Just In
- 35 min ago உங்க முகம் பொலிவிழந்து அசிங்கமா இருக்கா? அப்ப நைட் தேனுடன் இதை கலந்து ஃபேஸ் பேக் போடுங்க...
- 1 hr ago இந்த பொருட்களை தெரியாம கூட இரும்பு பாத்திரத்தில் சமைக்காதீங்க... இல்லனா பாத்திரம் வீணாப்போயிடும்...!
- 2 hrs ago கோதுமை மாவு இல்லாமல் வெறும் ரவையைக் கொண்டே பூரி சுடலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...
- 3 hrs ago Holi 2024: ஹோலி கொண்டாட்டத்தின் போது இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...இல்லனா ஆஸ்துமா வர வாய்ப்பிருக்கு!
Don't Miss
- Sports போடு! ஆர்சிபியில் 2 டக் அவுட்.. சிஎஸ்கே அசத்தல் பவுலிங்.. அதிக முறை டக் அவுட்டான வீரர்கள் பட்டியல்
- News வெளிவரும் பூதம்? அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 6 நாள் அமலாக்கத்துறை காவல்.. டெல்லி சிறப்பு நீதிமன்றம் அதிரடி
- Movies Soodhu Kavvum 2: அப்பனுக்கு பேபே.. பாட்டனுக்கும் பேபே.. வெளியானது சூது கவ்வும் 2 பட டீசர்!
- Automobiles மாருதியில் இருந்து இந்த புது கார்களுக்கு தான் எல்லாரும் வெயிட்டிங்!! கம்மியான விலையில் வாங்கிடலாம்!
- Technology ரூ.5000, ரூ.6000 இல்ல.. அதுக்கும் மேல.. Nothing Phone 2 மீது மீண்டும் விலை குறைப்பு.. புதிய விலை என்ன?
- Finance தென்காசி-யில் செமிகண்டக்டர் டிசைன் திட்டம்.. ZOHO ஸ்ரீதர் வேம்பு டிவிட்டர் பதிவு..!!
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – மார்ச் 25 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் வழிகள் என்ன?
உங்க ராசிப்படி மகாபாரதத்தில் இருக்கும் எவருடைய குணம் உங்களுக்குள் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
மகாபாரதத்தில் தர்மத்தை கடைபிடிக்கும் பல மாவீரர்கள் இருக்கின்றனர், அதேசமயம் அதர்ம வழியில் சென்ற பல மாவீரர்களும் உள்ளனர்.
இந்திய வரலாற்றில் மகாபாரதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பூமியில் மனித வாழ்க்கையின் கடுமையான யதார்த்தம் மற்றும் மனிதன் எவ்வாறு நிலப்பரப்பு பிணைப்பில் சிக்கிக் கொள்கிறான் என்பதை, நிர்ப்பந்தமாக, மகாபாரதம் அனைத்து நுணுக்கங்களையும், தெளிவாக விளக்குகிறது. மகாபாரதத்துடன் கூடிய ஒவ்வொரு உணர்ச்சியும் மகத்துவமாக முடிக்கப்படுகிறது.
மகாபாரதத்தில் தர்மத்தை கடைபிடிக்கும் பல மாவீரர்கள் இருக்கின்றனர், அதேசமயம் அதர்ம வழியில் சென்ற பல மாவீரர்களும் உள்ளனர். தியாகங்கள் முதல் பழிவாங்குதல் வரை, பல உணர்ச்சிகள் கொண்ட மாவீரர்கள் மகாபாரதம் முழுக்க நிரம்பியுள்ளனர். மகாபாரதத்தின் கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றின் பொருந்தக்கூடிய தன்மை மற்றும் உங்கள் ராசியுடன் ஒற்றுமையைக் கொண்டுவருகிறது. அதன்படி உங்கள் ராசியின் படி மகாபாரதத்தின் எந்த கதாபாத்திரம் உங்களுக்கு ஒத்துப்போகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் கடினமான மற்றும் உறுதியானவர்கள். எந்த விதமான நஷ்டத்தையும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது. அவர்கள் வெல்ல முடியாதவர்களாக அறியப்பட விரும்புகிறார்கள். இந்த வீண் மனப்பான்மை மற்றும் பிடிவாதத்தால் அவர்கள் துரியோதனனுடைய குணங்களை ஒத்திருக்கிறார்கள். இவர்கள் அதிகார வெறிபிடித்தவர்கள்.
ரிஷபம்
தைரியமான டாரஸ் ஒருபோதும் சிரமங்களுக்கு பயப்படுவதில்லை. நிலைமை என்ன விளைவுகளை ஏற்படுத்தினாலும், அவர்கள் பின்வாங்க விரும்பவில்லை. இந்த பிடிவாத குணம் அவர்களை வாயுபுத்திரன் பீமனாக ஆக்குகிறது.
மிதுனம்
உணர்ச்சிகரமான மிதுன ராசிக்காரர்கள் பெரும்பாலும் தியாகத்தின் பெரிய இதயத்திற்காக குறிப்பிடப்படுகிறது. கடினமான நேரத்தில் விட்டுக்கொடுக்கும் முடிவை எடுப்பவர்கள் அவர்கள்தான். இதுவே அவர்களை பாண்டவர்களின் தாயான குந்தியின் குணாதிசயங்களுடன் ஒத்துப்போக வைக்கிறது.
கடகம்
கலை விரும்பிகளான கடக ராசிக்காரர்கள் எப்போதும் கலை மற்றும் படைப்பாற்றலை விரும்புகிறது. அவர்களின் நம்பமுடியாத பொறுமை சக்தியும் அவர்களை தனித்துவமானவர்களாக மாற்றுகிறது. இதனாலேயே இவர்கள் காண்டீபதாரி அர்ஜுனனை பிரதிபலிக்கிறார்கள். அர்ஜுனன் வில்வித்தையில் எவ்வளவு நிபுணரோ அதே அளவிற்கு கலைகளிலும் வல்லவர் என்பதை அனைவரும் அறிவர்.
சிம்மம்
உற்சாகமான மற்றும் சக்திவாய்ந்த சிம்ம ராசிக்காரர்கள் எந்தவொரு விஷயங்களையும் ஆராய்வதற்கு முனைகிறது மற்றும் சாகசங்களில் ஈடுபட விரும்புகிறது. இவர்களின் இயல்பு எப்போதும் ஜாலியாக இருக்கும். இதற்காக அவர்கள் பீமனின் மைந்தன் கடோத்கஜனுடன் ஒப்பிடப்படுகிறார்கள்..
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் உண்மையானவர்கள் மற்றும் நம்பகமானவர்கள். அவர்களின் உறவுகள் தவறாக போகலாம் ஆனால் அவர்கள் இறுதிவரை நித்தியத்தை கடைபிடித்து பந்தத்தை பாதுகாப்பார்கள். அவர்கள் துருபதக் கன்னிகை திரௌபதியைப் போலவே இருக்கிறார்கள்.
MOST READ: 2022 சனிப்பெயர்ச்சியால் இந்த 6 ராசிக்காரங்க மோசமான துன்பங்களை சந்திக்கத் போறாங்க... உங்க ராசி என்ன?
துலாம்
துலாம் போட்டி மற்றும் இருமையின் உருவகமாக அறியப்படுகிறது. அவர்கள் போராட்டத்தில் இருக்க விரும்புகிறார்கள். இதனாலேயே அவர்கள் துச்சாதனனை போன்று இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் புத்திசாலிகள் மற்றும் குறும்புக்காரர்கள். வார்த்தைகளின் கலைத்திறன் அவர்களுக்குத் தெரியும். மன விளையாட்டில் அவர்களை வீழ்த்துவது எளிதல்ல. யாரை எப்படி வீழ்த்த வேண்டும் என்று அவர்கள் நன்கு அறிவார்கள் அதனால் அவர்கள் சகுனியைப் பிரதிபலிப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கை விரும்புவார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையை மிகுந்த மகிழ்ச்சியுடன் வாழ விரும்புகிறார்கள். இதனாலேயே அவர்கள் திருதராஷ்டிரனின் குணத்துடன் பொருந்துகிறார்கள்.
MOST READ: சாஸ்திரங்களின் படி திருமணமானவர்கள் வாரத்தின் இந்த 3 நாட்களில் உடலுறவு கொள்ளக்கூடாதாம் ஏன் தெரியுமா?
மகரம்
மகர ராசிக்காரர்கள் தீவிர, கலை மற்றும் நெறிமுறை கொண்டவர்கள். அவர்கள் நியாயமான விளையாட்டில் போராட விரும்புகிறார்கள். இதனால்தான் அவர்கள் அர்ஜுனனின் வீரப்புதல்வரான அபிமன்யுவை பிரதிபலிக்கிறார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் தங்கள் வார்த்தைகளில் உறுதியாக இருப்பார்கள் மற்றும் அதனை இறுதிவரை கடைபிடிப்பார்கள். அவர்கள் வாக்குறுதி அளித்தவுடன், அவர்கள் அதனை ஒருபோதும் தள்ளிப்போட விரும்பவில்லை. மகாபாரததத்தில் அவர்கள் யுதிஷ்டிரரை ஒத்திருக்கிறார்கள்.
MOST READ: இந்த 5 ராசி பெண்கள் ரொமான்டிக்காக காதலிப்பதில் கில்லாடிகளாம்... இவங்க காதலியா கிடைக்க லக் வேணும்!
மீனம்
மீன ராசிக்காரர்கள் உணர்ச்சிவசப்பட்டு அமைதியாக இருப்பார்கள். அவர்கள் சரியானதை அறிந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் விலைமதிப்பற்ற உறவுகளில் அடிக்கடி சிக்கிக்கொள்வதால் வாயை திறந்து தர்மத்தின் பக்கம் நிற்க முடியாது. அதனால்தான் அவர்கள் காந்தாரியை ஒத்திருக்கிறார்கள்.