Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
இந்தியாவிற்கு ஏன் நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது தெரியுமா? பலரும் அறியாத சுவாரஸ்ய வரலாறு...!
எத்தனையோ நாட்களும், நேரமும் இருக்கும்போது நம் நாட்டிற்கு ஏன் ஆகஸ்ட் மாதம் நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது என்று எப்போதாவது சிந்தித்தி உள்ளீர்களா?
நமது இந்திய தாய் திருநாட்டின் சுதந்திர நாள் நெருங்கி விட்டது. இந்தியராக உணரும் அனைவருக்குமே இந்த நாள் பொன்னான நாளாகும். கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக சுதந்திரத்திற்காக போராடிய நம் மக்கள் இறுதியில் 1947 ஆம் ஆண்டு தாங்கள் நினைத்ததை சாதித்தனர். ஆனால் அதற்காக நாம் கொடுத்த விலை மிகப்பெரியது.

எத்தனையோ நாட்களும், நேரமும் இருக்கும்போது நம் நாட்டிற்கு ஏன் ஆகஸ்ட் மாதம் நள்ளிரவில் சுதந்திரம் வழங்கப்பட்டது என்று எப்போதாவது சிந்தித்தி உள்ளீர்களா? அப்படி உங்களுக்குள் கேள்வி எழுதிருந்தால் அதற்கான பதில் ஜோதிடம் என்பதாகும். இந்தியாவின் சுதந்திர நேரத்தை ஜோதிடம் எப்படி தீர்மானித்தது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் சுதந்திர நாள்
உண்மையில் நம்முடைய சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 ஆக இல்லாமல் இருக்க நிறைய வாய்ப்புகள் இருந்தது. அதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே ஜவஹர்லால் நேரு இந்தியாவின் முழு சுதந்திரத்திற்கு நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். 1929 ஆம் ஆண்டில், லாகூரில் பூர்ணா ஸ்வராஜுக்கு (முழுமையான சுதந்திரம்) நேரு அழைப்பு விடுத்தபோது, 26 ஜனவரி 1930 நம்முடைய முதல் சுதந்திர தினமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இது நடக்கவில்லை.

மவுண்ட் பேட்டனின் அறிவிப்பு
இந்தியர்களின் விடாப்பிடியான போராட்டங்களாலும், இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து அடைந்த மிகப்பெரும் பொருளாதார சரிவாலும் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவிற்கு சுதந்திரம் அளிக்க முடிவு செய்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் சுதந்திரம் வழங்க எத்தணித்தபோது மவுண்ட்பேட்டன் பிரபு 1948 ஜூன் 30-க்குள் இந்தியாவுக்கு அதிகாரத்தை மாற்றுவதோடு, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு அரசாட்சி அந்தஸ்தும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்திய எல்லை
கலவரத்தைக் குறைப்பதற்காக இந்த திட்டங்களை முன்னெடுக்க அவர் முடிவு செய்தார். உண்மையில் எல்லைகளை வரைவதற்கு ணிபுரிந்த பேரறிஞரான சிரில் ராட்க்ளிஃப் ஆகஸ்ட் 9 அன்று தனது இறுதி வரைவை சமர்ப்பித்தார். அதாவது சுதந்திரத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன்தான் இது தீர்மானிக்கப்பட்டது.

மவுண்ட்பேட்டனின் புத்தகம்
பல ஆண்டுகளுக்குப் பிறகு, ப்ரீடம் அட் மிட்நைட் என்ற புத்தகத்தில், மவுண்ட்பேட்டன் கூறியது என்னவெனில், "நான் தேர்ந்தெடுத்த தேதி நீல நிறத்தில் இருந்து வந்தது. ஒரு கேள்விக்கான பதிலாக அதைத் தேர்ந்தெடுத்தேன். முழு நிகழ்விற்கும் நான் மாஸ்டர் என்பதைக் காண்பிப்பதில் உறுதியாக இருந்தேன். நாங்கள் ஒரு தேதியை நிர்ணயித்திருக்கிறீர்களா என்று அவர்கள் கேட்கப்பட்ட போது, அது விரைவில் இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். நான் அதைச் சரியாகச் தேர்ந்தெடுக்கவில்லை- ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன், பின்னர் ஆகஸ்ட் 15 என்று முடிவு செய்தேன். ஏனெனில் இது ஜப்பான் சரணடைந்த இரண்டாம் ஆண்டு நினைவு நாள். " மவுண்ட்பேட்டன் இரண்டாம் உலகப் போரில் தென்கிழக்கு ஆசியா கட்டளையின் உச்ச கூட்டணி தளபதியாக பணியாற்றினார், பின்னர் அவர் ஜப்பானின் முறையான சரணடைதலில் கையெழுத்திட்டார்.

ஏன் நள்ளிரவு?
ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினமாக தேர்வு செய்யப்பட்ட பிறகு என்ன நடந்தது? 1947 ஆகஸ்ட் 15 ஒரு தீங்கு விளைவிக்கும் தேதி என்று பல ஜோதிடர்கள் நம்பினர். மவுண்ட்பேட்டன் கராச்சியில் இருந்ததால், மன்னரின் சுதந்திரச் செய்தியை பாகிஸ்தானுக்கு வழங்கினார். ஆனால் பாகிஸ்தான் தனது சுதந்திர நாளை ஆகஸ்ட் 15 லிருந்து 14 ஆக 1948 முதல் மாற்றியதாக கூறப்படுகிறது.

சுதந்திர அறிவிப்பு
ஆகஸ்ட் 15 அதிர்ஷ்டமற்ற நாளாக கூறப்பட்டதால் அதனை தீர்மானிக்கும் சக்திகள் ஒன்றுகூடி சுதந்திரத்தை 14 ஆம் தேதிக்கும் 15 ஆம் தேதிக்கும் இடைப்பட்ட நேரத்தில் அறிவிக்க அறிவுறுத்தினர். எனவே ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு 11 மணியளவில் டெல்லியின் நாடாளுமன்ற மாளிகையில் ஜவஹர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத் மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்தியாவின் நம்பிக்கை பற்றி பேச, உஸ்தாத் பிஸ்மில்லா கான் ஷெஹ்னாவை வாசிக்க, சுசேதா கிருபாலானி வந்தே மாதரம், சாரே ஜஹான் சே ஆச்சா மற்றும் தேசிய கீதத்தை பாட வெளியில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் தாய்திருநாட்டின் சுதந்திரத்தை கொண்டாட திரண்டனர். வீதி எங்கிலும் ஒளிவிளக்கேற்றி, தேசியகீதம் பாடி தேசிய கொடி ஏற்றப்பட்டு இந்தியாவின் முதல் சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



Click it and Unblock the Notifications











