Latest Updates
-
கல்யாண மேடையில் ரத்தக் களரி! வரதட்சணை கேட்டு மணமகன் வீட்டார் செய்த அராஜகம் - அதிர்ச்சியில் உறைந்த விருந்தினர்கள்! -
கிராமத்து ஸ்டைல் சிக்கன் பிரட்டல் ரெசிபி - ஒருதடவை செஞ்சு பாருங்க, செம சைடிஷா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்கள் உலகை ஆட்டிப்படைக்கும் சக்திவாய்ந்தவர்களாக இருப்பார்களாம் -
கிலோ 12000 ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான அரிசி இதுதான் - இதுல அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா? -
வீட்டின் வாஸ்துவை மாற்றும் ரகசியம்! மழைக்காலத்தில் இந்த செடிகள் இருந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும் -
ஐயங்கார் ஸ்டைல் மிளகு குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமா இருக்கும் -
மே 17-க்கு முன் புதுமனை புகுவிழா நடத்தப்போறீங்களா? செல்வம் பெருக இந்த வாஸ்து ரகசியத்தை மிஸ் பண்ணாதீங்க! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும்
30 ஆண்டுகளுக்கு பின் சனி, சுக்கிரனால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணம் அதிகம் சேரும்..
Saturn Venus Made Kendra Trikona Rajyoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கங்களின் போது சில சமயங்களில் கிரக சேர்க்கைகள் உருவாவதுண்டு. அப்படி நிகழும் கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். இந்த யோகங்களின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.
அந்த வகையில் ஆடம்பரத்திற்கும், செல்வத்திற்கும் காரணியாக கருதப்படும் சுக்கிரன் அக்டோபர் 02 ஆம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைந்தார். சுக்கிரன் சிம்ம ராசிக்குள் நுழைந்ததாலும், சனி பகவான் கும்ப ராசியில் இருப்பதாலும், 30 ஆண்டுகளுக்கு பின் சமசப்தம மற்றும் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது ஒரு சுப யோகம். இந்த யோகத்தால் ஒருவரது நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் திடீரென்று நிதி நிலையில் உயர்வைக் காண்பதோடு, வாழ்வில் முன்னேற்றத்தையும், நல்ல புகழையும் காண்பார்கள். இப்போது கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கேந்திர திரிகோண ராஜயோகத்தால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக சிக்கி வராமல் இருந்த பணம், இந்த யோக காலத்தில் கைக்கு வரும். வணிகர்களுக்கு எதிர்காலத்தில் நல்ல லாபத்தைத் தரக்கூடிய புதிய ஒப்பந்தம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகத்தால் இதுவரை தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். பண பரிவர்த்தனைகளால் நல்ல ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் வேலை மற்றும் தொழில் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது எதிர்பாராத பல நல்ல பலன்களைத் தரும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். உங்களின் நீண்ட நாள் கடின உழைப்பிற்கான பலன் இந்த காலகட்டத்தில் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணத்தைப் பெறக்கூடும். தொழில் ரீதியாக, இந்த யோகமானது நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் தரும். உங்களின் ஆசைகள் இந்த யோக காலத்தில் நிறைவேறக்கூடும். முக்கியமாக சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications