Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
30 ஆண்டுகளுக்கு பின் ஒரே வேளையில் உருவாகியுள்ள சச-மாளவ்ய ராஜயோகம்: பண மழையில் நனையும் ராசிகள்!
Shasha-Malavya Rajyoga To Form After 30 Years: வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். சில சமயங்களில் ஒன்றிற்கு மேற்பட்ட கிரகங்கள் ஒரே ராசியில் பயணிக்கும் போது, அது சுப யோகங்களை உருவாக்கி மனித வாழ்க்கையில் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில், சச மற்றும் மாளவ்ய ஆகிய இரண்டு விதமான மங்களகரமான ராஜயோகங்கள் சனி மற்றும் சுக்கிரனால் தற்போது உருவாகியுள்ளன. அதுவும் சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் இவ்விரு ராஜயோகங்களும் ஒரே வேளையில் உருவாகியுள்ளன.

இந்த இரண்டு ராஜயோகங்களின் தாக்கமானது 12 ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகங்கள் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்களானது மிதுன ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வழங்கும். முக்கியமாக இக்காலத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழிலைப் பொறுத்தவரை, நல்ல முன்னேற்றத்தைக் காண்பதோடு, இலக்குகளை எளிதில் அடைவீர்கள். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும் மற்றும் உயர் அதிகாரிகள் உங்களின் செயல்திறனால் ஈர்ப்படுவார்கள். சிலருக்கு இக்காலத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இவ்விரு யோகங்களால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். சிலருக்கு சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறப்பாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்களானது சிறப்பான நற்பலன்களை வழங்கும். பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறலாம். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணப் பிரச்சனை என்பதே இருக்து. பல வருமான ஆதாரங்களில் இருந்து பணம் சம்பாதிப்பீர்கள். இது உங்கள் நிதி நிலையை வலுப்படுத்தும். வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு வலுவாகவும் சிறப்பாகவும் இருக்கும். தொழிலதிபர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சச மற்றும் மாளவ்ய ராஜயோகம் மிகவும் அட்டகாசமான பலன்களை வழங்கும். அதுவும் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது இந்த யோக காலத்தில் நிறைவேறும். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பல்வேறு வருமான ஆதாரங்களில் இருந்து பணம் சம்பாதிப்பீர்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து எதிர்பாராத நல்ல வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி, இருமல் பிரச்சனைகளால் அவதிப்படலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்களானது அதிர்ஷ்டத்தை வாரி வழங்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் மற்றும் புதிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். அதில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, உயர்அதிகாரிகளை ஈர்ப்பீர்கள். நிதி நிலை வலுவடையும். நிலம் அல்லது சொத்தில் முதலீடு செய்வீர்கள். மீடியா, ஃபேஷன் டிசைன் போன்ற துறையில் இருப்பவர்கள் நல்ல சம்பளத்துடனான வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு பிரச்சனைகள் அவ்வப்போது தொந்தரவு செய்யலாம். இருப்பினும், அதற்காக அதிகம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சச மற்றும் மாளவ்ய ராஜயோகங்கள் நற்பலனை வாரி வழங்கும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெற்றிகள் குவியும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்காக காத்திருந்தால், இக்காலத்தில் அவை கிடைக்க வாய்ப்புள்ளன. கிரகங்களின் நிலைகளால் வியாபாரிகளுக்கு சிறப்பாக இருக்கும். மேலும சிலர் முன்னேற்றத்திற்கான இன்னும் நல்ல வாய்ப்புக்களைப் பெறுவார்கள். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நிதி ரீதியாக, நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications