Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா?
இந்த 5 ராசிக்காரங்க தன்னை ஓவர் ஸ்மார்ட் புத்திசாலினு நினைச்சிகிட்டு...அதிகமா பல்பு வாங்குவாங்களாம்!
துலாம் ராசிக்காரர்கள் வேண்டுமென்றே முரட்டுத்தனமாகவும், தந்திரமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படுகிறார்கள். ஏனென்றால் மக்கள் தங்களை விரும்புவதை அவர்கள் விரும்பவில்லை
நம் வாழ்க்கையில் சந்திக்கும் பல நபர்களை இன்று வரை நம்மால் சரியாக புரிந்துகொள்ள முடியாது. நமக்கு நெருக்கமானவர்களையும் புரிந்துகொள்ள நாம் அதிக சிரமப்படுவோம். ஏனெனில், யார் எந்த நேரங்களில் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்று நமக்கு தெரியாது. யார் எப்படி வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் மாறலாம். சிலர் வேண்டுமென்றே மிகவும் முரட்டுத்தனமாகவும், தந்திரமாகவும், புத்திசாலித்தனமாகவும் நடந்து கொள்வார்கள். அவர்கள் அனைவரையும் விஞ்சி, எல்லோருக்கும் முன்னால் தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறார்கள். மற்றவர்கள் தங்களை ஊமை என்று நினைப்பது அவர்களுக்குப் பிடிக்காது. எனவே அவர்கள் அனைவரின் முன்னிலையிலும் தங்களை மிகைப்படுத்துகிறார்கள்.

ஜோதிடம் ஒரு நபரின் ஆளுமையின் நுணுக்கங்களை பன்னிரண்டு ராசி அறிகுறிகளைக் கொண்டு பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவற்றைப் புரிந்துகொள்ள உதவும் திறன் கொண்டது. எனவே, தந்திரமாகவும் அதிக புத்திசாலியாகவும் நடந்துகொள்ளும் ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

ரிஷபம்
ரிஷப ராசி நேயர்கள் உலகமே தங்களுக்குச் சொந்தமானது போல் செயல்படுவார்கள். அவர்களால் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட முடியும். ஆனால் அவர்களின் அதிக புத்திசாலித்தனத்தை யாரும் பாராட்டாததால், இது பெரும்பாலும் எதிர்மறையான வழியில் செல்கிறது. அவர்கள் தெரிந்தே ஒரு நபரை சில நேரங்களில் மோசமாக நடத்துவார்கள். இதனால், சில நேரங்களில் யாரும் அவருடைய நண்பராக இருக்க விரும்புவதில்லை. இந்த ராசிக்காரர்கள் சற்று வித்தியாசமாக அனைவரிடமும் நடந்துகொள்வார்கள்.

மிதுனம்
மிதுன ராசி நேயர்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியைப் பார்க்க மாட்டார்கள். ஆனால் அவர்களின் இந்த இரட்டை ஆளுமை ஒருவரை குழப்பமடையச் செய்ய போதுமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் மிகவும் புத்திசாலிகள் மற்றும் மிகவும் அறிவுள்ள நபராக நடிக்கிறார்கள். மற்றவர்கள் தங்கள் இடத்தைப் பிடிக்கும்போது அவர்கள் அதை வெறுக்கிறார்கள். இதனால், இந்த ராசிக்காரர்களின் குணம் வெளிச்சத்திற்கு வந்துவிடும். இதனால், இவர்களை பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் வேண்டுமென்றே முரட்டுத்தனமாகவும், தந்திரமாகவும், புத்திசாலித்தனமாகவும் செயல்படுகிறார்கள். ஏனென்றால் மக்கள் தங்களை விரும்புவதை அவர்கள் விரும்பவில்லை. இந்த ராசிக்காரர்கள் மக்கள் தங்களைச் சுற்றி இருப்பதைப் பற்றி எப்படி உணருகிறார்கள் என்பது நிச்சயமற்றது. இந்த ராசிக்காரர்கள் பொதுவாக தங்களை மக்கள் நம்பக்கூடாத ஒரு நபராக சித்தரிக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக, இவர்கள் தங்கள் மனம் கஷ்டப்படாதவாறு தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தந்திரமாக செயல்பட முயற்சி செய்கிறார்கள். இதனால் சில சூழ்நிலைகளில் அவர்கள் தந்திரமாக செயல்பட்டு, தங்கள் மீது தவறு இல்லாதவாறு காட்டிக்கொள்வார்கள். இதனால், அவர்கள் மற்றவர்களுக்கு முன்னால் பலவீனமாகத் தோன்ற முடியாது. எனவே, அவர்கள் ஒரு நிலைப்பாட்டை பராமரிக்க விரும்புகிறார்கள். அதனால் யாரும் அவர்களை ஊமையாக நினைத்துக்கொள்ள கூடாது என்று கவனமாக இருப்பார்கள்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் ஒரு ஆழ்ந்த சிந்தனையாளராக தங்களை வெளியில் காட்டிக்கொள்வார்கள். அவர்கள் தங்களை மிகவும் புத்திசாலித்தனமானவராகவும் மற்றவர்கள் தங்களை விட திறமை குறைந்தவர்களாகவும் கருதுகிறார்கள். ஆதலால், இவர்கள் எப்போதும் எல்லாரையும் மட்டம் தட்டியே பேசுவார்கள். இதனால், இந்த ராசிக்காரர்களிடம் நட்பாக யாரும் இருக்க விரும்புவதில்லை.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், கடகம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் மற்றவர்களை மோசமாக உணர வைக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் தெளிவாகவும் இருக்கிறார்கள். அவர்கள் ஒருபோதும் மற்றவர்களுக்கு முன்னால் உயர்ந்தவர்களாக செயல்பட முயற்சி செய்ய மாட்டார்கள். ஆதலால், இவர்கள் ஒருபோதும் மற்றவர்களை மோசமாக நினைக்க மாட்டார்கள்.



Click it and Unblock the Notifications











