Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
கருட புராணம் கூறும் நரகத்தில் இருக்கும் நான்கு வாசல்கள்... உங்களுக்கு காத்திருக்கும் வாசல் எது தெரியுமா?
இந்தியாவில் பலவிதமான புராணங்கள் உள்ளன, அதில் ஒவ்வொரு புராணமும் தனக்கென தனித்துவத்தைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் பலவிதமான புராணங்கள் உள்ளன, அதில் ஒவ்வொரு புராணமும் தனக்கென தனித்துவத்தைக் கொண்டுள்ளது. புராணங்களிலேயே மிகவும் பிரபலமான மற்றும் முக்கியமான புராணமெனில் அது கருட புராணமாகும். ஏனெனில் கருட புராணம் இறப்பிற்கு பிறகான நமது வாழ்க்கையை நிர்ணயிப்பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

மனிதர்களின் பல வகையான பாவங்கள் மற்றும் அவற்றின் தண்டனைகள் கருட புராணத்தில் விளக்கப்பட்டுள்ளன. இந்து நூல்களின்படி பதினெட்டு மகாபுராணங்கள் உள்ளன. கருட புராணம் அவற்றில் ஒன்று, இது கருடனுக்கும் (விஷ்ணுவின் பறவை-மனிதன் வாகனம்) மற்றும் சிவபெருமானுக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில் வாழ்க்கை மற்றும் இறப்பு செயல்முறையை விளக்குகிறது.

கருடனின் கேள்விகள்
கருடன் பின்வரும் கேள்விகளைக் கேட்டார்: எந்த பாவங்கள் ஒருவரின் ஆன்மாவை நரகத்திற்கு இட்டுச் செல்லும்? ஆன்மாக்கள் ஏன் வைதரணியில் விழுகின்றன? மேலும் அவர்கள் ஏன் நரகத்திற்குச் செல்கிறார்கள்? சிவபெருமான் தனது ஒவ்வொரு கேள்வியையும் விரிவாக விளக்கினார்.

நான்கு நுழைவாயில்கள்
கருட புராணத்தின் படி, நான்கு நுழைவாயில்கள் உள்ளன, இதன் மூலம் ஒரு ஆத்மா இந்த நான்கு நுழைவாயில்களில் ஒன்றின் வழியாக வேறொரு உலகத்திற்குள் நுழைகிறது. அவை பூர்வ் நுழைவாயில், பஸ்சிம் நுழைவாயில், உத்தர நுழைவாயில் மற்றும் தக்ஷின நுழைவாயில். நம்முடைய புவி வாழ்வின் அடிப்படையில் நாம் நமக்கான வாயிலை மரணத்திற்கு பின் அடைவோம்.

பூர்வ் நுழைவாயில்
பணம், உணவு, தங்குமிடம், கவனிப்பு மற்றும் பிற தன்னலமற்ற சேவைகளின் வடிவத்தில் எப்போதும் உலகுக்குத் திருப்பிக் கொடுத்தவர்கள் பூர்வ துவாரத்தின் வழியாக செல்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ளவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற்றவர்கள் இந்த கதவு வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

பாஸ்சிம் நுழைவாயில்
கடவுளை வணங்குவதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் இந்த கதவு வழியாக செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். வாழ்க்கையின் பொய்யான உண்மைகளை கடந்து கடவுளிடம் சரணடைபவர்கள் பாஸ்சிம் நுழைவாயிலைக் கடந்து செல்கிறார்கள்.

உத்தர நுழைவாயில்
உலகெங்கிலும் உள்ள அனைத்து முனிவர்கள், துறவிகள் மற்றும் புனிதர்கள் தங்கள் உடலை இந்த உலகில் விட்டுவிட்டு உத்தர நுழைவாயிலின் வழியாக செல்கிறார்கள். உண்மையில் மரணத்திற்கு முன் இறந்து சமாதி அடையும் மக்கள் இந்த நுழைவாயிலை அடைகிறார்கள்.

தக்ஷின நுழைவாயில்
உலகெங்கிலும் உள்ள தவறு செய்பவர்கள் அனைவரும் தக்ஷின் நுழைவாயில் வழியாக செல்ல வேண்டும், இது இறுதியில் நரகத்திற்கு வழிவகுக்கிறது. ஆன்மா நுழையும் பரிமாணத்தை எம லோகம் அல்லது எம உலகம் 'நரகம்' என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் எமராஜா மக்களின் செயல்களை ஆய்வு செய்யும் எமலோகத்தின் கடவுளாக இருக்கிறார்.

எமதர்மராஜா
எமதர்மராஜா நரகத்தைக் கவனிக்கிறார். அவர் மக்களின் தவறான செயல்களைக் கவனித்து, அவர்களின் கர்ம கணக்கின்படி அவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். கருடபுராணத்தில் கர்மாவின் வகைகள் மற்றும் தண்டனைகள் கூட விளக்கப்பட்டுள்ளன.

வைதரணி நதி
சுயநலத்தின் அடிப்படையில் தேர்வு செய்யும் மக்கள் வைதரணி நதி வழியாகத்தான் செல்ல வேண்டும். இந்து புராணங்களின்படி, இந்த நதி பூமிக்கும் நரகத்திற்கும் இடையில் உள்ளது, இது ஆன்மாக்களை தூய்மைப்படுத்துவதாக கருதப்படுகிறது.

தண்டனைகள்
கருட புராணத்தின் படி, ஆத்மாக்கள் தங்கள் கர்மக் கணக்கின் சுழற்சியை மூடுவதற்கு பூமிக்கு திரும்பி வர வேண்டும், அங்கு அவர்கள் தங்கள் கடந்தகால கர்மாக்களின் முடிவுகளை தற்போதைய வாழ்க்கையில் தங்கள் பிராப்தமாகப் பெறுகிறார்கள்.



Click it and Unblock the Notifications











