69 குழந்தைகளை வெறும் 27 பிரசவத்தில் பெற்ற அதிசய பெண்... அவரின் புகைப்படம் உள்ளே...!

குழந்தை பிறப்பு என்பது இப்போது மிகவும் சிக்கலானதாக மாறிவருகிறது. தற்போதைய காலகட்டத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்து அவர்களை பாதுகாப்பாக வளர்ப்பதே மிகவும் சவாலானதாக இருக்கும் சூழலில் நம்முடைய அம்மா, பாட்டி காலகட்டத்தில் ஒவ்வொருவரும் 2 முதல் 10 குழந்தைகள் வரை கூட பெற்றெடுத்து நன்றாக வளர்த்தார்கள். அதையெல்லாம் நினைத்தாலே நமக்கு தலைசுற்றி விடும். இருப்பினும், விதிவிலக்காக சிலர் அவ்வப்போது அதிகமான குழந்தைகளை பெற்று செய்திகளில் வருவதை நாம் பார்த்திருப்போம்.

தற்போது அதிக குழந்தைகளைப் பெற்று உயிருடன் இருப்பவர் என்று அறியப்படும் பெண், உகாண்டாவைச் சேர்ந்த மரியம் நபாடன்சி ஆவார். அவர் 15 கர்ப்பங்களில் இரட்டையர்கள், மூன்று குழந்தைகள் மற்றும் ஐந்து பேர் என சுமார் 44 குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார், அவர்களில் 38 பேர் உயிருடன் உள்ளனர். ஹைப்பர்ஓவுலேஷன் எனப்படும் ஒரு அரிய மருத்துவ நிலை காரணமாக அவரால் இது சாத்தியமானது. இதை கேட்பதற்கு நமக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கலாம். ஆனால் ஒரு பெண் மருத்துவ வசதிகள் இல்லாத காலகட்டத்திலேயே 69 குழந்தைகளை பெற்றெடுத்தார் என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். அந்த அதிசய பெண்ணைப் பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Russian Woman Who Gave Birth To 69 Children

வாலண்டினா வாசிலியேவ்

1725 மற்றும் 1765-க்கு இடைப்பட்ட 40 ஆண்டுகளில் 27 முறை பிரசவித்து, மொத்தம் 69 குழந்தைகளுக்குத் தாயான ரஷ்யாவைச் சேர்ந்த வாலண்டினா வாசிலியேவ், உலகின் 'அதிக குழந்தைகளைப் பெற்ற தாய்' என்ற சாதனையைப் படைத்துள்ளார். ரஷ்யாவின் ஷுயா நகரைச் சேர்ந்த அவரும் அவரது கணவர் ஃபியோடர் வாசிலியேவும், 76 வயதில் இறப்பதற்குமுன் , மொத்தம் 69 குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

கின்னஸ் சாதனை

வாலண்டினா 1707 ஆம் ஆண்டில் பிறந்தார், அவர் ஃபியோடோரின் முதல் மனைவி ஆவார். ஃபியோடோர் ஒரு ஏழை விவசாயாக இருந்தார். கின்னஸ் உலக சாதனைகளின்படி, வாலண்டினா முதன் முதலில் 1725 ஆம் ஆண்டிலும், கடைசியாக 1765 ஆம் ஆண்டிலும் குழந்தை பெற்றார். இந்த மதிப்பீட்டின்படி, அவர் 76 வயதில் இறப்பதற்கு முன்பு 18 முதல் 40 ஆண்டுகள் வரை கர்ப்பமாக இருந்திருப்பார்.

எத்தனை குழந்தைகளை பெற்றெடுத்தார்?

வாலண்டினா நான்கு முறை நான்கு குழந்தைகளையும், ஏழு முறை மூன்று குழந்தைகளையும், பதினாறு முறை இரட்டைக் குழந்தைகளையும் பெற்றெடுத்தார். இத்தனை பிரசவங்களில் ஒரு ஜோடி இரட்டைக் குழந்தைகள் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட்டனர், ஆனால் இந்த 67 குழந்தைகளில் பெரும்பாலானோர் ஆச்சரியப்படும் விதமாக குழந்தைப் பருவத்தைத் தாண்டி உயிர் பிழைத்தனர். இதில் கூடுதல் சுவாரஸ்யம் என்னவென்றால் வாலண்டினாவுடன் பெற்ற 69 குழந்தைகள் மட்டுமின்றி, அவரது கணவர் ஃபியோடோர் தனது இரண்டாவது மனைவியுடன் மேலும் 18 குழந்தைகளைப் பெற்றிருந்தார்.

பத்திரிக்கை ஆதாரங்கள்

அந்த காலகட்டத்தில் வெளிவந்த பிரபல பத்திரிக்கையின் எழுத்தாளர் எழுதிய கடிதத்தில் பின்வரும் தகவல் இருந்தது, " செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ஆகஸ்ட் 13, 1782, பழைய பாணி நாட்காட்டியின்படி தேதியிடப்பட்ட அந்தக் கடிதத்தில், மாஸ்கோ மாகாணத்தைச் சேர்ந்த, 75 வயதுடைய, ஃபெடோர் வாசிலீஃப் என்ற ஒரு விவசாயி, தற்போது உயிருடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு முதல் மனைவி மூலம் 27 பிரசவங்களில் 69 குழந்தைகள் பிறந்தன. அவரது இரண்டாவது மனைவி மூலம் 8 பிரசவங்களில் 18 குழந்தைகள் பிறந்தன. மேற்கூறிய இந்தத் தகவல், எவ்வளவு ஆச்சரியமாக இருந்தாலும், நம்பகமானது. ஏனெனில் இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இருந்த ஒரு ஆங்கில வணிகரிடமிருந்து இங்கிலாந்தில் உள்ள அவரது உறவினர்களுக்கு நேரடியாக அனுப்பப்பட்டது. அந்த விவசாயி பேரரசிக்கு அறிமுகப்படுத்தப்படவிருந்தார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்."

இதை மேலும் நிரூபிக்கும் விதமாக 1834-ல் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் ஒரு ஆசிரியர் பின்வருமாறு எழுதியுள்ளார், " 1782 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி, நிகோல்ஸ்கி மடாலயத்திலிருந்து மாஸ்கோவிற்கு ஒரு பட்டியல் வந்தது. அதில், ஷுயா மாவட்டத்தைச் சேர்ந்த ஃபெடோர் வாசிலியேவ் என்ற ஒரு விவசாயி, இரண்டு முறை திருமணம் செய்துகொண்டு, 87 குழந்தைகளைப் பெற்றிருந்தார் என்ற தகவல் இருந்தது." அந்த காலகட்டத்தில், வாசிலியேவுக்கு 75 வயது மற்றும் அவருக்கு 82 குழந்தைகள் உயிருடன் இருந்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Story first published: Wednesday, January 21, 2026, 13:35 [IST]
Desktop Bottom Promotion