Latest Updates
-
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
ஆகஸ்ட் 17-ல் சூரியன் சிம்மம் ராசிக்கு செல்வதால் பணத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
சனி-சுக்கிரன் இணைப்பால் உருவாகும் பிரதியுதி திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு அளவற்ற செல்வத்தை தரப்போகுது! -
சுதந்திர தினத்தின் போது ஏன் பிரதமர் செங்கோட்டையில் கொடியேற்றுகிறார் - அதற்குப்பின்னால் உள்ள வரலாறு என்ன? -
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
இந்த 4 ராசிக்காரங்க சாகுற வரை தங்கள் முன்னாள் காதலை மறக்கவே மாட்டாங்களாம்... உங்க லவ்வர் ராசி என்ன?
எவ்வளவு தன்னம்பிக்கை மற்றும் திமிர் உள்ளவர்களாக தோன்றினாலும், இந்த ராசிக்காரர்கள் பிரிந்து செல்லும் போது மனச்சோர்வடைகிறார்கள். இவர்கள் அந்த சோகத்தை எவ்வளவு மறைக்க முயற்சித்தாலும், அது கண்டிப்பாக வெளியே தெரிந்துவிடும்.
காதலால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்று சொன்னால், மிகையில்லை. காதலிக்காத மனிதர்கள் இவ்வுலகில் உண்டோ. பெரும்பாலும், அனைத்து மக்களும் காதலிக்கிறார்கள். ஆனால், இங்கு எல்லா காதலும் மகிழ்ச்சியிலோ அல்லது திருமணத்திலோ அல்லது நீண்ட கால உறவிலோ முடிவதில்லை. பலருக்கு காதல் வாழ்க்கை கைக்கூடி இருக்கலாம். பலருக்கு அவை பிரிவால் முறிந்து இருக்கலாம். காதல் எப்படி ஒரு அற்புதமான உணர்வோ, அதுபோல காதல் பிரிவு மிக கொடுமையானது. காதல் தோல்வியில் இருக்கும் பலரை நாம் பார்த்திருப்போம். சில காலம் சென்றதும், பலர் அந்த காதலை மறந்துவிட்டு வேறு ஒரு வாழ்க்கைக்குள் சென்றிருப்பார்கள். ஆனால், சிலர் கடைசி வரை தங்கள் காதலை மறக்க முடியாமல், வேறு வாழ்க்கைக்குள் செல்ல முடியாமல் தவிப்பார்கள்.

சிலர் தங்கள் கடந்தகால உறவுகளிலிருந்து வெளியேறாமல், அவர்களை அவர்களே மிகவும் காயப்படுத்துகிறார்கள். அந்தவகையில், கடந்த கால உறவுகளில் இருந்து குணமடையாத சில ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

மீனம்
மீன ராசி நேயர்களுக்கு தங்கள் முன்னாள் காதலன் அல்லது காதலியின் நினைவுகளை மறக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்கள் மனதளவில் ஏதோவொன்றை செய்வதுபோல் தோன்றினாலும், அவர்களின் உணர்ச்சிக் கொந்தளிப்பு மிகவும் வலுவானதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கும். குறிப்பாக அவர்கள் குற்ற உணர்ச்சியில் இருக்கும்போது, மீண்டும் காதல் தொடர்பை இணைப்பதற்காக அவர்கள் தங்கள் முன்னாள் காதலரை மீண்டும் அணுகலாம். ஏனெனில், அந்த காதலை விட்டுவிடுவது அவர்களுக்கு கடினமாக இருக்கிறது. இது, அவர்களை தனிமையான நிலைக்குத் தள்ளுகிறது.

கடகம்
கடக ராசிக்காரர்கள் நினைவுகளை சேமிக்கும் திறன் கொண்டவர்கள். தங்கள் கடந்த காலத்தை மறந்துவிடுவதற்கு அவர்கள் மிகவும் போராடுகிறார்கள். இந்த ராசிக்காரர்கள் உறவுகளில் இருந்து தங்கள் உணர்ச்சிப் பக்கத்தை மறைத்தாலும், அவர்கள் தங்கள் கூட்டாளர்களுக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பார்கள். அந்த காதல் வாழ்க்கை முடிந்ததும், அவர்கள் வேதனையில் மிகவும் சோகமாக இருக்கிறார்கள். இந்த ராசிக்காரர்களை காதலித்த நபர் உறவை முறித்துக் கொண்டு அவர்களை நடுத்தெருவில் விட்டுச் சென்றாலும், அவர்கள் தங்கள் முன்னாள் நபரை இன்னும் விரும்புகிறார்கள்.

சிம்மம்
எவ்வளவு தன்னம்பிக்கை மற்றும் திமிர் உள்ளவர்களாக தோன்றினாலும், இந்த ராசிக்காரர்கள் பிரிந்து செல்லும் போது மனச்சோர்வடைகிறார்கள். இவர்கள் அந்த சோகத்தை எவ்வளவு மறைக்க முயற்சித்தாலும், அது கண்டிப்பாக வெளியே தெரிந்துவிடும். அவர்களின் முழு ஆத்துமாவும் ஒரு வழியில் உடைந்து, நம் உடல் இறுதியில் நமது மன நிலையை பிரதிபலிக்கும் என்பதால் அவர்களின் துயரத்தை நாம் கவனிக்காமல் இருக்க முடியாது. காதல் தோல்வியால் அவர்கள் மிகவும் காயம் பட்டுள்ளனர் மற்றும் அவர்களின் நண்பர்களின் ஆதரவால் அவர்களால் அதிலிருந்து மீள முடியும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஒரு உறவில் இருக்கும்போது, அதிக உற்சாகம், ஆழ்ந்த நெருக்கம் மற்றும் அர்ப்பணிப்பு இருக்கும். இந்த ராசிக்காரர்கள் நீண்ட கால மற்றும் வாழ்நாள் உறவுகளில் இருக்க அதிக ஆசைப்படுவார்கள். இதனால், ஒரு உறவு பிரிந்து பாதியில் போவதை, இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால், அவர்கள் எளிதில் மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அவர்களின் விரக்தியும் சோகமும் அவர்களின் முகத்தில் தெரியும். காதலின் நினைவுகளை விட்டு வெளியேறுவது அவர்களுக்கு மிகவும் கடினமானது. இந்த ராசிக்காரர்கள் மீண்டும், முடிந்துபோன அந்த வாழ்க்கை வருமா? என ஏக்கத்தில் இருப்பார்கள்.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம் மற்றும் கும்ப ராசிக்காரர்கள் தங்கள் கடந்தகால உறவுகளை விட்டுவிட்டு அல்லது மறந்துவிட்டு அடுத்த புதிய வாழ்க்கைக்கு முன்னேறுவார்கள்.



Click it and Unblock the Notifications