Just In
- 58 min ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- 4 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 9 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 12 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
Don't Miss
- Movies கமலுக்கான ஆதரவா?.. திடீரென உத்தம வில்லன் பட மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பூஜா குமார்!
- News ஓட்டு போட சொந்த ஊர் போனவங்களுக்கு வந்த குட்நியூஸ்.. சென்னைக்கு இன்று முன்பதிவில்லா ஸ்பெஷல் ரயில்
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
உங்களை செல்வந்தராக மாற்ற உங்க வீட்டுல இந்த சின்ன மாற்றங்களை பண்ணுனா போதுமாம்...!
வாஸ்து சாஸ்திரம் என்பது உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்க நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த ஒரு சாஸ்திரம் ஆகும்.
வாஸ்து சாஸ்திரம் என்பது உங்கள் வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் அதிகரிக்க நமது முன்னோர்களால் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த ஒரு சாஸ்திரம் ஆகும். ஒருவர் ஒரு இடத்தில் வசிக்கத் தொடங்கிவிட்டால் அந்த இடத்தின் வாஸ்து அவர்களின் மீது ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடும். அந்த வீட்டில் இருக்கும் நேர்மறை ஆற்றலோ, எதிர்மறை ஆற்றலோ அவர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த சூழ்நிலையில் வாஸ்து சரியாக இருக்கும் இல்லத்தில் நேர்மறை ஆற்றல் அதிகமிருக்கும். இது உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும். குறிப்பாக உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் சில வாஸ்து மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் செல்வத்தை அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இந்த பதிவில் நீங்கள் வீட்டில் செய்யவேண்டிய வாஸ்து மாற்றங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
குறிப்பு 1
அலுவலகம், வீடு எதுவாக இருந்தாலும் சரி வீட்டின் நீச்சல் குளம் அல்லது நீர்தொட்டியை தரைமட்டத்தை விட கீழே கட்டக்கூடாது. இது வாஸ்து சாஸ்திரத்தின் படி தவறான வாஸ்துவாகும்.
குறிப்பு 2
உங்களின் பணப்பெட்டி அல்லது பணம் வைக்கும் அலமாரியை தெற்கு அல்லது தென்மேற்கு சுவருக்கு அருகில் வைக்கவும். எனவே இதனை திறக்கும்போது வடக்கு திசையில் திறக்கும். வடக்கு என்பது குபேர பகவானின் திசையாகும், அந்த திசையில் ஒரு லாக்கரைத் திறப்பது குபேரை மீண்டும் மீண்டும் உங்கள் பணப்பெட்டியை நிரப்ப அனுமதிக்கிறது. மேலும், பண லாக்கரை வேறு எந்த திசையிலும் வைப்பதைத் தவிர்க்கவும்.
குறிப்பு 3
ஒருபோதும், எந்த சூழ்நிலையிலும், பண லாக்கரை தூணிற்கு அடியில் வைக்காதீர்கள், ஏனெனில் இது குடும்பம் அல்லது வணிகத்திற்கு அதிக அழுத்தத்தை அளித்து உங்கள் நிம்மதியை கெடுக்கும்.
MOST READ: உயிர் மேல ஆச இருந்தா உங்க காதலிக்கிட்ட இந்த வார்த்தைங்கள தெரியாமக் கூட சொல்லிறாதீங்க...
குறிப்பு 4
செல்வத்தை ஈர்ப்பதற்கான ஒரு தந்திரம் உங்கள் பண லாக்கருக்கு முன்னால் ஒரு கண்ணாடியை வைப்பது, இதனால் கண்ணாடி பண லாக்கரின் படத்தைக் காட்டுகிறது. இது உங்கள் செல்வம் இரட்டிப்பாகிறது என்பதற்கான அடையாளமாகும்.
குறிப்பு 5
எல்லா நேரங்களிலும் வடகிழக்கு பகுதியை சுத்தமாகவும், திறந்த நிலையிலும் வைத்திருப்பது உங்களை நோக்கி செல்வத்தை ஈர்க்கிறது. இந்த திசையில் படிக்கட்டு போன்றவற்றை கட்டுவதைத் தவிர்க்கவும். எந்திரங்கள் போன்ற கனமான பொருள் எதையும் வடகிழக்கு மூலையில் ஒருபோதும் வைக்க வேண்டாம்.
குறிப்பு 6
வீட்டின் வடகிழக்கு திசையில் உயரமான கட்டிடங்கள் அல்லது கோவில்கள் இருந்தால் அந்த வீட்டில் குடியேறுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது செல்வத்தை இழக்க வழிவகுக்கிறது.உயரமான கட்டிடங்கள் மற்றும் கோயில்கள் இருந்தால், குறைந்தபட்சம் அவற்றின் நிழல் உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் மீது விழாமல் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
MOST READ: ஹைய்யா! கடல் தண்ணி மட்டும் ஏன் உப்பா இருக்குனு ஒருவழியா கண்டுபிடிச்சாச்சு...!
குறிப்பு 7
உங்கள் வீடு மற்றும் அலுவலகத்தின் தெற்கு மற்றும் மேற்கு சுவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு பக்கங்களில் உள்ள சுவர்களை விட உயர்ந்ததாகவும் அடர்த்தியாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
குறிப்பு 8
வாஸ்துவின் படி உங்கள் இல்லத்தின் தென்மேற்கு திசையில் பெரிய மரம் அல்லது செடியை வளர்ப்பது உங்கள் இல்லத்தின் செல்வநிலையை நிலைப்படுத்தும். மேலும் இது குடும்பம் மற்றும் வணிகத்தில் ஏற்படும் துரதிர்ஷ்டங்கள் மற்றும் விபத்துக்களைத் தவிர்க்கவும் இது உதவுகிறது.
MOST READ: வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உங்களுக்கு என்னென்ன ஆபத்துக்கள் ஏற்படுகிறது தெரியுமா?
குறிப்பு 9
செல்வம் முக்கியமாக ஊதா நிறத்தால் குறிக்கப்படுகிறது, எனவே உங்கள் வீட்டில் ஒரு ஊதா நிற செடியை வைத்திருங்கள். ஊதா நிற செடியை வைப்பது கடினமாக இருந்தால், முடிந்தளவு ஊதா நிற தொட்டியில் செடிகளை வளர்க்கவும்.