ஆங்கிலேயர்களை போரில் ராக்கெட்களை வைத்து ஓட ஓட விரட்டிய சக்திவாய்ந்த தென்னிந்திய அரசர் யார் தெரியுமா?

உலகம உருவான காலம் முதலே போர்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆரம்ப காலங்களில் கத்தி மற்றும் ஈட்டி கொண்டு நடத்தப்பட்ட போர்கள் நாளடைவில் துப்பாக்கிகள் மூலம் பரிணாம வளர்ச்சி அடைந்தது . ஆங்கிலேயர்கள் உலகம் முழுவதும் பல நாடுகளை ஆக்கிரமிக்க காரணமாக இருந்தது துப்பாக்கிதான். துப்பாக்கிகளுக்கு பின் போர்க்களத்தில் புரட்சியை ஏற்படுத்தியது ஏவுகணைகள்தான்.

தற்போது இந்தியாவிடம் உலகின் பல சக்திவாய்ந்த ஏவுகணைகள் உள்ளன, ஏவுகணைகள் தற்போது இந்தியா மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளிலும் புரட்சிகரமான தொழில்நுட்பமாக இருந்து வருகின்றன. ஆனால் ஏவுகணைகளை முதலில் பயன்படுத்தியது ஒரு தென்னிந்திய அரசர்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

Tipu Sultan The Only Indian King Who Fought Against British With Rockets

மைசூரைச் சேர்ந்த திப்பு சுல்தான் ஆங்கிலேயர்களுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு உறை கொண்ட ராக்கெட்டுகள் போன்ற புதுமையான ஆயுதங்களைப் பயன்படுத்தினார், அவை அந்த காலகட்டத்திலேயே மிகவும் நவீனமயமான ஆயுதங்களாக இருந்தது, அவை ஆங்கிலேயர்கள் உட்பட அவரை எதிர்த்த அனைவருக்கும் பயங்கர சேதத்தை ஏற்படுத்தியது.

உலகின் முதல் இரும்பு உறை ஏவுகணையை கண்டுபிடித்தது யார்?

18 ஆம் நூற்றாண்டில், மைசூரின் ஆட்சியாளர் திப்பு சுல்தான், அவரது தந்தை ஹைதர் அலியுடன் சேர்ந்து, முதல் இரும்பு உறை ராக்கெட்டுகளை உருவாக்கினார். இது ஆங்கிலேயர்களுக்கு ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த ராக்கெட்டுகள் மைசூரியன் ராக்கெட்டுகள் என்று அறியப்பட்டன, மேலும் இந்திய போர் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தின.

திப்பு சுல்தானின் கண்டுபிடிப்புகளால், 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மைசூர் இராஜ்ஜியம் பெரும் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அடைந்தது. அவரது ராக்கெட்டுகள் அந்த நேரத்தில் ஐரோப்பாவின் ராக்கெட்டுகளை விட சிறந்தவையாக இருந்தது.

இரும்பு உறை ராக்கெட்

தாக்குதல் நடத்தப்படும் ராக்கெட்டுகளுக்கு அட்டை உறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, மைசூர் இராஜ்ஜியம் உந்துசக்திக்காக இரும்புக் குழாய்களைக் கொண்ட ராக்கெட்டுகளை உருவாக்கியது, இது ராக்கெட்டுகள் அதிக அழுத்தத்தைத் தாங்கும் மற்றும் 2 கிலோமீட்டருக்கும் அதிகமான பறக்கும் சக்தி கொண்டதாக மாற்றியது. இரும்புக் குழாய் உந்துசக்தி ராக்கெட்டுகள் நீண்ட மூங்கில் கம்பங்களுடன் இணைக்கப்பட்டன, இது ஏவுகணை பறக்கும் போது மேம்பட்ட காற்றியக்கவியல் மற்றும் நிலைத்தன்மையை வழங்கியது மற்றும் துல்லியத்தையும் மேம்படுத்தியது.

எப்போது முதல் முறை பயன்படுத்தப்பட்டது?

தியுபு சுல்தான் மற்றும் அவரது தந்தை ஹைதர் அலி, ஆங்கிலேயர்களுடன் நடத்திய பல போர்களில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக இந்த ராக்கெட்டுகளைப் பயன்படுத்தினர். இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட மிகவும் பிரபலமான போர்களில் ஒன்று 1780 ஆம் ஆண்டு பொள்ளிலூர் போர், இந்த போரில் இரும்பு-உறை ராக்கெட்டுகள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டன. இந்த புதுவகை ஆயுதத்தை ஒருபோதும் எதிர்கொள்ளாத பிரிட்டிஷ் படைகளுக்கு இவை பேரழிவையும், கடுமையான சேதத்தையும் ஏற்படுத்தின.

ராக்கெட்டின் சக்தியில் உறுதியான இரும்பு உறை ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. இது ராக்கெட்டின் உந்துவிசை மற்றும் தூரத்தை அதிகரிக்க உறையில் அதிக அளவு வெடிமருந்தை நிரப்ப உதவியது. உறையுடன் இணைக்கப்பட்டிருந்த மூங்கில் குச்சிகள் துடுப்புகளாகச் செயல்பட்டன, அவை ராக்கெட்டை பறக்கும்போது நிலைப்படுத்தின.

எந்தெந்த போர்களில் பயன்படுத்தப்பட்டது?

இந்த ராக்கெட்டுகள் முக்கியமாக பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன. திப்பு சுல்தான் தனது இந்திய எதிரிகளான மராட்டியர்கள் மற்றும் ஹைதராபாத்தின் நிஜாம் போன்றவர்களுக்கு எதிரான போரிலும் அவற்றைப் பயன்படுத்தினார். நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரின் போது, ​​திப்பு சுல்தான் தனது தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்தைப் பாதுகாக்க இந்த ராக்கெட்டுகளைப் பயன்படுத்தினார்.

Desktop Bottom Promotion