Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
சனிக்கிழமை இந்த விஷயங்களை பண்ணுனா இல்லனா பொருட்களை வாங்குனா நீங்க சனிபகவானின் சாபத்திற்கு ஆளாவீர்களாம்...!
சனிக்கிழமை சனிபகவானுக்குரிய நாளாக கருதப்படுகிறது. சனி பகவானின் மோசமான தாக்கங்களைத் தவிர்க்க மக்கள் பல விஷயங்களைச் செய்கிறார்கள். சிலர் சனிபகவானின் ஆசியைப் பெற விரதம் கடைப்பிடிக்கிறார்கள், சிலர் பல பொருட்களை தானம் செய்கிறார்கள்.
அதேசமயம் சனிபகவானின் கோபத்தைத் தவிர்க்க, சனிக்கிழமைகளில் சில விஷயங்களை செய்வதைத் தவிர்க்க வேண்டும். எனவே ஜோதிட சாஸ்திரப்படி சனிக்கிழமையன்று தவிர்க்க வேண்டியவைவிஷயங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உங்கள் துரதிர்ஷ்டத்தைத் தவிர்த்து ராஜயோகத்தைக் கொடுக்கும்.

சனிபகவானின் கோபத்திற்கு ஆளானவர்கள் அசுபங்கள் மற்றும் இழப்புகளுக்கு ஆளாவார்கள் என்று மக்கள் நம்புகிறார்கள். முக்கியமாக, இது ஒரு நபரின் கர்மாவைப் பொறுத்து அவரைத் தண்டித்து, ஒழுக்கம் மற்றும் கவனத்துடன் வாழ்க்கையை நடத்த அனுமதிக்கிறது.
அதேசமயம் சனிபகவானின் ஆசியைப் பெற்றவர்கள் அபரிமிதமான வெற்றிகளையும் பொருள்சார் வசதிகளையும் பெறுவார்கள். இந்த பதிவில் சனிபகவானின் கோபத்தைத் தவிர்க்க சனிக்கிழமை செய்யக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
மது அருந்தக்கூடாது
சனிக்கிழமையன்று மது அருந்துவதை அவசியம் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது வாழ்க்கையில் தேவையற்ற பிரச்சினைகள் மற்றும் சிக்கல்களை வரவேற்கிறது. மேலும், தங்கள் ஜாதகத்தில் சனி தோஷம் இருப்பவர்களுக்கு இது மிகவும் தீங்கு விளைவிப்பதாக கருதப்படுகிறது.
பயணம்
வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் பயணிக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. குறிப்பாக, ஜோதிட சாஸ்திரத்தின்படி, கிழக்கு திசையில் செல்வது உங்களுக்கு நன்மையை அளிக்கும். அப்படிச் செய்தால், நீங்கள் இஞ்சியைச் சாப்பிட்டு, பின்னோக்கி 5 அடி நடக்க வேண்டும்.
நகம் வெட்டக்கூடாது
பெண்கள் இந்த நாளில் நகம் வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும், அதேசமயம் முடியையும் ஒருபோதும் வெட்டக்கூடாது. இந்த சனிபகவானின் கோபத்தை அதிகரித்து தீராத துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும்.
எண்ணெய் மற்றும் தோல் பொருட்களை வாங்கக்கூடாது
சனிக்கிழமையன்று தவிர்க்க வேண்டிய விஷயங்களில் முக்கியமானது, எண்ணெய் மற்றும் தோல் பொருட்களை வாங்குவது. இந்த பொருட்களை வாங்கினால் உங்களின் கடன் அதிகரிக்கும் மற்றும் வாழ்க்கையில் நிம்மதி குறையும்.
பால் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்
பால், தயிர் மற்றும் பிற பால் பொருட்களை சனிக்கிழமை அன்று உட்கொள்ளக்கூடாது. இருப்பினும், இந்த பொருட்களை சாப்பிட்டால், அதில் மஞ்சள் அல்லது சிறிது வெல்லம் சேர்க்க வேண்டும். மேலும் ஊறுகாய், கத்தரிக்காய் மற்றும் சிவப்பு மிளகாய் ஆகியவற்றை சாப்பிடக்கூடாது.
இரும்புப் பொருட்கள்
சாஸ்திரங்களின்படி, ஒருமுறை மன்னர் விக்ரமாதித்யா சனி பகவானுக்கு இரும்பு சிம்மாசனம் கொடுத்தார், இதனால் சனிபகவான் கோபமடைந்து அவர் மீது கோபம் கொண்டார். அன்றிலிருந்து சனிக்கிழமையன்று இரும்பை வாங்குவது அசுபமானது என்று நம்பப்படுகிறது, மாறாக, அதை தானம் செய்வது சனியை மகிழ்விப்பதோடு, உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
கரிக்கட்டை
இந்த நாளில் கரிக்கட்டையை வீட்டிற்குள் கொண்டு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது. இது கருப்பு நிறத்தில் இருப்பதால், அதை வீட்டிற்குள் எடுத்துச் செல்வதால், சனியின் வடிவத்தை உங்கள் வீட்டிற்கு கொண்டு வருகிறீர்கள் என்று நம்பப்படுகிறது. மேலும் இது ஒரு வகையான எரிபொருள். சனிக்கிழமையன்று எரிபொருளை வீட்டிற்குள் கொண்டு வரக்கூடாது, அது பதற்றத்தை உருவாக்கும்.
துடைப்பம்
இந்த நாளில் துடைப்பம் வாங்கக்கூடாது. சனிக்கிழமையில் வீட்டிற்கு கொண்டு வரப்படும் துடைப்பம் வீட்டின் செல்வத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
உப்பு
இந்த நாளில் உப்பு வாங்குவதை அவசியம் தவிர்க்க வேண்டும். சனிக்கிழமையன்று வாங்கிய உப்பு வீட்டிற்குள் நோய் வரவழைக்கும்.



Click it and Unblock the Notifications












