Latest Updates
-
இன்றைய ராசிபலன் 26 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (26 July 2026-01 August 2026)- ஜூலை கடைசி வாரம் இந்த 6 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
சன்டே இப்படி சிக்கன் வறுவல் செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட மிகப்பெரிய பலவீனம் என்னன்னு சொல்றோம்! -
சனி வக்ர பெயர்ச்சி: ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா? -
முள்ளங்கியை இந்த ஸ்டைலில் சாம்பார் செய்யுங்க, பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப நைட் 8 மணிக்கு மேல் இந்த 6 பழக்கங்களை வெச்சுக்காதீங்க.. -
சனி-சூரியனால் உருவாகும் நவபஞ்ச திருஷ்டி யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம்
தென்னிந்தியாவை மொத்தம் எத்தனை வம்சத்தினர் எத்தனை ஆண்டுகள் ஆண்டார்கள் தெரியுமா?
இந்தியாவை பொறுத்தவரை தென்னிந்தியாவும், வடஇந்தியாவும் பல தளங்களில் வித்தியாசமானயவையாக இருக்கிறது. தென்னிந்தியா பொதுவாக சுற்றுலாத்தங்களுக்கும், அதன் வரலாற்றுக்கும் புகழ் வாய்ந்த பகுதியாகும்.
இந்தியா என்பது நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. மற்ற உலகநாடுகளைக் காட்டிலும் இந்தியா பல விஷயங்களில் மேலோங்கியதாகவும், தனித்துவம் வாய்ந்ததாகவும் உள்ளது. இந்தியா பல மதங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் நிறைந்த தனித்துவம் வாய்ந்த நாடாக உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை தென்னிந்தியாவும், வடஇந்தியாவும் பல தளங்களில் வித்தியாசமானயவையாக இருக்கிறது.

தென்னிந்தியா பொதுவாக சுற்றுலாத்தங்களுக்கும், அதன் வரலாற்றுக்கும் புகழ் வாய்ந்த பகுதியாகும். இங்கு இருக்கும் சில சிறப்புகள் வடஇந்தியா மட்டுமின்றி உலகத்தின் எந்த பகுதியிலும் காண முடியாததாக இருக்கிறது. இந்த பதிவில் தென்னிந்தியா பற்றிய சில சுவராயஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

படையெடுப்பாளர்கள்
தென்னிந்தியாவின் மிகப்பெரிய சிறப்புகளில் ஒன்று ஆங்கிலேயர்களின் ஊடுருவலுக்கு முன்பு வரை எந்த படையெடுப்பாளாராலும் தென்னிந்தியாவிற்குள் நுழைய முடியவில்லை. இறுதிவரை தென்னிந்தியா அதன் பூர்வகுடி மன்னர்களால் மட்டுமே ஆளப்பட்டு வந்தது.

பேரரசுகள்
தென்னிந்தியா 18-க்கும் மேற்பட்ட வம்சங்களால் கிட்டதட்ட 4000 ஆண்டுகள் ஆளப்பட்டு வந்தது. இதில் சேரர்கள், சோழர்கள், பாண்டியர்கள், சாளுக்கியர்கள், சதாவஹனர்கள், பல்லவர்கள், ஹொய்சாலாக்கள், கடம்பாக்கள், வோடியர்கள், ககாதியாக்கள், ராஷ்டிரகூடர்கள் மற்றும் விஜயநகரப் பேரரசு ஆகியவை மிக முக்கியமான வம்சங்கள் ஆகும். தென்னிந்தியாவில் முஸ்லீம் பேரரசின் எழுச்சி 1323 இல் நடந்தது, பின்னர் 18 ஆம் நூற்றாண்டிலிருந்து நிஜாம்களும், பிரிட்டிஷார்களும் ஆட்சி செய்யத் தொடங்கினர்.

பட்டு மற்றும் பருத்தி
தென்னிந்தியாவின் பட்டு புடவைகளுக்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய புகழ் உள்ளது. கேரளாவின் பட்டுபுடவைகள், தெலங்கானாவின் போச்சம்பள்ளி பட்டுப்புடவைகள், காஞ்சிபுரத்தின் பட்டுப்புடவைகள் போன்றவை உலக அரங்கத்தில் தென்னிந்தியாவின் சின்னமாக உயர்ந்து நிற்கின்றன. பட்டு உற்பத்தியின் தாயகம் என்றே தென்னிந்தியாவை கூறலாம்.

மொழிகள்
இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும் அதில் ஆறு மட்டும்தான் இலக்கிய நயம் வாய்ந்த மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதில் 4 மொழிகள் தென்னிந்தியாவை சேர்ந்தது என்பது நாம் பெருமைப்பட வேண்டிய ஒரு விஷயமாகும். அனைத்து தென்னிந்தியர்களும் குறைந்தது இரண்டு மொழிகளை தெரிந்து வைத்திருப்பார்கள். உலகின் மிக பழமையான மொழியாக கருதப்படுவது இலத்தீன்தான். ஆனால் அந்த மொழி இப்போது எங்கு வழக்கில் இல்லை, இன்றும் உயிர்ப்புடனும், கோடிக்கணக்கான மக்கள் பேசும் மொழியாகவும் இருப்பதுடன் உலகின் பழமையான மொழியாக இருக்கும் பெருமை தமிழுக்கு மட்டும்தான் உள்ளது.

இயற்கை சார்ந்த இடம்
தென்னிந்தியாவில் 450 க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், சுமார் 140 பாலூட்டி இனங்கள், 260 ஊர்வன மற்றும் 175 நீர்வீழ்ச்சிகள் உள்ளன; 6000 க்கும் மேற்பட்ட தாவர இனங்களும் உள்ளன. ஏலக்காய் மற்றும் கருப்பு மிளகு போன்ற பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் பெரும்பாலானவை தென்னிந்தியாவிலிருந்து வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பரப்பளவு
இந்திய துணைக்கண்டத்தின் மொத்த பரப்பளவில் 19.31 சதவீதத்தை தென்னிந்தியா உள்ளடக்கியுள்ளது. இந்தியாவின் பரப்பளவில் இது கிட்டதட்ட 245, 480 சதுர மீட்டர் ஆகும். தென்னிந்தியாவில் வெறும் நான்கு மாநிலங்களும், ஒரு யூனியன் பிரேதசம் மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாதார முன்னேற்றம்
தென்னிந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் என்பது வடஇந்தியாவை விட இருமடங்கு அதிகமாகும். தென்னிந்தியாவின் ஆண்டு சராசரி பொருளாதார வளர்ச்சி 17 சதவீதம் ஆகும், வடஇந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வெறும் 8 சதவீதம்தான். இந்தியாவின் மொத்த GDP-ல் 1.7 சதவீதம் தென்னிந்தியாவை சார்ந்து இருக்கிறது.

மசாலாப்பொருட்கள்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகிலேயே மசாலாப் பொருட்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராக இந்தியா முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்தியா ஒரு வருடத்திற்கு 1.5 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்கிறது. இதில் பாதிக்கும் மேலான அளவு தென்னிந்தியாவில் இருந்து வருகிறது. இந்த பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது, அதனால்தான் போர்ச்சுக்கல் தென்னிந்தியாவை குறிவைத்து முதலில் வந்தது.



Click it and Unblock the Notifications