு 50.9 மணிநேரம் வேலை செய்து வருகிறார்கள்.
3. லெசோதோ
லெசோதோவில் உள்ள மக்கள் ஒவ்வொருவரும் வாரத்திற்கு 50.4 மணிநேரம் வேலை செய்து வருகிறார்கள். இந்த லெசோதோ உலகில் அதிக வேலை நேரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது.
4. காங்கோ
இந்த பட்டியலில் நான்காவது இடத்தில் இருப்பது காங்கோ ஆகும். இங்குள்ள ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு சுமார் 48.6 மணிநேரம் வேலை செய்து வருகிறார்கள்.
5. கத்தார்
இந்த பட்டியலின் ஐந்தாவது இடத்தில் கத்தார் உள்ளது. இந்த கத்தாரில் வேலை செய்யும் ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு சராசரியாக 48 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.
6. லைபீரியா
ஆறாவதாக லைபீரியா உள்ளது. இந்த லைபீரியாவில் இருக்கும் ஊழியர்கள் ஒவ்வொரு வாரமும் 47.7 மணிநேரம் கடுமையாக வேலை செய்து வருகிறார்கள்.
7. மொரிட்டானியா
ஏதாவது இடத்தில் மொரிட்டானியா இடம் பெற்றுங்கள். இந்த மொரிட்டானியாவைச் சேர்ந்த ஊழியர்கள் வாரத்திற்கு 47.6 மணிநேரம் வேலை செய்து வருகிறார்கள்.
8. லெபனான்
இந்த பட்டியலின் 8 ஆவது இடத்தில் லெபனான் உள்ளது. இந்த லெபனானில் பணி செய்து கொண்டிருப்பவர்கள் ஒரு வாரத்திற்கு சராசரியாக 47.6 மணிநேரம் வே செய்கிறார்கள்.
9. மங்கோலியா
ஒன்பதாவது இடத்தில் மங்கோலியா இடம் பெற்றுள்ளது. இந்த மங்கோலியாவில் உள்ள ஊழியர்கள் வாரத்திற்கு 47.3 மணிநேரம் பணிபுரிகிறார்கள்.
10. ஜோர்டான்
கடைசியாக இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பது ஜோர்டான். இந்த பகுதியில் வசிக்கும் ஊழியர்கள் வாரத்திற்கு 47 மணிநேரம் வேலை செய்து வருகிறார்கள்.
இந்தியாவில் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்கள்?
ILO-வின் தரவுகளின் படி, இந்தியாவில் மக்கள் சராசரியாக ஒவ்வொரு மாதமும் 46.7 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அதுவும் இந்தியாவின் 51 சதவீத ஊழியர்கள் வாரத்திற்கு 49 மணிநேரம் வேலை செய்வதாக தரவுகளில் தெரிய வந்துள்ளன. இதைக் கொண்டு பார்க்கும் போது, பூட்டானுக்கு அடுத்தப்படியாக அதிக வேலை நேரம் கொண்ட இரண்டாவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.



Click it and Unblock the Notifications











