Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த ராசில பிறந்தவங்கள வேலைய விட்டு சீக்கிரம் தூக்கிருவாங்களாம் ஏன் தெரியுமா?
ஒவ்வொருவருக்கும் தாங்கள் இருக்கும் வேலையில் ஒட்டிக்கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சிலருக்கு இது மிகவும் சிரமமானதாக இருக்கும்
இந்தியா தற்போதிருக்கும் சூழ்நிலையில் வேலையில்லா திண்டாட்டம் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஆட்சியாளர்கள் வேலை வாய்ப்பை உருவாக்குவதற்கு பதிலாக இருக்கும் வேலை வாய்ப்புகளையும் காலி செய்யும் செயல்பாடுகளில் தீவிரமாக இருக்கிறார்கள். இந்த ஆண்டு மேலும் வேலை வாய்ப்புகள் பறிபோகும் சூழ்நிலைகள் நிலவுவதாக பொருளாதார அறிஞர்கள் கூறுகிறார்கள்.

ஒவ்வொருவருக்கும் தாங்கள் இருக்கும் வேலையில் ஒட்டிக்கொள்வது என்பது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. சிலருக்கு இது மிகவும் சிரமமானதாக இருக்கும், அவர்களால் ஒரு வேலையில் நீண்ட நாட்கள் இருக்க முடியாது, ஒன்று அவர்களாக வேலையை விட்டு செல்வார்கள் அல்லது நிர்வாகமே அவர்களை வேலையை விட்டு தூக்கிவிடும். இதற்கு காரணம் அவர்களின் பிறந்த ராசியாக கூட இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வேலை போகும் அபாயம் இருந்து கொண்டே இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் முதிர்ச்சியற்றவர்களாகவும், பிடிவாதம் உள்ளவர்களாகவும் அறியப்படுகிறார்கள். வணிகம் என்று வரும்போது இவர்கள் உதவியாகவும் இருப்பார்கள், சிக்கலையும் ஏற்படுத்துவார்கள். இவர்கள் எப்போதும் ஒரு கூட்டத்தை வழிநடத்த விரும்புகிறார்கள், புதிய முயற்சிகளில் இறங்க எப்போதும் தயாராக இருப்பார்கள். ஒரே நேரத்தில் பல வேலைகளை கையாளுவதால் இவர்கள் உடனிருப்பவர்களை புண்படுத்துவார்கள் அதேசமயம் மேலதிகாரிகளின் கோரிக்கைகளையும் கவனிக்க மாட்டார்கள். ஒத்துழைப்பு மற்றும் பிடிவாதமான மனப்பான்மையால் இவர்கள் பணியிடத்தில் நச்சுக்களை பரப்புவார்கள். இவர்கள் அதீத ஆற்றல் மற்றும் ஒத்துழையாமைஇவர்கள் வேலையை விட்டு நீக்க முக்கியமான காரணமாக இருக்கிறது.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களை கட்டுப்படுத்துவது என்பது கடினமான ஒன்றாகும், இது இவர்களுடைய மேலதிகாரிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தும். இவர்கள் எப்பொழுதும் அனைவருடைய கவனத்தின் மையப்புள்ளியாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள், எனவே எப்பொழுதும் முழுமையாக செயல்பட விரும்புவார்கள். தங்களின் வேலைகளை மற்றவர்களுக்கு கொடுப்பதுடன் அதற்கான பாராட்டை இவர்கள் பெற்றுக்கொள்வார்கள். இதனால் மற்ற பணியாளர்களுடன் இவர்கள் மோதலில் ஈடுபட அதிக வாய்ப்புள்ளது, மேலும் இதுவே இவர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவதற்கான காரணமாகவும் அமையும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தனிநபர் ஆர்வம் மற்றும் உறுதி அதிகம் உள்ளவர்களாக அறியப்படுகிறார்கள். இவர்கள் தங்களை சுற்றி இருக்கும் அனைத்தையும் கட்டுப்படுத்த விரும்புவார்கள். குறைவான செயல்திறன் கொண்டவர்களை காட்டுமிராண்டித்தனமாக நடத்தக்கூடியவர்கள் இவர்கள். இது அவர்களை சுற்றி பல எதிர்மறை சூழ்நிலைகளை ஏற்படுத்தும். மேலும் இவர்களின் பழிவாங்கும் உணர்வு என்பது நம்ப முடியாதது ஆகும். இதன் காரணமாக, அவர்கள் மிகவும் விரும்பத்தகாத எதிரிகளை பணியிடங்களில் உருவாக்கிக் கொள்வார்கள். இவர்களுக்கு எதிராக ஏற்படும் கிளர்ச்சி காரணமாக இவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட வாய்ப்புள்ளது.

மீனம்
இந்த அடையாளத்தின் கீழ் பிறந்த நபர்கள் மிகவும் புதுமையானவர்கள். இந்த சிறப்பியல்பு பண்பின் காரணமாக, இவர்களால் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளுக்கு ஏற்ப நடந்து கொள்ள இயலாது, குறிப்பாக பணியில் இவர்கள் மிகவும் விளையாட்டாக இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். இவர்கள் முடிந்த அளவிற்கு எப்போதும் பொறுமையாக இருப்பார்கள், ஆனால் அதனை இழந்து விட்டால் இவர்களை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. எனவே இவர்களின் விளையாட்டுத்தனமே இவர்களின் வேலை போக காரணமாக மாறிவிடும்.

மிதுனம்
ஆர்வம், பதட்டம், நிச்சயமற்றத்தன்மை என பல குணங்கள் நிறைந்தவர்களாக இவர்கள் இருப்பார்கள். இவர்கள் பிறருடன் தொடர்பு கொள்வதில் வல்லவர்களாக இருந்த போதிலும், தங்களின் முதலாளிகளால் ஒதுக்கப்படுவதை இவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. ஏனெனில் இவர்கள் எப்போதும் குழுவின் தலைவராக இருப்பார்கள். இவர்களின் பொறுமையின்மை காரணமாக இவர்கள் ஒரு வேலையே இறுதிவரை வெற்றிகரமாக முடிக்க மாட்டார்கள், இதனால் இவர்கள் திறனற்றவர்களாக முதலாளிகளால் கருதப்படுவார்கள். எனவே இவர்கள் வேலையை விட்டு நீக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.



Click it and Unblock the Notifications