Just In
- 10 min ago 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- 1 hr ago இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- 2 hrs ago தோசை மாவு இல்லையா? வேர்க்கடலையை வெச்சு இப்படி தோசை சுடுங்க.. வேற லெவல் டேஸ்ட்ல இருக்கும்..
- 5 hrs ago Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
Don't Miss
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Movies கீர்த்தி சுரேஷ் என்ன இப்படி மாறிட்டாரு.. பாலிவுட் நடிகரை கட்டிப் பிடித்து தீயாக பரவும் வீடியோ!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
புலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா?
உலக புகைப்பட தினத்தில் மக்கள் எப்படி புகைப்படங்களின் மூலம் சமூகத்துடனான உறவையும் விழிப்புணர்வையும் பெறுகிறார்கள் என்பது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி உலக புகைப்பட தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. புகைப்படங்களின் வாயிலாக மக்கள் எவ்வாறு சமூகத்துடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள், முக்கியத்துவம் என்ன, ஏன் விழிப்புணர்வு கொள்ள வேண்டும் ஆகியவற்றை உணர்த்தும் விதமாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
சமீப காலங்களில் இந்த தினத்தன்று சமூக வலைத்தளங்களில் தாங்கள் எடுத்த வித்தியாசமாக புகைப்படங்களை பலரும் பதிவிட்டு இந்த நாளை கொண்டாடி வருகிறார்கள்.
உலக புகைப்பட தினம்
பக்கம் பக்கமாக வசனம் பேசிச் சொல்ல வேண்டிய விஷயத்தைக் கூட ஒரு சிறிய புகைப்படத்தால் எளிதாகச் சொல்லிவிட முடியும். புகைப்படங்களின் மீது நமக்கு இருக்கும் ஈர்ப்பு என்பது இன்றைய காலத்து இளைஞர்களுக்குச் சொல்லவே தேவையில்லை. அந்த அளவுக்கு புகைபபடங்களை ஆற்றல் மிக்க கருவியாகப் பயன்படுத்துகிறார்கள். அதனாலேயே புகைப்பட தினத்தை சர்வதேச அளவில் கொண்டாடுகிறார்கள்.
MOST
READ:
உயிருக்குப்
போராடிய
பறவையின்
உயிரைக்
காப்பாற்றிய
நாய்
-
வைரலான
வீடியோ
முதல் புகைப்படம்
13 ஆம் நூற்றாண்டில் தான் முதன்முதலில் கேமரா அப்ஸ்குரா என்னும் கருவி மூலம் தான் முதன்முதலில் புகைப்படம் எடுக்கப்பட்டது. தூக்க முடியாத அளவுக்கு வெயிட்டான கருவி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களோ தற்போதைய அசாத்திய வளர்ச்சியின் காரணமாக, டிஜிட்டல் கேமரா, பிக்எல்ஆர் என்பதையும் தாண்டி, நம்முடைய ஸ்மார்ட்போன்களில் கேமராக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில் இருந்தே நமக்குத் தெரிந்திருக்கும் இதன் முக்கியத்துவம்.
எப்படி பெயர் வந்தது?
1839 ஆம் ஆண்டில் தான் முதன்முதலில் டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை வடிவமைத்துக் கொடுத்தார். அதாவது, கண்ணாடியை வைத்து புகைப்படத்தை பிரதியெடுக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இந்த முறைக்கு பிரெஞ்சு அகாடமி ஆஃப் சயின்ஸ் ஒப்புதலும் அளித்தது. இவர் தான் இந்த கலைக்கு போட்டோகிராபி என்று பெயரும் வைத்தார்.
முதல் புகைப்படங்கள்
1826 ஆம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோசப் நைஸ்போர் நீப்ஸ் என்பவர் தான் முதல் நிலையான நவீன புகைப்படத்தை எடுத்து சாதனை படைத்தார். இந்த புகைப்படம் நாளடைவில் அழிந்த போனது. அதற்குப் பின்பு தான் 1839ம் ஆண்டு லூயிஸ் டாகுரே பாரிசில் உள்ள போல்வர்டு கோயிலுக்கு அருகில் உள்ள தெருவை புகைப்படமாக எடுத்தார். தனிநபரால் எடுக்கப்பட்ட முதல் புகைப்படம் இதுதான்.
புகைப்பட விருதுகள்
சிறந்த புகைப்படங்களுக்கான விருதுகள் பல்வேறு அமைப்புகளால் வழங்கப்படுகின்றன. குறிப்பாக, பத்திரிகை துறையில் இதுபோன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன. வேர்ல்டு பிரஸ் போட்டோ, டைம் இதழ் மற்றும் புலிட்சர் விருதுகள் ஆகியவை நடத்தப்பட்டிருக்கின்றன.
MOST
READ:
கூகுள்ள
வேலைய
விட்டுட்டு
நாடு
முழுக்க
93
ஏரிய
தூர்
வாரியிருக்காரு...
நம்ம
சென்னைப்பையன்
கேமரா எப்போது வந்தது?
1900 ஆம் ஆண்டு பாக்ஸ் பிரவுனி என்னும் ஒருவகை கேமராவை கோடாக் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 35 மில்லி மீட்டர் அளவுள்ள ஸ்டில் கேமராக்களை 1913 இல் ஆஸ்கர் பர்னாக் என்பவர் வடிவமைத்தார். இந்த கேமரா புகைப்படத்துறையையே பெரிய அளவில் புரட்டிப் போட்டது. அதன்பின் டிஜிட்டல் கேமராக்கள், பிக்எலார் என கேமரா வகைகளில் பெரிய புரட்சியே வந்துவிட்டது எனலாம்.
உலகை மாற்றிய படங்கள்
20 ஆம் நூற்றாண்டு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலக வரலாற்றிலேயே நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியது என்று கூறலாம். உதாரணமாக,
சீன வீரர்களின் ராணுவ பீரங்கி வண்டியை எதிர்த்து நின்ற டேங்க் மேன் புகைப்படம்
வியட்நாம் போரை நிறுத்தக் காரணமான சிறுமியின் புகைப்படம்
1994 ஆம் ஆண்டில் சூடானின் உணவுப்பஞ்சத்தை சுட்டிக்காட்டிய குழந்தையின் புகைப்படம்
ஆகியவை உலக அளவில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியவை.
அதிர வைத்த ஐலான் புகைப்படம்
லட்சம் வார்த்தைகள் சொல்லாததை ஐலான் சிறுவனின் புகைப்படம் இந்த உலகத்திற்கு உணர்த்தியது. சிரியாவைச் சேர்ந்த 3 வயது சிறுவன் ஐலான், தனது குடும்பத்தினருடன் படகில் துருக்கிக்கு அகதியாக வந்தபோது, படகு கடலில் கவிழ்ந்ததில் ஐலான் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது உடல் செப்டம்பர் 2ம் தேதி கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய காட்சியைப் பார்த்து உலகமே அதிர்ந்து போனது. உலக அளவில் இந்த படத்தைப் பார்த்து கண்ணீர் விடாத நபர்களே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டும்.