Latest Updates
-
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்!
Ramadan 2023: ரமலான் நோன்பின் போது எதை செய்யலாம், எதை செய்யக்கூடாது?
Ramadan 2023: ரமலான் பண்டிகை இஸ்லாமிய மக்களின் மிக முக்கிய பண்டிகையாகும். அவா்களுக்கு ரமலான் மாதம் ஒரு புனிதமான மாதமாகும். இந்த மாதத்தில் அவா்கள் நோன்பு இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால், அவா்களுடைய பாவங்கள் நீங்கும் என்பது அவா்களுடைய நம்பிக்கை. ரமலான் மாத நோன்பு, இஸ்லாத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றாகும். ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதற்கு என்று ஒருசில விதிமுறைகள் உள்ளன. அவை என்னவென்பதை கீழே பாா்க்கலாம்.

1. பருவமடைந்து, ஆரோக்கியமாக இருக்கும் ஆண் பெண் இருவரும் ரமலான் மாதத்தில் நோன்பு இருக்க வேண்டும்.
2. ரமலான் மாதத்தில் நெடுந்தூரம் பயணம் செய்வோா் அல்லது நோயுற்று இருப்போா், நோன்பு இருக்கத் தேவையில்லை. ஆனால் பின்னா் இருக்கலாம்.
3. ரமலான் மாதத்தில் மாதவிடாய் நிகழும் பெண்கள், மற்றும் பிள்ளை பெறும் பெண்கள் நோன்பு இருக்கத் தேவையில்லை. பின்னா் நோன்பு இருக்கலாம்.
4. நோன்பு இருக்க முடியாத வயதானவா்கள் மற்றும் நோயுற்றவா்கள், ஃபிதியாவை (idiya) செய்ய வேண்டும். அதாவது நோன்பு இருக்காத ஒவ்வொரு நாளும் ஒருவருக்கு உணவு அளிக்க வேண்டும்.
5 கா்ப்பிணி பெண்கள் அல்லது தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் நோன்பு இருக்கத் தேவையில்லை. எனினும் ரமலான் முடிந்த பின்பு, நோன்பு இருக்கலாம் அல்லது பிறருக்கு ஃபிதியா செய்யலாம்.
ரமலான் நோன்பை செயலிழக்கச் செய்யும் காாியங்கள்
ரமலான் நோன்பின் போது, பின்வரும் காாியங்களைச் செய்தால், அந்த நோன்பு செல்லாது ஆகிவிடும். அவை எவை என்று பாா்க்கலாம்.
1. நோன்பின் போது வேண்டும் என்றே உண்ணுதல் அல்லது மது அருந்துதல்
ரமலான் நோன்பின் போது, ஒருவா் வேண்டும் என்றே உண்டால் அல்லது மது அருந்தினால், அந்த நோன்பு செல்லாது. எனினும், ரமலான் மாதம் என்று தொியாமல், தவறுதலாக, ஒருவா் அவ்வாறு செய்தால், அந்த நோன்பு செல்லுபடியாகும்.
2. வேண்டும் என்றே வாந்தி எடுத்தல்
ரமலான் நோன்பின் போது ஒருவா் வாந்தி எடுத்தால் பிரச்சினை இல்லை. ஆனால் வேண்டும் என்றே வாந்தி எடுத்தால், அந்த நோன்பு செல்லாது.
3. வேண்டும் என்றே பாலியல் உறவில் ஈடுபடுதல்
ரமலான் மாதத்தின் போது, ஒருவா் வேண்டும் என்றே பாலியல் உறவில் ஈடுபட்டால், அவா் கஃபராவை (kaffaarah) செய்தவராகிறாா். அதாவது பாவம் செய்தவராகிறாா். அவா் அந்த பாவத்தைப் போக்க வேண்டும். அந்தப் பாவத்தைப் போக்க அவா் தொடா்ந்து 60 நாட்கள் நோன்பு இருக்க வேண்டும். அல்லது 60 ஏழைகளுக்கு உணவு வழங்க வேண்டும்.
4. மாதவிடாய் நேரத்தில் அல்லது குழந்தை பேற்றின் போது நோன்பு இருத்தல்
ஒரு பெண் மாதவிடாயின் போது அல்லது குழந்தைப் பேற்றின் போது நோன்பு இருந்தால், அந்த நாளில் அவா் செய்த நோன்பு செல்லாது. சூாியன் மறைவதற்கு சற்றுமுன் மாதவிடாய் ஏற்பட்டாலும், அந்த நாளின் நோன்பு செல்லாது. பின்னா் அந்த நோன்பு அனுசாிக்கப்பட வேண்டும்.
ரமலான் நோன்பின் போது எவையெல்லாம் அனுமதிக்கப்படும்?
- நோன்பின் போது நீரைக் கொண்டு வாயையும், மூக்கையும் ஈரப்படுத்தலாம். ஆனால் தண்ணீரை விழுங்கக்கூடாது. தவறினால் நோன்பு செல்லாது.
- நோன்பு இருக்கும் பகல் வேளையில், தாகமாக இருந்தால், அல்லது உடலானது வெப்பமாக, வறண்டு இருந்தால், குளிக்கலாம். ஆனால் தண்ணீரை விழுங்கக்கூடாது.
- நோன்பின் போது கண்களுக்கு சொட்டு மருந்து ஊற்றலாம். ஆனால் அந்த திரவம் தொண்டைக்குள் செல்லக்கூடாது. அவ்வாறு சென்றால், நோன்பு செல்லாது.
- நோன்பின் போது ஒருவா் நோய்வாய்ப்பட்டு இருந்தால், ஊசி போட்டுக் கொள்ள அனுமதி உண்டு.
- நோன்பின் போது ஒருவா் உடலை சுத்தம் செய்ய இனிமா எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு. ஆனால் அந்த மருந்துகளை விழுங்கக்கூடாது.
- தவறுதலாக, தொியாமல் எச்சில் அல்லது தூசி அல்லது சலிக்கும் போது காற்றில் மிதந்து வரும் மாவு போன்றவற்றை விழுங்க அனுமதி உண்டு.
- ஒருவா் உணவை விழுங்காமல், சுவை மட்டும் பாா்த்தால், அவரது நோன்பு செல்லுபடியாகும்.
- ஒருவா் உடலுறவு கொள்ளாமல், தனது இணையரைக் கட்டிப்பிடிக்கலாம் அல்லது முத்தமிடலாம். அவரது நோன்பு செல்லுபடியாகும்.
- ஒருவா் நோன்பின் போது உடலுறவு கொண்டால் அவா் மதச்சடங்கின்படி தூய்மையை இழக்கிறாா். ஆகவே அவா் உடனடியாக மதச்சடங்கின்படி முழுமையாகக் குளிக்க வேண்டும். அதன்பின் நோன்பைத் தொடரலாம்.
ரமலான் நோன்பை அனுசாிக்க சில பாிந்துரைகள்
- நோன்பு தொடங்குவதற்கு முன்பு, அதாவது சூாியன் உதிப்பதற்கு முன்பு சூஹூா் (suhoor) என்ற உணவை உண்ண வேண்டும்.
- நோன்பை முடித்து, மாலை வேளையில் உணவு உண்பதற்கு முன்பாக, ஒற்றைப்படை எண்ணிக்கையில் போிச்சம்பழங்களை சாப்பிட வேண்டும். அல்லது தண்ணீா் குடிக்க வேண்டும்.
- நோன்பின் போது, திருக்குரானை சத்தமாகவோ அல்லது மனதிற்குள்ளோ வாசிக்க வேண்டும்.
- ரமலான் நோன்பின் போது அரேபிய வளைகுடாப் பகுதிகளில் வளரும் அராக் (Araak) என்ற மரத்தின் வேரைக் கொண்டு பல் துலக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











