Just In
- 13 min ago இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- 49 min ago யூரிக் அமிலத்தை குறைக்கனுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
- 1 hr ago எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- 1 hr ago பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
Don't Miss
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Movies ஸ்டார் ஹோட்டலில் திருமண நாள் கொண்டாட்டம்.. அஜித் மடியில் ஏஞ்சல் போல அமர்ந்திருக்கும் ஷாலினி!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
மொபைல் அதிகமா யூஸ் பண்ணதால வெறிபிடித்து சுவரில் போய் முட்டிக்கொள்ளும் இளைஞன்...
மொபைல் போனை மிக அதிகமாகப் பயன்படுத்தியதால் நரம்புக்கோளாறு ஏற்பட்டு பைத்தியம் பிடித்த இளைஞனின் கதையைப் பற்றித் தான் இதில் பார்க்கப் போகிறோம்.
பெற்றோர்கள் தங்கள் வேலையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அவர்கள் இல்லாத குறையை குழந்தை மறக்கும் அளவுக்கு குழந்தைகளுக்கு மொபைல் போனைக் கொடுப்பது மிகப்பெரிய தவறு
பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை விளையாட்டு மற்றும் ரைம்கள் மூலம் மகிழ்விக்க டேப்ஸ் (tabs) மற்றும் மொபைல் போன்களைக் கொடுக்கிறார்கள். நீங்களும் அப்படித்தானா? அப்படியானால் இங்கே அந்த முடிவை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வைக்கும் அளவிற்கு ஒரு வழக்கு ஒன்று உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
மொபைல் போன் பரிசு
இந்த சம்பவம் சீனாவில் நடந்ததாகவும், சிறுவன் ஜெஜியாங்கைச் (Zhejiang) சேர்ந்த 13 வயது குழந்தை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய மனநலம் பாதிக்கப்பட்ட 6 மாதங்களுக்கு முன்பு சிறுவனுக்கு அவனது முதல் மொபைல் போன் பரிசாக வழங்கப்பட்டது.
சிறுவனின் பெற்றோர் வேலையில் மும்முரமாக இருந்ததால், அவருக்கு மொபைல் போனை பரிசளிக்க அவனது அம்மா முடிவு செய்தார். அவளும் அவரது கணவரும் அடிக்கடி வேலையில் பிஸியாக இருப்பதால் அவர்கள் தொடர்பில் இருக்கும்படி பையனுக்கு தொலைபேசியை பரிசளித்தார்.
MOST
READ:
ரஷ்யமொழி
படிக்க
நுழைவுத்
தேர்வில்
வெற்றி
பெற்ற
செக்யூரிட்டி...
சூப்பர்மேன்ப்பா...
மொபைல் பைத்தியம்
தகவல்களின்படி, சிறுவன் கிட்டத்தட்ட நாள் முழுவதும் மொபைல் போனுடன் விளையாடினான். அவன் சில மாதங்களாக மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவதால், தனது தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.
மனநிலை பாதிப்பு
சிறுவனுக்கு திடீரென பைத்தியம் போல வெறிபிடித்தபோது பள்ளியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவன் ஒரு சுவரில் இடைவிடாமல் தன் தலையை இடிக்கத் தொடங்கினான். அவனது ஆசிரியர் அவரைத் தடுக்க முயன்றார், முடியாத ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரது அம்மா அழைக்கப்பட்டார்.
அவனது உடல் வெளிர ஆரம்பித்து நிலைமை மோசமடைந்தது. அவன் முகம் வெட்டி இழுக்கத் தொடங்கியது. அவனது அம்மா அவனை எழுப்ப முயன்றபோது அம்மாவின் அழைப்புகளுக்கு அவன் பதிலளிக்கவில்லை. சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 28 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
மோசமான நிலை
சிறுவனை மருத்துவமனையில் வைத்திருந்தாலும், அவரது உடல் நிலை ஒருபோதும் முன்னேறவில்லை, அதற்கு பதிலாக அவர் மனநலம் பாதிக்கப்படும் அளவுக்கு மோசமாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
13 வயது சிறுவன் நடக்கவோ பேசவோ முடியாததால் ஒரு குழந்தையைப் போல நடந்து கொள்ளத் தொடங்கினான். அவனால் தன்னை கவனித்துக் கொள்ள முடியவில்லை. அவரது நிலை பின்னர் நரம்பியல் துறை மற்றும் வாதவியல் துறையால் ஆய்வு செய்யப்பட்டது.
நரம்பு மண்டலம்
மருத்துவர்கள் சிறுவனைப் பற்றி, அவனது முந்தைய சோதனை அறிக்கை உட்பட பல விரிவான பரிசோதனையை மேற்கொண்டு அவருக்கு ஆட்டோ இம்யூன் என்செபாலிடிஸ் (Autoimmune Encephalitis) இருப்பதைக் கண்டறிந்தனர். இது ஒரு புதிய வகை immune-mediated நோயின் நிலை, இது மத்திய நரம்பு மண்டலத்தை உள்ளடக்கியது, இது அறிவாற்றல் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.
சிறுவனுக்கு இந்த நிலை இருப்பது கண்டறியப்பட்டதும், அவருக்கு மருந்து மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், சிறுவனின் நிலை இறுதியாக மேம்படத் தொடங்கியது. அவரால் மீண்டும் பேச முடிந்தது, பெற்றோரை கூட அடையாளம் காண முடிந்தது. பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.