Latest Updates
-
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம்
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி இந்த விரல் நீளமாக இருக்கும் ஆண்கள் பெண்களை மோசமாக நடத்துவார்களாம்...!
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி நமது உடலின் ஒவ்வொரு பாகங்களும் நம்மை பற்றிய பல ரகசியங்களை சுமந்து கொண்டுள்ளது. அதனை சரியாக புரிந்து கொள்வது நமது கைகளில்தான் உள்ளது.
சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி நமது உடலின் ஒவ்வொரு பாகங்களும் நம்மை பற்றிய பல ரகசியங்களை சுமந்து கொண்டுள்ளது. அதனை சரியாக புரிந்து கொள்வது நமது கைகளில்தான் உள்ளது. நம்மை பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்ள ஜாதகம்தான் பார்க்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஆண்களின் கைகள் அவர்களைப் பற்றிய சில முக்கியமான விஷயங்களை கூறும் குறிப்பாக பெண்கள் விஷயத்தில் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆண்களின் விரல்களே கட்டிக்கொடுத்துவிடும்.

பண்டைய காலங்களில் இருந்தே பல்வேறு சாஸ்திரங்கள், நாடி ஜோதிடம், முக வாசிப்பு உள்ளிட்ட உடல் பகுப்பாய்வை விரிவாக விளக்கியுள்ளன.உடல் அம்சங்களைப் பற்றிய அறிவை பரவலாக உள்ளடக்கிய நூல் என்றால் அது சாமுத்ரிகா சாஸ்திரமாகும். இந்த பதிவில் பெண்களுக்கு எதிரான ஆண்களின் குணம் எப்படியிருக்கும் என்பதை அவர்களின் விரல்களை வைத்து எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

ஆள்காட்டி விரல்
ஒரு ஆணின் ஆள்காட்டி விரல் மற்ற விரல்களை விட நீளமானது, வினோதமான தன்மை கொண்டதாகக் கூறப்படுகிறது, மேலும் இவர்கள் பெண்களிடம் மிகவும் முரட்டுத்தனமாகவும், வன்முறையாகவும் நடந்து கொள்வார்கள். அவரது மனைவி உடல்ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் பல துன்பங்களுக்கு ஆளாவார்கள்.

வீங்கிய விரல்கள்
விரல்களின் நுனிப்பகுதிகள் வீங்கியிருந்தால், அந்த நபர் ஒரு திருடனின் பண்புகளை வைத்திருப்பார் என்பதை இது குறிக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கையில் இருக்கும் பெண்களிடம் இருந்தும் அனைத்து ரகசியங்களையும் மறைப்பார்கள்.

சமநீளமுள்ள விரல்
சம நீளமுள்ள மோதிர மற்றும் ஆள்காட்டி விரல்களைக் கொண்ட ஆண்கள், ஒரு கவர்ச்சியின் ஆளுமை கொண்டவர்கள், இது குறிப்பாக மற்றும் வேண்டுமென்றே பெண்கள் மீது பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் கவனத்துடன், கண்ணியமாக இருப்பார்கள், இது அவர்களின் ஆளுமைக்கு கூடுதல் கவர்ச்சியை கொடுக்கும்.

நீளமான மோதிர விரல்
நீளமான மோதிர விரல் கொண்ட ஆண்கள் மிகவும் ஆக்ரோஷமான தன்மையைக் கொண்டிருப்பார்கள் மற்றும் குழப்பமான ஆளுமையை வளர்த்துக் கொள்வார்கள், இது அவர்களின் துணை மற்றும் திருமண வாழ்க்கைக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தும். மோதிர விரல் டெஸ்டோஸ்டிரோனுடன் இணைக்கப்படுவதாக நம்பப்படுகிறது. இவர்கள் அதிக ஆக்ரோஷத்துடன் இருப்பார்கள்.

கையின் பின்புறம்
உள்ளங்கைகளின் பின்புறம் அல்லது கைமுட்டிக்கு அருகில் அடர்த்தியான கருப்பு முடிகள் கொண்ட ஆண்கள், மற்ற ஆண்களுடன் ஒப்பிடுகையில், அவர்கள் செய்யும் எந்தவொரு முயற்சியிலும் மிகவும் துரதிர்ஷ்டம் நிறைந்தவராக இருப்பார்கள்.

அதிர்ஷ்ட விரல்
விரல்கள் முட்டிவரை தடிமனாக இருக்கும் ஆண்கள் இராஜவாழ்க்கை வாழ்வார்கள். இவர்களின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது எப்போதும் இவர்கள் அருகில் இருக்கும். வாழ்க்கையின் அனைத்து மகிழ்ச்சியையும், ஆடம்பரத்தையும் அனுபவிப்பார்கள். மேலும் அவர்கள் தங்கள் மனைவியை ராணி போல பார்த்துக் கொள்வார்கள்.

நெருக்கமான விரல்
ஆணின் கைரேகை மணிக்கட்டில் தொடங்கி ஆள்காட்டி விரல் வரை மேலே சென்றால் அவர்கள் மிகப்பெரிய நில உரிமையாளராக இருப்பார். மேலும் விரல்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருந்தால் அவர்கள் நிலங்கள், வீடுகள் முதல் கார்கள் வரை, பல்வேறு வங்கிக் கணக்குகள் போன்ற பல விஷயங்களை அவர்கள் வைத்திருப்பார்கள்.

கூரான விரல்
ஒரு ஆணின் விரல் ஏற்ற இரக்கங்கள் இல்லாமல் கூராக இருந்தால் அவர்கள் அதீத புத்திக்கூர்மை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்கள் தங்களின் புத்திக்கூர்மை மூலம் தங்களுக்கு தேவையானவற்றை பெறக்கூடியவர்களாக இருப்பார்கள். மேலும் இவர்களின் நேர்மை இவர்களுக்கு சிறப்பான மணவாழ்க்கையை அமைத்துத்தரும்.



Click it and Unblock the Notifications