Latest Updates
-
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த செடிகளை வளர்த்தால் குளிர்ச்சியும் பணமும் தேடி வரும்! -
100% மருந்து மாத்திரையின்றி கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..
இந்த 5 ராசிக்காரங்க சரியான பயந்தாங்கோலியா இருப்பாங்களாம்...இவங்க கூட இருக்குறது ரொம்ப கஷ்டமாம்!
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆட்டோஃபோபியா, அதாவது தனியாக இருக்க பயம். துலாம் ராசிக்காரர்களுக்கு சொந்தபந்தங்களுடன் மக்கள் கூட்டத்துடன் இருக்க மிகவும் பிடிக்கும்.
நீங்கள் மிகவும் தைரியமான நபரா? இல்லை மிகவும் பயம் கொள்ளும் நபரா? ஒவ்வொரு மனிதர்களிடத்திலும் பயம் என்ற உணர்வு இருக்கும். இந்த பயத்தை அவர்களால் கட்டுப்படுத்த முடியும். ஆனால், சிலர் மிகவும் பயந்த நபராக இருப்பார்கள். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தங்களைத் துன்புறுத்தும் ஒன்றைப் பற்றிய ஆழ்ந்த பயம் இருக்கும். ஒருவருக்கு ஏற்படக்கூடிய மிகப்பெரிய பயம் ஃபோபியா என்று அழைக்கப்படும். ஃபோபியா இருப்பது ஒரு நபருக்கு மிகவும் கவலையாகவும் சங்கடமாக இருக்கும். இது ஒரு நபரை கவலையடையச் செய்யலாம் மற்றும் அன்றாட வாழ்க்கையை அவர்களுக்கு கடினமாக்கலாம்.

ஜோதிடம் ஒரு நபரின் ஆளுமையின் நுணுக்கங்களை வானியல் ராசி அறிகுறிகளுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலம் புரிந்துகொள்ளலாம். எனவே, கொடிய ஃபோபியாக்கள் ஏற்படக்கூடிய ராசி அறிகுறிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு காமோபோபியா அதாவது அர்ப்பணிப்பு பயம் உள்ளது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு விஷயத்தை கடைபிடிக்க பயப்படுகிறார்கள். அவர்கள் எப்போதும் ஆர்வமாக இருக்கிறார்கள் மற்றும் பரிசோதனை செய்ய தயாராக இருக்கிறார்கள். ஆனால், இந்த ராசிக்காரர்கள் ஒரு காரியத்தில் ஈடுபட அதிகம் யோசிப்பார்கள். ஏனென்றால் அவர்கள் விஷயங்களை இழக்க நேரிடும் எனப் பயப்படுகிறார்கள்.

கடகம்
கடக ராசி நேயர்களுக்கு அகோராபோபியா உள்ளது. அதாவது நெரிசலான இடங்களில் இருக்க இந்த ராசிக்காரர்களுக்கு பயம். நெரிசலான இடத்தில் இருப்பதன் பயத்தை அவர்களால் சமாளிக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் விரும்பத்தகாத சூழ்நிலைகளைச் சமாளிக்க வேண்டும் மற்றும் பலருடன் பழக வேண்டும் என்ற நிர்பந்தம் இருக்கலாம். அதை இந்த ராசிக்காரர்கள் செய்ய விரும்பவில்லை.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஆட்டோஃபோபியா, அதாவது தனியாக இருக்க பயம். துலாம் ராசிக்காரர்களுக்கு சொந்தபந்தங்களுடன் மக்கள் கூட்டத்துடன் இருக்க மிகவும் பிடிக்கும். ஏனென்றால் அவர்களைச் சுற்றி மக்கள் இருப்பதை விரும்புகிறார்கள். அது அவர்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தருகிறது. மேலும், அது இந்த ராசிக்காரர்களுக்கு சமநிலையை அளிக்கிறது. தனிமையில் இருப்பதை நினைத்து அவர்கள் மிகவும் பயம்கொள்கிறார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு பிஸ்தாந்த்ரோபோபியா உள்ளது, அதாவது மக்களை நம்பும் பயம். விருச்சிக ராசிக்காரர்கள் மக்களை நம்புவது மிகவும் கடினம். அவர்கள் நம்பாத நபர்களுடன் இருப்பது அவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அவர்களால் சாதாரணமாக இருக்க முடியாது. அதனால், இந்த ராசிக்காரர்களால் மக்களை எளிதில் நம்ப முடியாது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மைசோபோபியா உள்ளது. அதாவது கிருமிகள் பற்றிய பயம் உள்ளது. அவர்கள் இருக்கும் இடத்தை சுத்தம் செய்வதில் ஒ.சி.டி.யை(OCD) உண்டாக்குவதன் மூலம் கிருமிகளைப் பற்றி மிகவும் பயப்படுகிறார்கள். அப்செசிவ்-கம்பல்சிவ் கோளாறு (OCD) தேவையற்ற எண்ணங்கள் மற்றும் அச்சங்களை (ஆவேசங்கள்) கொண்டிருப்பது. கிருமிகள் அவர்களின் பயத்தை அதிகரிக்கின்றன. இது அவர்களின் அன்றாட வாழ்க்கையை பெரிய அளவில் பாதிக்கிறது.

இதர ராசிக்காரர்கள்
மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, தனுசு, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பயம் இருந்தாலும் அது அவர்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்காது. அவர்கள் தங்கள் பயத்தை எதிர்த்துப் போராடுவதில் பெரும் முயற்சி செய்கிறார்கள்.



Click it and Unblock the Notifications