Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
ஷ்ராவண மாதத்தில் வரும் வெள்ளிக்கிழையில் இதை செய்யுங்கள்.. வீட்டில் செல்வம் பெருகும்..
இந்து மரபுகளின்படி, ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. ஆனால் ஷ்ரவணம் என்பது புராணங்களில் இருந்து வரும் ஒரு பாரம்பரிய முறையாகும்.. இந்த இந்த ஷ்ராவண மாதத்தில், சிவபெருமானுக்கும் லட்சுமி தேவிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கும்..
அதில் குறிப்பாக ஷ்ராவண வெள்ளிக்கிழமையில், பெண்கள் தங்களது கணவனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்க லட்சுமி தேவியிடம் மிகுந்த பக்தியுடன் பிரார்த்தனை செய்கிறார்கள்.ஆனால் எப்படி பூஜை செய்வது என்பதில் அவர்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன. அதனால் வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

ஷ்ராவண வெள்ளிக்கிழமை பூஜை
ஷ்ரவண வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் எழுந்து வீடுகளை சுத்தம் செய்துவிட்டு குளித்து விட வேண்டும்.. பின்னர் வீட்டில் உள்ள சாமி படங்களைச் சுத்தம் செய்ய வேண்டும். அதன் பிறகு அந்த புகைப்படங்களுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம் பூச வேண்டும். பின்னர் மலர்களால் அலங்கரிக்கவும். வீட்டின் கதவை பச்சை மாவிலைகளால் அலங்கரிக்க வேண்டும். அதன் பிறகு வீட்டில் பூஜை மாலை நேரத்தில் செய்ய வேண்டும்.
அதில் குறிப்பாக பெண்கள் ஷ்ரவண மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்து இருப்பார்கள்.. அதாவது ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை.. காரணம் அன்றைய தினம் வரலக்ஷ்மி தேவியை வழிபட்டால் ஆரோக்கியமும், செல்வமும் உண்டாகும் என்பது நம்பிக்கை. அதனால்தான் அன்றைய தினம் வரலட்சுமி தேவிக்கு பெண்கள் சிறப்பு பூஜை செய்கின்றனர்.
வெள்ளிக்கிழமையில் பூஜை செய்து விட்டு, பஞ்சாம்ருதத்துடன் வீட்டிற்கு அருகில் உள்ள பெண்களையும், நெருங்கிய நண்பர்களையும் வீட்டிற்கு வரவழைத்து, சுமங்கலி பூஜை செய்ய வேண்டும். அதாவது மஞ்சள், குங்குமம் வைத்து பூஜை செய்ய வேண்டும். மேலும், வரும் பெண்களை சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து வரவேற்க வேண்டும். இப்படி ஷ்ராவண மாத்த்தில் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமிக்கு சிறப்பு பூஜைகள் செய்வது அஷ்ட ஐஸ்வர்யத்தையும் ஆண்டு முழுவதும் நீண்ட ஆயுளையும் நமக்கும் நம் வீட்டில் உள்ள அனைவருக்கும் பெற்று தரும்.
அதனால் பெண்கள் ஷ்ரவண வெள்ளிக்கிழமையில் விரதம் இருக்க வேண்டும். லட்சுமி தேவி பூஜை முடியும் வரை பயபக்தியுடன் இருங்கள். அதன் பிறகு காலை உணவு மற்றும் பிரசாதம் சாப்பிடலாம். அன்று மாலை வரை லட்சுமி தேவியின் புத்தகங்கள் அல்லது கதைகளை கேட்பது மிகவும் நல்லது. மேலும் வெள்ளிகிழமைய அன்று முடிந்தால் கோவிலுக்கு சென்று சிவனையும் அம்மனையும் தரிசனம் செய்து வர நினைத்தது அனைத்தும் நடக்கும் என்பது நம்பிக்கை.. அதனால் வெள்ளிக்கிழமைகளை தவறவிடாமல் இந்த விரதங்களை கடைப்பிடிப்பது நல்லது..



Click it and Unblock the Notifications











