இந்த ராசியினர் திருப்பதிக்கு சென்றால் வாழக்கையில் எல்லாமே கிடைக்குமாம்.. இதில் உங்க ராசி உள்ளதா?

திருப்பதி ஏழுமலையானை தரிசித்து வர வாழ்க்கையில் பல மாற்றங்கள் நடக்கும் என்பார்கள். அதாவது திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் திருப்பம் அமையும் என்ற பழமொழி எல்லாம் இருக்கிறது.

அப்படியாக அந்த ஏழுமலையானை குறிப்பிட சில ராசிக்காரர்கள் அடிக்கடி சென்று சுவாமி தரிசனம் செய்துவந்தால் அவர்களது வாழ்க்கையில் அனைத்து செல்வமும் சேரும் என்பது ஐதீகம்.. அது எந்தெந்த ராசியினர் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

these Rasi People are lucky if they went tirupati temple

பொதுவாகவே ஒருவருடைய ஜாதக கட்டத்தில் சந்திரன் சரியான இடத்தில் அமைந்து விட்டால், அவர் கட்டாயம் யோககாரனாகத்தான் இருக்க முடியும். நம்முடைய இந்தியாவில், சந்திரனின் தாக்கம் அதிகமாக இருக்கும் பகுதி திருப்பதி மலைதான். அதாவது சந்திரனின் ஒளிக்கதிர்கள் அதிகமாகப்படும் இடம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் இங்கு செல்வவளம் எப்போதும் நிறைந்திருக்கின்றது. இதனால்தான் திருப்பதியில் செல்வம் கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.

எந்தெந்த ராசியினர் அடிக்கடி திருப்பதிக்கு போகலாம்

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய லக்னங்களை கொண்ட ராசிக்காரர்கள் திருப்பதிக்கு எப்போது வேண்டுமானாலும் சென்று தரிசனம் செய்யலாம். முடிந்தால் அங்கேயே தங்கிக் கொண்டு சாமி தரிசனம் செய்து வரலாம்.. . இவர்கள் எப்போதெல்லாம் திருப்பதிக்கு செல்கிறார்களோ அப்போதெல்லாம் நிச்சயம் அவர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

எந்தெந்த ராசியினர் அடிக்கடி திருப்பதிக்கு போகக்கூடாது

பணப்பிரச்சனை உள்ளவர்கள் தமிழ் மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தால் வருட இறுதிக்குள் கோடீஸ்வரர்கள் ஆவர் என்பது நம்பிக்கை. திருப்பதி யாத்திரையால் வாழ்வில் வளம் பெருகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கை. ஆனால் இந்த 3 ராசிக்காரர்களும் திருப்பதிக்கு செல்லக்கூடாது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. அப்படி, போனால் கடனாளிகள் ஆகிவிடுவார்கள். அந்த ராசிகள் சிம்மம், தனுசு மற்றும் கும்பம். இந்த ராசியை தவிர மற்ற 9 ராசிக்காரர்கள் எப்போது வேண்டுமானாலும் திருப்பதி செல்லலாம்.

இது தவிர பூரம் நட்சத்திரம் , துலாம் லக்னம் ஆகியவற்றில் பிறந்தவர்களும் திருப்பதிக்கு போகக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது. இந்த 3 ராசிக்காரர்களும் பொதுவாக சந்திரனால் பாதிக்கப்படுவதாக சாஸ்திரம் கூறுகிறது. ஜோதிடத்தில் சூரியன் தந்தையாகவும், சந்திரன் பெண் கிரகமாகவும் கருதப்படுகிறது. கடக ராசியின் அதிபதி சந்திரன். ரோகிணி, அஸ்தம் மற்றும் திருவோணம் சந்திரனின் நட்சத்திரங்கள்.

இதில் சிம்மம், தனுசு, கும்பம் ஆகியன சந்திர பலம் நிறைந்த ராசிகள். அதனால் இவர்கள் திருப்பதிக்கு செல்வதால் சந்திரனின் நிலை பாதிக்கப்படும். அதனால்தான் இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி செல்லக் கூடாது என சொல்லப்படுகிறது.

வியாழக்கிழமைகளில் திருப்பதி சென்றால் எளிய சேவையான பஞ்சகட்சம், துளசி மாலை அணிந்துள்ள பெருமாளை சந்தித்தால் கோடி புண்ணியம் உண்டாகுமாம்..

Story first published: Monday, July 8, 2024, 12:29 [IST]
Desktop Bottom Promotion