Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
சித்திரை கனி காணுதல் என்றால் என்ன? அதில் என்னென்ன பழங்களை வைக்க வேண்டும்?
Tamil New Year 2023: தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் சூரியனின் ராசி மாற்றத்தின் போது பிறக்கின்றன. அதில் சூரியன் மேஷ ராசிக்கு வரும் போது தான் 12 தமிழ் மாதங்களின் முதலாவது மாதமான சித்திரை மாதம் பிறக்கிறது. இந்த சித்திரை மாதம் பிறக்கும் போது தான் தமிழ் புத்தாண்டு பிறக்கின்றன. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் 14 ஆம் தேதி சோபகிருது வருடம் பிறக்கிறது. இந்த புதிய ஆண்டின் முதல் நாளில் கனி காணுதல் என்னும் வழக்கம் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கனி காணுதல் என்றால் என்ன? இந்த கனி காணுதல் எதனால் மேற்கொள்ளப்படுகிறது, கனி காணுதலில் என்னென்ன வைக்க வேண்டும் என்பன பற்றி பலருக்கும் சரியாக தெரியாமல் இருக்கலாம். குறிப்பாக இன்றைய தலைமுறையினருக்கு எதனால் கனி காணுதல் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இப்போது இதுக்குறித்து விரிவாக காண்போம்.

தமிழ் புத்தாண்டின் முதல் நாளில் கடைபிடிக்கப்படும் கனி காணுதல் நிகழ்வை சித்திரை கனி என்றும் அழைப்பார்கள். இது புத்தாண்டின் அதிகாலையில் எழுந்ததும் கனிகள், பணம், நகைகள் போன்றவற்றை கண்ணாடியில் பார்க்கும் ஒரு சாஸ்திரம் ஆகும். இப்படி புத்தாண்டு அன்று எழுந்ததும் முதன்முதலாக இவற்றை காணும் போது, அந்த புத்தாண்டு மிகவும் இனிமையாகவும், செழிப்பான ஆண்டாகவும் இருக்கும் என்பது நம்பிக்கை.
கனி காணுதல் தட்டில் என்னென்ன வைக்க வேண்டும்?
புத்தாண்டின் முதல் நாள் பூஜை அறையை சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறையில் உள்ள கடவுள்களின் போட்டோக்களை துடைத்துவிட்டு, மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பின்பு இரவு தூங்குவதற்கு முன் ஒரு கண்ணாடியை எடுத்து, அதை துடைத்துவிட்டு, அதன் ஓரங்களில் மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பெரிய தாம்பூலத் தட்டை எடுத்து, அதில் மா, பலா, வாழை, ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை என ஒற்றை படை எண்ணில் பழங்களை அடுக்கி வைக்க வேண்டும். பின்பு சிறு சிறு கிண்ணங்களை எடுத்து, ஒவ்வொன்றிலும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, கல் உப்பு ஆகியவற்றை தலைதட்டாமல் வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு வெற்றிலை பாக்கு, மஞ்சள் கிழங்கு, வளையல் ஆகியவற்றையும் தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். பின் சிறு கிண்ணத்தில் நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை வைத்தக் கொள்ளுங்கள். வீட்டில் அன்னப்பூரணி சிலை இருந்தால், அரிசியின் மேல் அந்த சிலையை வையுங்கள். மேலும் வீட்டில் உள்ள நகைகளையும் தட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
பின்பு ஒரு சிறிய பித்தளை அல்லது செம்பு சொம்பை எடுத்து, அதில் நீரை நிரப்பி, அதில் சிறிது பூக்களைத் தூவி, பச்சை கற்பூரத்தை சிறிது தூவி, மேலே மாவிலை மற்றும் தேங்காயை வைத்து கலசத்தை தயாரித்து, அவற்றையும் தட்டிற்கு அருகே வைக்க வேண்டும். பின் இந்த பொருட்கள் அனைத்தும் கண்ணாடியில் தெரியும்படி கண்ணாடியை எதிரே வைக்க வேண்டும். இவை அனைத்தையும் புத்தாண்டிற்கு முதல் நாள் இரவு தூங்குவதற்கு முன்னரே தயார் செய்து விட்டு தூங்க செல்ல வேண்டும்.
புத்தாண்டு அன்று வீட்டின் மூத்த பெண் அதிகாலையில் எழுந்ததும், முதலில் அந்த கண்ணாடியை வழியே இவை அனைத்தையும் பார்க்க வேண்டும். பின் குளித்துவிட்டு வந்து, வீட்டில் உள்ளோர் ஒவ்வொருவரையும் அழைத்து வந்து, இவற்றை காண்பிக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் இதை பார்த்த பின், ஒரு பிரசாதத்தை செய்து, கடவுளுக்கு படைத்து, ஆரத்தி காண்பித்து பூஜையை முடிக்க வேண்டும். இந்த பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவரும் உட்கொள்ள வேண்டும். மேலே கொடுக்கப்பட்டுள்ளவாறு வருகிற சோபகிருது புத்தாண்டின் முதல் நாளில் செய்து, தமிழ் புத்தாண்டை சிறப்பாக தொடங்குங்கள்.



Click it and Unblock the Notifications