Just In
- 1 hr ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 2 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 3 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 4 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- News தோல்வி உறுதி என்றதுமே "ஒப்பாரி" பாட ஆரம்பிச்சிட்டாங்க.. பாஜக வேட்பாளர்களை விமர்சித்த கி.வீரமணி!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் கிராம்பை சேர்த்து எரிங்க.. அப்பறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க..
வாஸ்துப்படி, வீட்டில் தினமும் கற்பூரத்தை ஏற்றி வீட்டைச் சுற்றி காண்பித்து வந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருப்பதுடன், வீட்டில் சந்தோஷம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவையும் நிறைந்திருக்கும்.
தினமும் கடவுளை வழிபடும் போது விளக்கேற்றி, ஊதுபத்தி, கற்பூரம் ஆகியவற்றை காண்பித்து வழிபடுவது வழக்கம். மேலும் சுப காரியங்களின் போதும் இம்மாதிரி செய்யப்படுவது வழக்கம். ஏனெனில் இவ்வாறு செய்வது சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தி, நேர்மறை ஆற்றலை சூழ்ந்திருக்கச் செய்வதாக நம்பப்படுகிறது.
மேலும் வாஸ்துப்படி, வீட்டில் தினமும் கற்பூரத்தை ஏற்றி வீட்டைச் சுற்றி காண்பித்து வந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைந்திருப்பதுடன், வீட்டில் சந்தோஷம், அமைதி மற்றும் செழிப்பு ஆகியவையும் நிறைந்திருக்கும். இது தவிர ஒருவர் தங்களின் வீட்டில் தினமும் ஒரு ரூபாய்க்கு கிடைக்கும் கற்பூரத்தை தினமும் ஏற்றி வந்தால், வீட்டில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தைக் காணலாம். மேலும் பல பிரச்சனைகளைப் போக்கவும் கற்பூரம் உதவி புரிகிறது. இப்போது தினமும் வீட்டில் கற்பூரத்தை ஏற்றுவதால் ஏற்படும் மாற்றங்களைக் காணலாம்.
வாஸ்து தோஷத்தை நீக்கும்
வீட்டின் வாஸ்து தோஷத்தை நீக்க, வீட்டின் அனைத்து மூலைகளிலும் ஒரு கற்பூரத்தை வைக்க வேண்டும். இதன் மூலம் வீட்டின் வாஸ்து தோஷங்கள் நீங்குவதோடு, நேர்மறை ஆற்றலும் வீட்டில் சூழ்ந்து இருக்கும். கற்பூரங்கள் கரைந்து போனால், வாஸ்து தோஷம் நீங்கிவிட்டது என்பதை புரிந்து கொள்ளுங்கள். வேண்டுமானால், மீண்டும் கற்பூரங்களை வீட்டின் மூலையில் வைத்துக் கொள்ளலாம்.
மன அழுத்தம் நீங்கும்
சாஸ்திரங்களின் படி, வீட்டில் தூப தீபம் அல்லது கற்பூரத்தை ஏற்று வைப்பதனால், மனம் அமைதியாகும். இதனால் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம். எப்படியெனில், தூப தீபம் அல்லது கற்பூரத்தில் இருந்து வெளிவரும் நறுமணம் வீட்டில் பரவுவதால், இது மனதை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது. இதனுடன் மன அழுத்தமும் குறைகிறது. எனவே தினமும் காலை மற்றும் மாலையில் வீட்டில் விளக்கு மற்றும் கற்பூரத்தை ஏற்றி வழிபடுங்கள்.
வீட்டில் சண்டைகள் குறையும்
வீட்டில் கற்பூரத்தை ஏற்றுவதால், வீட்டில் நேர்மறை ஆற்றல் பரவ ஆரம்பிக்கிறது. இது வாழ்வில் முன்னேற்றம் மற்றும் வெற்றிக்கான பாதையைத் திறக்கிறது. இதன் மூலம் குடும்பத்தில் சண்டைகள் குறைந்து, மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு ஆகியவை நீடிக்கிறது.
இனிமையான திருமண வாழ்க்கை
நம்பிக்கைகளின் படி, கற்பூரத்தை தினமும் சில்வர் அல்லது பித்தளை பௌலில் தான் ஏற்ற வேண்டும். இது மட்டுமின்றி, படுக்கையறையை சுத்தம் செய்த பின்னர் தினமும் கற்பூரத்தை ஏற்ற வேண்டும். இதனால் திருமண வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கி, இனிமையாக இருக்கும்.
நிதி நிலைமை வலுவாகும்
தினமும் பணி செய்யும் இடம் அல்லது வீட்டில் 3 கற்பூரத்துடன் கிராம்பையும் சேர்த்து எரிக்க வேண்டும். இதனால் பொருளாதார நிலைமை வலுவாகும் என்ற மத நம்பிக்கை ஒன்று உள்ளது. மேலும் இச்செயலால் வாழ்வில் உள்ள உணவு மற்றும் பணம் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும்.
அறிவியல் காரணங்கள்
வீட்டில் கற்பூரம் மற்றும் தூப-தீபத்தை ஏற்றுவதற்கு பின்னணியில் ஒரு அறிவியல் காரணங்களும் உள்ளன. அது என்னவெனில், கற்பூரம் மற்றும் தூப தீபத்தை வீட்டில் ஏற்றுவதால், வீட்டினுள் சுற்றிக் கொண்டிருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. இதனால் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இது தவிர, வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும். இதன் மூலம் மனம் அமைதியாகவும், சந்தோஷமாகவும் இருக்கும்.