Latest Updates
-
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசையில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. வீட்டில் பணமும், மகிழ்ச்சியும் பெருகும்! -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் வாழைக்காய் கூட்டு ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
இன்று கடக ராசியில் உதயமாகும் குரு பகவான்: இந்த 6 ராசிக்காரங்க பண விஷயத்துல உஷாரா இருக்கணும்.. -
Independence Day 2026: ஆகஸ்ட் 16-ல் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வினோத இந்திய நகரம் எது தெரியுமா? -
கோதுமை மிளகு பொங்கலும், தக்காளி குழம்பும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 12 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா?
மகர ராசியில் சனியுடன் செவ்வாய் இணைவதால் இந்த 4 ராசிக்காரங்க அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க...
ஜோதிடத்தின் படி, சனிக்கும் செவ்வாய்க்கும் இடையே பகை உணர்வு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனியும், செவ்வாயும் ஒரே ராசியில் பயணித்தால், நிறைய கெட்ட பலன்களை பெறக்கூடும்.
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுகின்றன. 2022 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரக பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதில் பிப்ரவரி மாதம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த மாதம் பஞ்சகிரஹி யோக சேர்க்கை நடக்கப் போகிறது. ஜோதிடத்தின் படி, வலிமைமிக்க மற்றும் கிரகங்களின் தளபதியான செவ்வாய் 2022 பிப்ரவரி 26 ஆம் தேதி மகர ராசிக்கு செல்லப் போகிறார்.

பிருத்விபுத்திரன் செவ்வாய் 2022 பிப்ரவரி 26 அன்று மாலை 3.45 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் கும்ப ராசிக்குள் நுழைவார். ஏற்கனவே மகர ராசியில் நுழையும் செவ்வாய் மக்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் கடக ராசியில் வலுவிழந்தும், மகர ராசியில் உச்சத்திலும் இருப்பார்.

சனி பகவான் ஆளும் மகரம்
ஏற்கனவே சனி பகவான் மகர ராசியில் உள்ளார். இந்நிலையில் செவ்வாய் மகர ராசிக்கு செல்லவுள்ளார். ஜோதிடத்தின் படி, சனிக்கும் செவ்வாய்க்கும் இடையே பகை உணர்வு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனியும், செவ்வாயும் ஒரே ராசியில் பயணித்தால், நிறைய கெட்ட பலன்களை பெறக்கூடும். அதிலும் 4 ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள். இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைப் பார்ப்போம்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை நடக்கிறது. இந்த வீடு திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மையைக் குறிக்கிறது. ஆகவே இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் சில சிரமங்களை சந்திக்கக்கூடும். அப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் புதிய திட்டங்களில் பணிபுரியும் போது கவனமாக செயல்பட வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை நடக்கிறது. இதனால் பல பிரச்சனைகளை இக்காலத்தில் சந்திக்க நேரிடும். சட்டம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் ரகசிய எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சில கடுமையான நோய்களால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நடக்கிறது. இதனால் கன்னி ராசிக்காரர்கள் பணியிடம் மற்றும் வியாபாரத்தில் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மன வருத்தமடைவீர்கள். உங்கள் குழந்தைகள் பிரச்சனைகளை சந்திக்கலாம்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நடக்கிறது. இதனால் பணம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் ஒரு புதிய ஒப்பந்தம் உங்களுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே புதிய ஒப்பந்தங்களை ஏற்கும் முன் கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications