Latest Updates
-
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...! -
முட்டையை இந்த மாதிரி பொரியல் செஞ்சு பாருங்க... டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்... ஆரோக்கியமாவும் இருக்கும்...! -
மூன்றாம் உலகப்போர் வந்தாலும் இந்த நாடுகளில் மக்கள் பாதுகாப்பாக இருப்பார்களாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? -
100 ஆண்டுக்கு பின் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறதாம்...! -
கலகத்தை உருவாக்குவதற்காகவே பிறந்த 4 ராசிக்காரங்க இவங்கதான்...ரொம்ப ஆபத்தானவங்க இவங்க...உங்க ராசி இதுல இருக்கா? -
3 கத்திரிக்காய் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செம சூப்பரா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 04 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்...!
ஊழல் இல்லாத உலகின் டாப் 10 சிறந்த நாடுகள்... இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!
ஊழல் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இருக்கும் மிகப்பெரிய தடைக்கல்லாகும். ஊழல் ஒரு நாட்டின் மக்களுக்கு அதன் அரசாங்கம் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது, அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மக்களின் பணத்தைத் திருட வைக்கிறது. ஊழல் மிகுந்த ஒரு நாடு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்தவர்களுக்கும், செல்வந்தர்களுக்கும் மட்டுமே பயனளிக்கும் நியாயமற்ற முடிவுகளை ஊக்குவிக்கிறது.
ஊழல் மிகுந்த அனைத்து நாடுகளிலும் இருக்கும் ஒரு பொதுவான விஷயம் என்னவெனில் அந்த நாட்டில் எப்போதும் சட்டங்கள் சாதாரண மக்களுக்கு எதிராகவே இருக்கும், அங்கு பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளாகவே இருப்பார்கள். இதனால் பொதுமக்கள் சம வாய்ப்புகள், நீதி மற்றும் தரமான பொது சேவைகளைப் பெற முடிவதில்லை.

விதிவிலக்காக குறைந்த அல்லது ஏறக்குறைய ஊழலற்ற நாடுகள் வெளிப்படைத்தன்மை, நேர்மை மற்றும் சமத்துவத்தை நோக்கிச் செல்கின்றன. அத்தகைய நாடுகளில் கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு போன்றவை மக்களுக்கு எளிதில் கிடைக்கின்றன, மேலும் லஞ்சம் அல்லது அதிகார துஷ்பிரயோகம் மூலம் மக்களின் பணத்தை திருடுவது மிகவும் கடினமாக இருக்கும். இப்படிப்பட்ட நாடுகள் இருக்கிறதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் உலகில் ஊழல் குறைவாக உள்ள சில நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இந்த பதிவில் ஊழல் உணர்வுக் குறியீட்டின் அடிப்படையில் ஊழல் குறைவாக உள்ள நாடுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
டென்மார்க்
Corruption Perception Index அறிக்கையில் 90 மதிப்பெண்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது டென்மார்க். டென்மார்க் அதன் கடுமையான சட்டங்கள், வெளிப்படையான நிர்வாகம் மற்றும் வலுவான பொது நம்பிக்கை காரணமாக, ஊழல் மிகவும் குறைந்த நாடாகத் திகழ்கிறது. இந்த நாட்டில் அதிகாரிகள் தங்கள் செயல்களுக்குப் பொறுப்புக் கூற கடமைப்பட்டவர்கள், மேலும் அரசியல் முடிவுகளைப் பொதுமக்கள் மதிப்பாய்வு செய்யலாம். இங்கு குடிமக்கள் அனைவரும் சேவைகளை சமமாகப் பெறும் வாய்ப்பு இருப்பதால், லஞ்சம் அல்லது பாரபட்சம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகின்றன.
பின்லாந்து
அரசின் நேர்மையான செயல்பாடுகள் மற்றும் அனைவருக்கும் சம உரிமைகள் காரணமாக, ஊழலற்ற தூய்மையான நாடுகளில் 88 மதிப்பெண்களுடன் பின்லாந்து இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு ஊடகங்கள் சுதந்திரமாகப் பேச முடியும், மேலும் தவறுகளை அம்பலப்படுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. பின்லாந்தின் மக்கள் நலத்திட்டக் கொள்கைகள் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்குப் பங்களிக்கின்றன, இது ஊழலுக்கான வாய்ப்பை வெகுவாகக் குறைக்கிறது.
சிங்கப்பூர்
ஊழலுக்கு எதிரான சிங்கப்பூரின் கடுமையான விதிகளும், லஞ்சம் வாங்குபவர்களுக்கான கடுமையான தண்டனைகளும், 84 மதிப்பெண்களுடன் அந்நாட்டை உலகிலேயே மிகக் குறைந்த ஊழல் கொண்ட நாடுகளில் மூன்றாவது இடத்தில் வைத்திருக்க உதவுகின்றன. இங்கு அரசாங்கம் செல்வாக்கின் அடிப்படையில் அல்லாமல், திறமையின் அடிப்படையிலேயே ஊழியர்களைப் பணியமர்த்துகிறது. இங்கு ஊழியர்களுக்கு நல்ல ஊதியம் வழங்கப்படுவதும், லஞ்சம் வாங்குவது அல்லது தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது போன்ற எண்ணங்கள் அவர்களுக்கு ஏற்படாமல் தடுக்கிறது.
நியூசிலாந்து
83 மதிப்பெண்கள் பெற்றுள்ள நியூசிலாந்து அனைத்து அரசியல் மற்றும் நிதி பரிவர்த்தனைகளிலும் சமத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அரசாங்கம் மக்களுடன் இணைந்து செயல்படுகிறது, வெளிப்படையான தொடர்பு மற்றும் சமூகப் பங்கேற்பை ஊக்குவிக்கிறது. வலுவான சட்டக் கட்டமைப்புகள் மூலம் லஞ்சம் தடுக்கப்படுகிறது, மேலும் ஊழல்களை வெளிக்கொண்டு வருபவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.
சுவிட்சர்லாந்து
81 மதிப்பெண்களுடன் சுவிட்சர்லாந்து தனது அரசியல் தலைவர்களைக் கடுமையான விதிகளுடனும், வெளிப்படையான வங்கி அமைப்புடனும் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இங்குள்ள குடிமக்கள் பொது வாக்கெடுப்புகள் மூலம் முடிவெடுப்பதில் நேரடியாகப் பங்கேற்கின்றனர், இது அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கிறது. நாட்டின் பணப் பரிவர்த்தனைகள் மீதான கடுமையான கண்காணிப்பு, பணமோசடி நடவடிக்கைகளையும், அனைத்து மட்டங்களிலும் நடைபெறும் ஊழலையும் குறைக்க உதவுகிறது.
நார்வே
பொது மக்களின் நம்பிக்கை, நேர்மை மற்றும் ஒரு உறுதியான ஜனநாயகக் கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் நார்வே ஊழலை எதிர்த்துப் போராடுகிறது. இங்குள்ள அரசாங்கம் பொதுப் பணத்தை வெளிப்படையாகச் செலவிடுகிறது, எனவே தங்களின் வரிப் பணம் எப்படி செலவிடப்படுகிறது என்பதை மக்கள் எளிதாகக் காண முடிகிறது. பெரும்பாலான பணிகள் டிஜிட்டல் சேவைகள் மூலம் கையாளப்படுவதால், நேரடித் தொடர்பு குறைவாக உள்ளது, இது லஞ்சத்திற்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது.
லக்சம்பர்க்
லக்சம்பர்க், வங்கிகளை உன்னிப்பாகக் கண்காணிப்பதன் மூலமும், நேர்மையான வர்த்தக விதிகளை ஊக்குவிப்பதன் மூலமும் குறைந்த அளவிலான ஊழலைப் பேணி வருகிறது. லக்சம்பர்க்கின் குறைவான மக்கள் தொகை அதிகாரிகளுக்குக் கண்காணிப்பை எளிதாக்குகிறது. நிறுவனங்களும், அரசாங்க ஊழியர்களும் கடுமையான ஒழுக்க நெறிமுறைகளைப் பின்பற்றுகின்றனர், இது பாரபட்சம் அல்லது ஊழல் நடைமுறைகளைக் கட்டுப்படுத்துகிறது.
ஸ்வீடன்
80 மதிப்பெண்கள் பெற்றுள்ள ஸ்வீடனின் ஊழலற்ற நேர்மையான ஆட்சி, சமூக சமத்துவம் மற்றும் வெளிப்படையான பொது நிர்வாகக் கொள்கைகளிலிருந்து உருவாகிறது. இங்கு அதிகாரப்பூர்வ தரவுகளை அணுகுவது மிகவும் எளிது என்பதால், முறைகேடுகள் ரகசியமாக நடப்பது அரிது. அரசாங்கத்தில் பணிபுரிபவர்கள் அனைவருக்கும் நன்மை பயக்கும் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். கடுமையான தண்டனைகள் இருப்பதால், இது ஊழல் நடவடிக்கைகளை பெருமளவில் குறைக்கிறது.
நெதர்லாந்து
78 மதிப்பெண்கள் பெற்றுள்ள நெதர்லாந்தின் வெளிப்படையான அரசாங்கம், கடுமையான விதிகளுடன் சேர்ந்து, வெளிப்படைத்தன்மையையும் ஊழல் தடுப்பையும் ஊக்குவிக்கிறது. நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள பத்திரிகை சுதந்திரத்தின் காரணமாக, ஊடகங்களால் நெறிமுறையற்ற செயல்களை விசாரிக்க முடிகிறது. லஞ்சத்திற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் டிஜிட்டல் அமைப்புகளில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
ஆஸ்திரேலியா
77 மதிப்பெண்களுடன் ஆஸ்திரேலியா பத்தாவது இடத்தில் உள்ளது. இதற்கு காரணம், அரசாங்கத்தின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கண்காணிக்கும் அதன் சுதந்திரமான ஊழல் எதிர்ப்பு அமைப்புகளே ஆகும். தலைவர்கள் பொதுமக்களாலும், ஊடகங்களாலும் கேள்வி கேட்கப்படுவதற்கு சுதந்திரம் உள்ளது, இது அதிகார துஷ்பிரயோகத்தைத் தடுக்கிறது. வலுவான சட்டக் கட்டமைப்பு மற்றும் பொறுப்புக்கூறல் விதிமுறைகள் மூலம் பொதுமக்களின் நம்பிக்கை பாதுகாக்கப்படுகிறது.
இந்தியாவின் நிலை என்ன?
இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும் மிதமானது முதல் உயர் மட்டத்திலான ஊழலை எதிர்கொண்டு வருகின்றன. இந்தியா 2025-ஆம் ஆண்டில் 38 மதிப்பெண்களுடன் 96-வது இடத்தில் உள்ளது. இது நம் நாட்டில் ஊழல் எப்படி பொதுமக்களை பாதிக்கிறது என்பதையும், ஊழல் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்துறது. அண்டை நாடான சீனா 43 மதிப்பெண்களுடன் 76-வது இடத்தில் உள்ளது, பாகிஸ்தான் 27 மதிப்பெண்களுடன் 135-வது இடத்தில் உள்ளது.



Click it and Unblock the Notifications












