Latest Updates
-
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்!
ஷ்ராவண மாதத்தில் வரும் வெள்ளிக்கிழையில் இதை செய்யுங்கள்.. வீட்டில் செல்வம் பெருகும்..
இந்து மரபுகளின்படி, ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஆனால் ஷ்ரவணம் என்பது புராணங்களில் இருந்து வரும் ஒரு பாரம்பரிய முறையாகும்.. இந்த இந்த ஷ்ராவண மாதத்தில், சிவபெருமானுக்கும் லட்சுமி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கும்..
அதில் குறிப்பாக ஷ்ராவண வெள்ளிக்கிழமையில், பெண்கள் தங்களது கணவனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க லட்சுமி தேவியிடம் மிகுந்த பக்தியுடன் பிரார்த்தனை செய்கிறார்கள்.ஆனால் எப்படி பூஜை செய்வது என்பதில் அவர்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன. அதனால் வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

ஷ்ராவண வெள்ளிக்கிழமை பூஜை
ஷ்ரவண வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து வீடுகளை சுத்தம் செய்துவிட்டு குளித்து விட வேண்டும்.. பின்னர் வீட்டில் உள்ள சாமி படங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த புகைப்படங்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் பூச வேண்டும். பின்னர் மலர்களால் அலங்கரிக்கவும். வீட்டின் கதவை பச்சை மாவிலைகளால் அலங்கரிக்க வேண்டும். அதன் பிறகு வீட்டில் பூஜை மாலை நேரத்தில் செய்ய வேண்டும்.
அதில் குறிப்பாக பெண்கள் ஷ்ரவண மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்து இருப்பார்கள்.. அதாவது ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை.. காரணம் அன்றைய தினம் வரலக்ஷ்மி தேவியை வழிபட்டால் ஆரோக்கியமும், செல்வமும் உண்டாகும் என்பது நம்பிக்கை. அதனால்தான் அன்றைய தினம் வரலட்சுமி தேவிக்கு பெண்கள் சிறப்பு பூஜை செய்கின்றனர்.
வெள்ளிக்கிழமையில் பூஜை செய்து விட்டு, பஞ்சாம்ருதத்துடன் வீட்டிற்கு அருகில் உள்ள பெண்களையும், நெருங்கிய நண்பர்களையும் வீட்டிற்கு வரவழைத்து, சுமங்கலி பூஜை செய்ய வேண்டும். அதாவது மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்ய வேண்டும். மேலும், வரும் பெண்களை சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து வரவேற்க வேண்டும். இப்படி ஷ்ராவண மாத்த்தில் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமிக்கு சிறப்பு பூஜைகள் செய்வது அஷ்ட ஐஸ்வர்யத்தையும் ஆண்டு முழுவதும் நீண்ட ஆயுளையும் நமக்கும் நம் வீட்டில் உள்ள அனைவருக்கும் பெற்று தரும்.
அதனால் பெண்கள் ஷ்ரவண வெள்ளிக்கிழமையில் விரதம் இருக்க வேண்டும். லட்சுமி தேவி பூஜை முடியும் வரை பயபக்தியுடன் இருங்கள். அதன் பிறகு காலை உணவு மற்றும் பிரசாதம் சாப்பிடலாம். அன்று மாலை வரை லட்சுமி தேவியின் புத்தகங்கள் அல்லது கதைகளை கேட்பது மிகவும் நல்லது. மேலும் வெள்ளிகிழமைய அன்று முடிந்தால் கோவிலுக்கு சென்று சிவனையும் அம்மனையும் தரிசனம் செய்து வர நினைத்தது அனைத்தும் நடக்கும் என்பது நம்பிக்கை.. அதனால் வெள்ளிக்கிழமைகளை தவறவிடாமல் இந்த விரதங்களை கடைப்பிடிப்பது நல்லது..



Click it and Unblock the Notifications