மகாசிவராத்திரி அன்று இந்த விஷயங்களை தெரியாம கூட செஞ்சுராதீங்க... இல்லனா சிவனின் கோபத்துக்கு ஆளாகிருவீங்க...!

சிவபெருமானை தரிசிக்கவும், வழிபடவும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் அருகிலுள்ள சிவ ஸ்தலங்களில் கூடும் மாபெரும் நிகழ்வாக மகாசிவராத்திரி இருக்கிறது.

மகாசிவராத்திரி மிக அருகில் வந்துவிட்டது. இந்துக்களின் பண்டிகையில் இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். சிவபெருமானை தரிசிக்கவும், வழிபடவும் இலட்சக்கணக்கான பக்தர்கள் தங்கள் அருகிலுள்ள சிவ ஸ்தலங்களில் கூடும் மாபெரும் நிகழ்வாக மகாசிவராத்திரி இருக்கிறது.

Things Should Not Do On Mahashivratri

மகாசிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபடுபவர்கள் அந்த ஆண்டு முழுவதும் சிவபெருமானின் அருளை பெறுவதாக கூறப்படுகிறது. இந்த நாளில் ஈசனை மகிழ்விக்க செய்ய வேண்டிய செயல்கள் பல உள்ளது, அதேபோல நமக்கேத் தெரியாமல் நாம் செய்யும் சில செயல்கள் ஈசனின் கோபத்தையும் தூண்டும். அதன்படி மகாசிவராத்திரி அன்று செய்யக்கூடாத செயல்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கருப்பு உடை அணிய வேண்டாம்

கருப்பு உடை அணிய வேண்டாம்

கருப்பு வலிமையான நிறமாக இருக்கலாம் ஆனால் மகாசிவராத்திரி பூஜைகளுக்கு இது நல்லதல்ல. இந்து சடங்குகளில் பெரும்பாலானவை பக்தர்கள் கறுப்பு நிற ஆடைகளை அணிவதைத் தடைசெய்கின்றன. எனவே, நீங்கள் விரதம் இருந்தால் அல்லது சிவன் கோவிலுக்குச் செல்கிறீர்கள் என்றால், சிவப்பு, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் போன்ற வண்ணங்களைத் தேர்வுசெய்து அணிந்து கொள்ளுங்கள்.

 சில உணவுகளைத் தவிர்க்கவும்

சில உணவுகளைத் தவிர்க்கவும்

இந்த நாளில், பக்தர்கள் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. விரதம் மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது மற்றும் பக்தர்கள் தண்ணீர், பழங்கள், பால் மற்றும் தேநீர் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

வயதானவர்களை அவமதிக்காதீர்கள்

வயதானவர்களை அவமதிக்காதீர்கள்

இது எல்லா நேரங்களிலும் செய்ய வேண்டிய ஒன்றாகும், இருப்பினும் மகாசிவராத்திரி அன்று வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு எந்த காயமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உதவ கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு அவர்களுடன் மோதல்களைத் தவிர்க்க முயற்சிக்கவும்.

சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்

சிவபெருமானுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட வேண்டாம்

தெய்வத்திற்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை உண்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம், ஆனால் மகாசிவராத்திரிக்கு ஒரு சிறப்பு விதி உள்ளது. சிவலிங்கத்திற்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை ஒருபோதும் சாப்பிடக்கூடாது. இது துரதிர்ஷ்டத்தையும் நோய்களையும் அழைக்கிறது என்று நம்பப்படுகிறது.

சிவபெருமானுக்கு துளசி வைத்து வழிபடாதீர்கள்

சிவபெருமானுக்கு துளசி வைத்து வழிபடாதீர்கள்

பண்டைய இந்து வேதங்களின்படி, சிவபெருமானுக்கு ஒருபோதும் துளசி வழங்கக்கூடாது. காரணம், துளசி விஷ்ணுவுக்கு மட்டுமே வழங்கப்பட்ட ஒரு நல்ல பிரசாதமாக கருதப்படுகிறது. எனவே சிவபெருமான் பூஜைகளிலிருந்து துளசி தடை செய்யப்பட்டுள்ளது.

மஞ்சளை பயன்படுத்த வேண்டாம்

மஞ்சளை பயன்படுத்த வேண்டாம்

சிவபெருமான் ஆண் சாரம் அல்லது ‘புருஷ் தத்வா' உருவகமாக இருக்கும்போது, மஞ்சள் பெண்களுக்கான சாரமாக கருதப்படுகிறது. எனவே சிவபெருமானை வழிபடும் போது ஒருபோதும் மஞ்சள் பயன்படுத்தக்கூடாது.

சம்பா மற்றும் கேதகி மலர்களை பயன்படுத்த வேண்டாம்

சம்பா மற்றும் கேதகி மலர்களை பயன்படுத்த வேண்டாம்

புராணங்களின் படி, சிவபெருமான் இந்த இரண்டு மலர்களை சபித்திருந்தார், எனவே சம்பா மற்றும் கேதகி இரண்டையும் சாதாரண நாட்களின் சிவபூஜையில் கூட பயன்படுத்தக்கூடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Wednesday, March 10, 2021, 15:16 [IST]
Desktop Bottom Promotion