Latest Updates
-
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்! -
இந்திய ரூபாய்களில் ஏன் காந்தியின் முகம் மட்டும் உள்ளது? காந்திக்கு முன் யாருடைய முகம் இருந்தது தெரியுமா?
தென்னிந்தியாவை மொத்தம் எத்தனை வம்சத்தினர் எத்தனை ஆண்டுகள் ஆண்டார்கள் தெரியுமா?
இந்தியாவை பொறுத்தவரை தென்னிந்தியாவும், வடஇந்தியாவும் பல தளங்களில் வித்தியாசமானயவையாக இருக்கிறது. தென்னிந்தியா பொதுவாக சுற்றுலாத்தங்களுக்கும், அதன் வரலாற்றுக்கும் புகழ் வாய்ந்த பகுதியாகும்.
இந்தியா என்பது நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. மற்ற உலகநாடுகளைக் காட்டிலும் இந்தியா பல விஷயங்களில் மேலோங்கியதாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இந்தியா பல மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் நிறைந்த தனித்துவம் வாய்ந்த நாடாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தென்னிந்தியாவும், வடஇந்தியாவும் பல தளங்களில் வித்தியாசமானயவையாக இருக்கிறது.

தென்னிந்தியா பொதுவாக சுற்றுலாத்தங்களுக்கும், அதன் வரலாற்றுக்கும் புகழ் வாய்ந்த பகுதியாகும். இங்கு இருக்கும் சில சிறப்புகள் வடஇந்தியா மட்டுமின்றி உலகத்தின் எந்த பகுதியிலும் காண முடியாததாக இருக்கிறது. இந்த பதிவில் தென்னிந்தியா பற்றிய சில சுவராயஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

படையெடுப்பாளர்கள்
தென்னிந்தியாவின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்று ஆங்கிலேயர்களின் ஊடுருவலுக்கு முன்பு வரை எந்த படையெடுப்பாளாராலும் தென்னிந்தியாவிற்குள் நுழைய முடியவில்லை. இறுதிவரை தென்னிந்தியா அதன் பூர்வகுடி மன்னர்களால் மட்டுமே ஆளப்பட்டு வந்தது.

பேரரசுகள்
தென்னிந்தியா 18-க்கும் மேற்பட்ட வம்சங்களால் கிட்டதட்ட 4000 ஆண்டுகள் ஆளப்பட்டு வந்தது. இதில் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், சதாவஹனர்கள், பல்லவர்கள், ஹொய்சாலாக்கள், கடம்பாக்கள், வோடியர்கள், ககாதியாக்கள், ராஷ்டிரகூடர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு ஆகியவை மிக முக்கியமான வம்சங்கள் ஆகும். தென்னிந்தியாவில் முஸ்லீம் பேரரசின் எழுச்சி 1323 இல் நடந்தது, பின்னர் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து நிஜாம்களும், பிரிட்டிஷார்களும் ஆட்சி செய்யத் தொடங்கினர்.

பட்டு மற்றும் பருத்தி
தென்னிந்தியாவின் பட்டு புடவைகளுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய புகழ் உள்ளது. கேரளாவின் பட்டுபுடவைகள், தெலங்கானாவின் போச்சம்பள்ளி பட்டுப்புடவைகள், காஞ்சிபுரத்தின் பட்டுப்புடவைகள் போன்றவை உலக அரங்கத்தில் தென்னிந்தியாவின் சின்னமாக உயர்ந்து நிற்கின்றன. பட்டு உற்பத்தியின் தாயகம் என்றே தென்னிந்தியாவை கூறலாம்.

மொழிகள்
இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும் அதில் ஆறு மட்டும்தான் இலக்கிய நயம் வாய்ந்த மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில் 4 மொழிகள் தென்னிந்தியாவை சேர்ந்தது என்பது நாம் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். அனைத்து தென்னிந்தியர்களும் குறைந்தது இரண்டு மொழிகளை தெரிந்து வைத்திருப்பார்கள். உலகின் மிக பழமையான மொழியாக கருதப்படுவது இலத்தீன்தான். ஆனால் அந்த மொழி இப்போது எங்கு வழக்கில் இல்லை, இன்றும் உயிர்ப்புடனும், கோடிக்கணக்கான மக்கள் பேசும் மொழியாகவும் இருப்பதுடன் உலகின் பழமையான மொழியாக இருக்கும் பெருமை தமிழுக்கு மட்டும்தான் உள்ளது.

இயற்கை சார்ந்த இடம்
தென்னிந்தியாவில் 450 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், சுமார் 140 பாலூட்டி இனங்கள், 260 ஊர்வன மற்றும் 175 நீர்வீழ்ச்சிகள் உள்ளன; 6000 க்கும் மேற்பட்ட தாவர இனங்களும் உள்ளன. ஏலக்காய் மற்றும் கருப்பு மிளகு போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் பெரும்பாலானவை தென்னிந்தியாவிலிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பரப்பளவு
இந்திய துணைக்கண்டத்தின் மொத்த பரப்பளவில் 19.31 சதவீதத்தை தென்னிந்தியா உள்ளடக்கியுள்ளது. இந்தியாவின் பரப்பளவில் இது கிட்டதட்ட 245, 480 சதுர மீட்டர் ஆகும். தென்னிந்தியாவில் வெறும் நான்கு மாநிலங்களும், ஒரு யூனியன் பிரேதசம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார முன்னேற்றம்
தென்னிந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் என்பது வடஇந்தியாவை விட இருமடங்கு அதிகமாகும். தென்னிந்தியாவின் ஆண்டு சராசரி பொருளாதார வளர்ச்சி 17 சதவீதம் ஆகும், வடஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெறும் 8 சதவீதம்தான். இந்தியாவின் மொத்த GDP-ல் 1.7 சதவீதம் தென்னிந்தியாவை சார்ந்து இருக்கிறது.

மசாலாப்பொருட்கள்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே மசாலாப் பொருட்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா ஒரு வருடத்திற்கு 1.5 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்கிறது. இதில் பாதிக்கும் மேலான அளவு தென்னிந்தியாவில் இருந்து வருகிறது. இந்த பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது, அதனால்தான் போர்ச்சுக்கல் தென்னிந்தியாவை குறிவைத்து முதலில் வந்தது.



Click it and Unblock the Notifications
