Latest Updates
-
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
சனி ஜெயந்தி அன்று மறந்தும் இந்த பொருட்களை வாங்கிடாதீங்க.. இல்ல துரதிர்ஷ்டம் உங்களை துரத்தும்..
Shani Jayanti 2023: சனி பகவான் நீதியின் கடவுளாகவும், ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தருபவராகவும் கருதப்படுகிறார். சனி பகவானின் அருள் கிடைத்தால், ஆண்டியும் அரசனாவான். இந்த சனி பகவான் சூரிய பகவான் மற்றும் சாயாவிற்கு மகனாக வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பிறந்தார்.
சனி பகவான் பிறந்தநாள் தான் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனி ஜெயந்தி மே மாதம் 19 ஆம் தேதி வருகிறது. அதுவும் வெள்ளிகிழமையில் வருகிறது. சனி பகவான் பிறந்த நாளில் இவரை வணங்கி, சிறப்பு பூஜைகளை செய்து வந்தால், சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.

பொதுவாக சனி பகவானுக்கு உரிய நாளான சனிக்கிழமை மற்றும் சனி ஜெயந்தி நாளில் ஒருசில பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், சனியின் கோபத்திற்கு ஆளாகி, துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். இப்போது சனி ஜெயந்தி நாளில் எந்த பொருட்களை வாங்கக்கூடாது என்பதைக் காண்போம்.
இரும்பு பொருட்கள்
இரும்பு பொருட்கள் சனி தேவருடன் தொடர்புடையவை. எனவே இந்த இரும்புப் பொருட்களை சனி ஜெயந்தி நாளில் மட்டுமின்றி, சனிக்கிழமைகளிலும் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சனி பகவானின் கோபத்திற்கு ஆளாகி, வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
உப்பு
என்ன தான் உப்பு மங்களகரமான பொருளாக கருதப்பட்டாலும், இந்த உப்பை சனிக்கிழமை மற்றும் சனி ஜெயந்தி நாளில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வாங்கினால், அது வீட்டில் கடனை அதிகரிப்பதோடு, நிதி நிலையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே இந்த தவறை ஒருபோதும் செய்யாதீர்கள்.
கருப்பு காலணிகள்
சனி ஜெயந்தி நாளன்று கருப்பு நிற காலணிகளை ஒருபோதும் வாங்கக்கூடாது. ஒருவேளை வாங்கினால், அது அந்த வீட்டில் உள்ளோரின் பணியிடத்தில் பலவிதமானபிரச்சனைகளை சந்திக்க வைப்பதோடு, வேலையில் வெற்றி காண முடியாமல் தடுக்கும்.
கருப்பு நிற எள்ளு விதைகள்
சனி பகவானுக்கு எள்ளு விதைகளை படைப்பது நல்லதாக கருதப்படுகிறது. ஆனால் அந்த கருப்பு நிற எள்ளை சனி ஜெயந்தி நாளில் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொரு வேலையிலும் தடைகளையும், இடையூறுகளையும் சந்திக்க நேரிடும். எனவே எள்ளு விதைகளை வாங்குவதைத் தவிர்த்திடுங்கள்.
கடுகு எண்ணெய்
சனி பகவானுக்கு உரிய சனிக்கிழமை மற்றும் சனி ஜெயந்தி நாளில் கடுகு எண்ணெயை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வாங்கினால், அது அந்த வீட்டில் பல பிரச்சனைகளை கொண்டு வரும் என்பது நம்பிக்கை. எனவே கடுகு எண்ணெயை மறந்தும் சனி ஜெயந்தி நாளில் வாங்கிவிடாதீர்கள்.



Click it and Unblock the Notifications