Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
ஆண்டின் முதல் ஏகாதசி நாளில் விஷ்ணுபகவானின் அருளை பெற என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?
Saphala Ekadashi 2024: புனிதமான சபல ஏகாதசி என்பது இந்து நாட்காட்டியில் பவுஷ் மாதத்தில் வரும் ஏகாதசி ஆகும். இதற்கு மற்றொரு பெயர் பௌஷ் கிருஷ்ண ஏகாதசி. "சபல" என்ற சொல்லுக்கு "செழிப்பு" என்பது பொருள் என்பதால், சபல ஏகாதசி என்பது பக்தர்கள் தங்கள் துன்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து நற்கதி பெறும் நாளாகப் பொருத்தமாக வகைப்படுத்தப்படுகிறது.
இந்த நாளில் விரதம் இருப்பது பக்தர்கள் தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் செய்து விமோசனம் அடைய உதவும் என்று கருதப்படுகிறது. இந்த ஆண்டு, சபல ஏகாதசி விரதம் ஜனவரி 7, 2024 அன்று அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும், விஷ்ணுவின்,ஆசீர்வாதத்தைப் பெறவும், ஏகாதசி விரதத்தை வெற்றிகரமாக முடிக்கவும் இந்த நாளில் சில செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் உள்ளன. அவற்றைப் பற்றி மேலும் அறியலாம்.

இந்த மங்களகரமான விரதத்தில் செய்ய வேண்டியவை
- இந்த நாளில், பக்தர்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து நீராட வேண்டும். சுத்தமான ஆடைகளை அணிந்து, விரதத்தைக் கடைப்பிடிக்கும் சபதத்தை நிலைநாட்டுங்கள்.
- இறைச்சி, மீன், வெங்காயம், பூண்டு, முட்டை மற்றும் மதுபானங்கள் அனைத்தும் தாமசப் பொருட்களாகக் கருதப்படுகின்றன, மேலும் விரதம் இருப்பவர் அதை உட்கொள்ளக்கூடாது.
- கூடுதலாக, பக்தர்கள் தானியங்கள் மற்றும் பீன்ஸ் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இருப்பினும், பக்தர்கள் பழங்கள் மற்றும் பால் பொருட்களை உட்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
- ஏகாதசி நாளில், பக்தர்கள் துளசி இலைகளை பறிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
- சபல ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடிப்பவர்களுக்கு எண்ணெயில் ஏகாதசி பிரசாதம் தயாரிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. ஏகாதசி பிரசாதம் தயாரிக்க தேசி நெய்யைப் பயன்படுத்துவது நல்லது.
- ஏகாதசி விரத நாளில் அல்ல, தஷ்மி திதி நாளில் பக்தர்கள் தலைமுடியைக் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.
- பக்தர்கள் ஏகாதசி விரத நாளில் ஸ்ரீமத் பாகவதம் அல்லது ஸ்ரீமத் பகவத் கீதையைப் படித்து, விஷ்ணுவின் மந்திரங்களைச் சொல்ல வேண்டும்.
ஏகாதசி விரத நாளில் செய்யக்கூடாதவை
- பக்தர்கள் உறங்குவதும், பிறரைத் திட்டுவதும், விரதம் இருக்கும் போது பொய் பேசுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
- குறிப்பிட்ட பரண நேரத்தில் துவாதசி திதியில் விரதத்தை முடிக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
