Just In
- 34 min ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- 1 hr ago வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- 2 hrs ago 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- 2 hrs ago கர்ப்ப காலத்தில் பதட்டப்படும் பெண்களுக்கான டிப்ஸ்..!
Don't Miss
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Movies மீண்டும் தள்ளிப்போன அரண்மனை 4.. விஷாலின் அந்த குற்றச்சாட்டு தான் காரணமா?.. இப்படி ஆகிடுச்சே!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
இந்த 5 ராசிக்காரங்க சின்ன விஷயத்துக்கு கூட அதிகமா கவலைப்படுவாங்களாம்...
எப்படி ஒருவரின் ஆளுமை மற்றும் வாழ்வில் ஒவ்வொரு சூழ்நிலையை கையாளும் விதம் பற்றி தெரிந்து கொள்ள முடியுமோ, அதேப் போல் எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அளவுக்கு அதிகமாக கவலைப்படுவார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
கவலையும் மன அழுத்தமும் வாழ்வில் தவிர்க்க முடியாத இரண்டு அம்சங்கள் ஆகும். இவை இரண்டையும் நாம் எவ்வளவு தான் தவிர்க்க முயன்றாலும், நம் மனதிற்குள் வளரவிடாமல் தடுத்தாலும், இவை நம்மை கடைசி வரை துன்புறுத்தும். இம்மாதிரியான சூழ்நிலைகளை சிலர் எளிதில் கடந்துவிடுவார்கள். ஆனால் சிலரோ மற்றவர்களை ஒப்பிடும் போது மன அழுத்தம் மற்றும் கவலை கொள்ள அதிக வாய்ப்புள்ளது.
எப்படி ஜோதிடத்தின் உதவியால், ராசியைக் கொண்டு எப்படி ஒருவரின் ஆளுமை மற்றும் வாழ்வில் ஒவ்வொரு சூழ்நிலையை கையாளும் விதம் பற்றி தெரிந்து கொள்ள முடியுமோ, அதேப் போல் எந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அளவுக்கு அதிகமாக கவலைப்படுவார்கள் என்பதையும் அறிந்து கொள்ளலாம். இப்போது அதிகம் கவலை கொள்ளும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். இதனால் மற்றவர்கள் இவர்களை சிறிது தவறாக பேசினாலும், அதிகம் கவலையடைவார்கள். இது தவிர, இந்த ராசிக்காரர்கள் தங்களின் உணர்ச்சிகளை உடனே வெளிப்படுத்தாமல் அடக்கி வைப்பார்கள். இதனால் இப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் அடக்கி வைக்கும் போது, மனதில் பல விஷயங்களைப் பற்றி சிந்திக்க நேரிட்டு, எளிதில் மன அழுத்தம் கொள்தோடு, அதிக மன கவலை அடைய நேரிடுகிறது.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் தங்களின் சொந்த வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுவார்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட பற்றி அதிகம் சிந்திப்பார்கள் மற்றும் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள். எதிர்காலத்தைப் பற்றி அதிகமாகச் சிந்திப்பதும், கவலைப்படுவதும் இவர்களை வருத்தமடையச் செய்வதால், இவர்கள் எப்போதும் மன அழுத்தத்திலும், மகிழ்ச்சியற்றவர்களாகவும் இருப்பார்கள். ஆனால், கவலையோ, அதிக மன அழுத்தமோ தங்களின் பிரச்சினைகளைத் தீர்க்காது என்பதை இவர்கள் உணர வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் உறவுகளை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள். இவர்கள் தாங்கள் விரும்பும் நபரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள விரும்புவார்கள் மற்றும் அதிகம் நேரிப்பார்கள். ஆகவே இவர்கள் தங்கள் உறவில் பிரச்சனைகளை சந்திக்கும் போது, அதிக வருத்தமும் மன அழுத்தமும் அடைவார்கள். இது அவர்களின் வாழ்க்கையை சிக்கலாக ஆக்குகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் நபர்களுடன் நேரத்தை செலவிட விரும்புவார்கள். தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யும் பழக்கத்தைக் கொண்டவர்கள். அனைத்து வேலைகளையும் தாங்களாகவே செய்ய விரும்புவார்கள். இதன் விளைவாக, இவர்கள் மற்றவர்களை சார்ந்திருக்க விரும்புவதில்லை. ஒரு பணியை முடிக்க முடிவு செய்தவுடன், அது முழுமையாக முடியும் வரை அவர்கள் அதை விட மாட்டார்கள். செய்யும் எல்லாவற்றிலும் அவர்கள் 100% கொடுக்கிறார்கள். இதுவே இவர்களின் கவலைக்கு ஒரு காரணம். ஏனெனில் இவர்கள் மற்றவர்களிடமும் அதையே எதிர்பார்க்கிறார்கள். அது இல்லாவிட்டால் அதிக வருத்தமடைவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் எதையும் வலுவாகவும், தனிப்பட்ட முறையிலும் எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். இவர்கள் தங்களை விட மற்றவர்களைப் பற்றி அதிகம் சிந்திப்பார்கள். இது ஒரு நல்ல விஷயம் என்றாலும், சில சமயங்களில் அது அவர்களின் மனநலத்தை பாதித்து, கவலையடையச் செய்கிறது. மேலும் இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள். ஆகவே அவர்கள் சிறிய விஷயங்களுக்கு கூட அதிக மன வருத்தம் கொள்வார்கள்.