Latest Updates
-
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க...
மட்டன் கொழம்புல எலும்பு இல்லனு கல்யாணத்தையே நிறுத்திய மாப்பிள்ளை... இதுக்கெலாமா கல்யாணத்தை நிறுத்துறது...!
'ஓடு விழுந்து ஒரு நாடு பிரிந்தது' என்று நம் கிராமப்புறங்களில் ஒரு நகைச்சுவையான பழமொழி கூறுவார்கள். அதாவது ஒரு சிறிய காரணம் ஒரு மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதாகும். திரைப்படங்களில் இதுபோல நகைச்சுவையான காட்சிகள் பலவற்றை நாம் பார்த்திருப்போம். ஆனால் இப்படி ஒரு சாதாரண காரணத்திற்காக ஒரு திருமணமே நின்ற கொடுமையான சம்பவம் நமது பக்கத்து மாநிலமான தெலுங்கானாவில் நடந்துள்ளது.
சமீபத்தில் வெளியான தெலுங்குப் படமான 'பாலகம்' படத்தின் பிரபலமான காட்சியைப் போன்ற சூழ்நிலை உருவானதையடுத்து, மணமக்கள் மற்றும் மணமகன் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் நடக்கவிருந்த திருமணமே நிறுத்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த திரைப்படத்தின் காட்சியில், ஆட்டிறைச்சியில் எலும்பு மஜ்ஜை விவகாரத்தில் மணமகனுக்கும் மணமகளின் தம்பிக்கும் இடையே தகராறு ஏற்படுவதால் திருமணம் நிறுத்தப்படும். தமிழ் சினிமாவிலும் பிரியாணியில் பீஸ் இல்லை என்பதற்காக சண்டை நடக்கும் காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம்.
நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த மணமகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஜக்தியால் மாவட்டத்தைச் சேர்ந்த மணமகன் குடும்ப உறுப்பினர்கள் இருவரும் திருமணத்தை நடத்த முடிவு செய்திருந்தனர், அதற்காக சமீபத்தில் மணமகளின் இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது.
திருமணத்தை பாரம்பரியமாகவும் ஆடம்பரமாகவும் நடத்த இரு வீட்டாரும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மணமகளின் குடும்பத்தினர், மணமகனின் உறவினர்களுக்கு தடபுடலாக அசைவ உணவு ஏற்பாடு செய்தனர்.
எல்லாம் சுமூகமாக நடந்து கொண்டிருந்த போது, திடீரென விருந்தினர்கள் அசைவ உணவில் ஆட்டிறைச்சியின் எலும்பு மஜ்ஜை வழங்கப்படவில்லை என்று வாதிட்டனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, மணமகள் வீட்டைச் சேர்ந்தவர்கள் உணவுகளில் எலும்பு மஜ்ஜை சேர்க்கவில்லை என்று தெளிவுபடுத்தினர், இது இறுதியில் இரு தரப்பினருக்கும் இடையே சண்டைக்கு வழிவகுத்தது.
விரைவில், இந்த பிரச்சினை உள்ளூர் காவல் நிலையத்தை எட்டியது மற்றும் எலும்பு மஜ்ஜை பிரச்சினை தொடர்பாக மணமகன் தரப்பை சமாதானப்படுத்த அதிகாரிகள் முயன்றனர். இருப்பினும், மணமகளின் குடும்பத்தினர் அசைவ உணவுகளில் எலும்பு மஜ்ஜை வழங்காமல் தங்களை அவமானப்படுத்தியதாக அவர்கள் வாதிட்டனர்.
மணப்பெண்ணின் குடும்பத்தினரும் இது குறித்து தங்களுக்கு முன்பே தெரிவிக்கப்படவில்லை என்றும், இதனால் உணவில் எலும்பு மஜ்ஜை சேர்க்கப்படவில்லை என்றும் வாதிட்டனர்.
இறுதியில், இருதரப்பினரும் தங்கள் சொந்த ஊருக்குச் சென்றதைத் தொடர்ந்து, ஒரு சாதாரண எலும்பு பிரச்சினை திருமணத்தையே நிறுத்த காரணமாகியதைக்க் கண்டு போலீசாரும் உள்ளூர் மக்களும் ஆச்சரியப்பட்டனர்.



Click it and Unblock the Notifications












