Latest Updates
-
வார ராசிபலன் (22 March 2026-28 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு சிரமங்கள் அதிகரிக்கும்.. -
Tamil Nadu Election 2026: பாரம்பரிய தமிழ் உணவுகளை உட்கொள்ளும் தமிழகத் தலைவர்கள்! -
முட்டையும், பிரட்டும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
கோடையில் எப்பவும் பளிச்சுன்னு பிரகாசமா தெரியணுமா? அப்ப பப்பாளியை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
புதன் பெயர்ச்சியால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்கு தொழிலில் டபுள் லாபம் கிடைக்கும்... -
இந்த ரசத்தை அடிக்கடி செஞ்சு சாப்பிடுங்க.. உடல் கொழுப்பும், எடையும் சர்ர்-ன்னு குறையும்.. -
Ramzan Eid 2026: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டு அஜீரண கோளாறு வரக்கூடாதா? அப்ப இத ஒரு டம்ளர் குடிங்க போதும்.. -
பீன்ஸ் பருப்பு கூட்டு ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு கொடுங்க... பீன்ஸ் பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க! -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
ரம்ஜான் ஸ்பெஷல் தெலுங்கானா மட்டன் கறி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
மகர ராசியில் சனியுடன் செவ்வாய் இணைவதால் இந்த 4 ராசிக்காரங்க அதிக பிரச்சனைகளை சந்திக்கப் போறாங்க...
ஜோதிடத்தின் படி, சனிக்கும் செவ்வாய்க்கும் இடையே பகை உணர்வு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனியும், செவ்வாயும் ஒரே ராசியில் பயணித்தால், நிறைய கெட்ட பலன்களை பெறக்கூடும்.
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுகின்றன. 2022 ஆம் ஆண்டில் பல முக்கிய கிரக பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. அதில் பிப்ரவரி மாதம் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த மாதம் பஞ்சகிரஹி யோக சேர்க்கை நடக்கப் போகிறது. ஜோதிடத்தின் படி, வலிமைமிக்க மற்றும் கிரகங்களின் தளபதியான செவ்வாய் 2022 பிப்ரவரி 26 ஆம் தேதி மகர ராசிக்கு செல்லப் போகிறார்.

பிருத்விபுத்திரன் செவ்வாய் 2022 பிப்ரவரி 26 அன்று மாலை 3.45 மணிக்கு தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறார். இந்த ராசியில் ஏப்ரல் 7 ஆம் தேதி வரை இருப்பார். அதன் பின் கும்ப ராசிக்குள் நுழைவார். ஏற்கனவே மகர ராசியில் நுழையும் செவ்வாய் மக்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேஷம் மற்றும் விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய் கடக ராசியில் வலுவிழந்தும், மகர ராசியில் உச்சத்திலும் இருப்பார்.

சனி பகவான் ஆளும் மகரம்
ஏற்கனவே சனி பகவான் மகர ராசியில் உள்ளார். இந்நிலையில் செவ்வாய் மகர ராசிக்கு செல்லவுள்ளார். ஜோதிடத்தின் படி, சனிக்கும் செவ்வாய்க்கும் இடையே பகை உணர்வு உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனியும், செவ்வாயும் ஒரே ராசியில் பயணித்தால், நிறைய கெட்ட பலன்களை பெறக்கூடும். அதிலும் 4 ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திப்பார்கள். இப்போது அந்த 4 ராசிக்காரர்கள் யார்யார் என்பதைப் பார்ப்போம்.

கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை நடக்கிறது. இந்த வீடு திருமண வாழ்க்கை மற்றும் கூட்டாண்மையைக் குறிக்கிறது. ஆகவே இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் சில சிரமங்களை சந்திக்கக்கூடும். அப்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும் புதிய திட்டங்களில் பணிபுரியும் போது கவனமாக செயல்பட வேண்டும்.

சிம்மம்
சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் செவ்வாய் மற்றும் சனி சேர்க்கை நடக்கிறது. இதனால் பல பிரச்சனைகளை இக்காலத்தில் சந்திக்க நேரிடும். சட்டம் தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் ரகசிய எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்கள் சில கடுமையான நோய்களால் அவதிப்பட வேண்டியிருக்கும்.

கன்னி
கன்னி ராசியின் 5 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நடக்கிறது. இதனால் கன்னி ராசிக்காரர்கள் பணியிடம் மற்றும் வியாபாரத்தில் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு மன வருத்தமடைவீர்கள். உங்கள் குழந்தைகள் பிரச்சனைகளை சந்திக்கலாம்.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் சனி மற்றும் செவ்வாய் சேர்க்கை நடக்கிறது. இதனால் பணம் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் ஒரு புதிய ஒப்பந்தம் உங்களுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே புதிய ஒப்பந்தங்களை ஏற்கும் முன் கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications











