Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
இந்த 4 ராசிக்காரங்க சாகுற வரை தங்கள் முன்னாள் காதலை மறக்கவே மாட்டாங்களாம்... உங்க லவ்வர் ராசி என்ன?
எவ்வளவு தன்னம்பிக்கை மற்றும் திமிர் உள்ளவர்களாக தோன்றினாலும், இந்த ராசிக்காரர்கள் பிரிந்து செல்லும் போது மனச்சோர்வடைகிறார்கள். இவர்கள் அந்த சோகத்தை எவ்வளவு மறைக்க முயற்சித்தாலும், அது கண்டிப்பாக வெளியே தெரிந்துவிடும்.
காதலால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்று சொன்னால், மிகையில்லை. காதலிக்காத மனிதர்கள் இவ்வுலகில் உண்டோ. பெரும்பாலும், அனைத்து மக்களும் காதலிக்கிறார்கள். ஆனால், இங்கு எல்லா காதலும் மகிழ்ச்சியிலோ அல்லது திருமணத்திலோ அல்லது நீண்ட கால உறவிலோ முடிவதில்லை. பலருக்கு காதல் வாழ்க்கை கைக்கூடி இருக்கலாம். பலருக்கு அவை பிரிவால் முறிந்து இருக்கலாம். காதல் எப்படி ஒரு அற்புதமான உணர்வோ, அதுபோல காதல் பிரிவு மிக கொடுமையானது. காதல் தோல்வியில் இருக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். சில காலம் சென்றதும், பலர் அந்த காதலை மறந்துவிட்டு வேறு ஒரு வாழ்க்கைக்குள் சென்றிருப்பார்கள். ஆனால், சிலர் கடைசி வரை தங்கள் காதலை மறக்க முடியாமல், வேறு வாழ்க்கைக்குள் செல்ல முடியாமல் தவிப்பார்கள்.

சிலர் தங்கள் கடந்தகால உறவுகளிலிருந்து வெளியேறாமல், அவர்களை அவர்களே மிகவும் காயப்படுத்துகிறார்கள். அந்தவகையில், கடந்த கால உறவுகளில் இருந்து குணமடையாத சில ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

மீனம்
மீன ராசி நேயர்களுக்கு தங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியின் நினைவுகளை மறக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்கள் மனதளவில் ஏதோவொன்றை செய்வதுபோல் தோன்றினாலும், அவர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பு மிகவும் வலுவானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும். குறிப்பாக அவர்கள் குற்ற உணர்ச்சியில் இருக்கும்போது, மீண்டும் காதல் தொடர்பை இணைப்பதற்காக அவர்கள் தங்கள் முன்னாள் காதலரை மீண்டும் அணுகலாம். ஏனெனில், அந்த காதலை விட்டுவிடுவது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. இது, அவர்களை தனிமையான நிலைக்குத் தள்ளுகிறது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் நினைவுகளை சேமிக்கும் திறன் கொண்டவர்கள். தங்கள் கடந்த காலத்தை மறந்துவிடுவதற்கு அவர்கள் மிகவும் போராடுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் உறவுகளில் இருந்து தங்கள் உணர்ச்சிப் பக்கத்தை மறைத்தாலும், அவர்கள் தங்கள் கூட்டாளர்களுக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். அந்த காதல் வாழ்க்கை முடிந்ததும், அவர்கள் வேதனையில் மிகவும் சோகமாக இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்களை காதலித்த நபர் உறவை முறித்துக் கொண்டு அவர்களை நடுத்தெருவில் விட்டுச் சென்றாலும், அவர்கள் தங்கள் முன்னாள் நபரை இன்னும் விரும்புகிறார்கள்.

சிம்மம்
எவ்வளவு தன்னம்பிக்கை மற்றும் திமிர் உள்ளவர்களாக தோன்றினாலும், இந்த ராசிக்காரர்கள் பிரிந்து செல்லும் போது மனச்சோர்வடைகிறார்கள். இவர்கள் அந்த சோகத்தை எவ்வளவு மறைக்க முயற்சித்தாலும், அது கண்டிப்பாக வெளியே தெரிந்துவிடும். அவர்களின் முழு ஆத்துமாவும் ஒரு வழியில் உடைந்து, நம் உடல் இறுதியில் நமது மன நிலையை பிரதிபலிக்கும் என்பதால் அவர்களின் துயரத்தை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. காதல் தோல்வியால் அவர்கள் மிகவும் காயம் பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் நண்பர்களின் ஆதரவால் அவர்களால் அதிலிருந்து மீள முடியும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஒரு உறவில் இருக்கும்போது, அதிக உற்சாகம், ஆழ்ந்த நெருக்கம் மற்றும் அர்ப்பணிப்பு இருக்கும். இந்த ராசிக்காரர்கள் நீண்ட கால மற்றும் வாழ்நாள் உறவுகளில் இருக்க அதிக ஆசைப்படுவார்கள். இதனால், ஒரு உறவு பிரிந்து பாதியில் போவதை, இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், அவர்கள் எளிதில் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களின் விரக்தியும் சோகமும் அவர்களின் முகத்தில் தெரியும். காதலின் நினைவுகளை விட்டு வெளியேறுவது அவர்களுக்கு மிகவும் கடினமானது. இந்த ராசிக்காரர்கள் மீண்டும், முடிந்துபோன அந்த வாழ்க்கை வருமா? என ஏக்கத்தில் இருப்பார்கள்.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் கடந்தகால உறவுகளை விட்டுவிட்டு அல்லது மறந்துவிட்டு அடுத்த புதிய வாழ்க்கைக்கு முன்னேறுவார்கள்.



Click it and Unblock the Notifications











