Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
மொபைல் அதிகமா யூஸ் பண்ணதால வெறிபிடித்து சுவரில் போய் முட்டிக்கொள்ளும் இளைஞன்...
மொபைல் போனை மிக அதிகமாகப் பயன்படுத்தியதால் நரம்புக்கோளாறு ஏற்பட்டு பைத்தியம் பிடித்த இளைஞனின் கதையைப் பற்றித் தான் இதில் பார்க்கப் போகிறோம்.
பெற்றோர்கள் தங்கள் வேலையில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும், அவர்கள் இல்லாத குறையை குழந்தை மறக்கும் அளவுக்கு குழந்தைகளுக்கு மொபைல் போனைக் கொடுப்பது மிகப்பெரிய தவறு

பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகளை விளையாட்டு மற்றும் ரைம்கள் மூலம் மகிழ்விக்க டேப்ஸ் (tabs) மற்றும் மொபைல் போன்களைக் கொடுக்கிறார்கள். நீங்களும் அப்படித்தானா? அப்படியானால் இங்கே அந்த முடிவை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வைக்கும் அளவிற்கு ஒரு வழக்கு ஒன்று உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

மொபைல் போன் பரிசு
இந்த சம்பவம் சீனாவில் நடந்ததாகவும், சிறுவன் ஜெஜியாங்கைச் (Zhejiang) சேர்ந்த 13 வயது குழந்தை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய மனநலம் பாதிக்கப்பட்ட 6 மாதங்களுக்கு முன்பு சிறுவனுக்கு அவனது முதல் மொபைல் போன் பரிசாக வழங்கப்பட்டது.
சிறுவனின் பெற்றோர் வேலையில் மும்முரமாக இருந்ததால், அவருக்கு மொபைல் போனை பரிசளிக்க அவனது அம்மா முடிவு செய்தார். அவளும் அவரது கணவரும் அடிக்கடி வேலையில் பிஸியாக இருப்பதால் அவர்கள் தொடர்பில் இருக்கும்படி பையனுக்கு தொலைபேசியை பரிசளித்தார்.

மொபைல் பைத்தியம்
தகவல்களின்படி, சிறுவன் கிட்டத்தட்ட நாள் முழுவதும் மொபைல் போனுடன் விளையாடினான். அவன் சில மாதங்களாக மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவதால், தனது தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

மனநிலை பாதிப்பு
சிறுவனுக்கு திடீரென பைத்தியம் போல வெறிபிடித்தபோது பள்ளியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவன் ஒரு சுவரில் இடைவிடாமல் தன் தலையை இடிக்கத் தொடங்கினான். அவனது ஆசிரியர் அவரைத் தடுக்க முயன்றார், முடியாத ஒரு கட்டத்திற்குப் பிறகு அவரது அம்மா அழைக்கப்பட்டார்.
அவனது உடல் வெளிர ஆரம்பித்து நிலைமை மோசமடைந்தது. அவன் முகம் வெட்டி இழுக்கத் தொடங்கியது. அவனது அம்மா அவனை எழுப்ப முயன்றபோது அம்மாவின் அழைப்புகளுக்கு அவன் பதிலளிக்கவில்லை. சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு 28 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

மோசமான நிலை
சிறுவனை மருத்துவமனையில் வைத்திருந்தாலும், அவரது உடல் நிலை ஒருபோதும் முன்னேறவில்லை, அதற்கு பதிலாக அவர் மனநலம் பாதிக்கப்படும் அளவுக்கு மோசமாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.
13 வயது சிறுவன் நடக்கவோ பேசவோ முடியாததால் ஒரு குழந்தையைப் போல நடந்து கொள்ளத் தொடங்கினான். அவனால் தன்னை கவனித்துக் கொள்ள முடியவில்லை. அவரது நிலை பின்னர் நரம்பியல் துறை மற்றும் வாதவியல் துறையால் ஆய்வு செய்யப்பட்டது.

நரம்பு மண்டலம்
மருத்துவர்கள் சிறுவனைப் பற்றி, அவனது முந்தைய சோதனை அறிக்கை உட்பட பல விரிவான பரிசோதனையை மேற்கொண்டு அவருக்கு ஆட்டோ இம்யூன் என்செபாலிடிஸ் (Autoimmune Encephalitis) இருப்பதைக் கண்டறிந்தனர். இது ஒரு புதிய வகை immune-mediated நோயின் நிலை, இது மத்திய நரம்பு மண்டலத்தை உள்ளடக்கியது, இது அறிவாற்றல் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது.
சிறுவனுக்கு இந்த நிலை இருப்பது கண்டறியப்பட்டதும், அவருக்கு மருந்து மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால், சிறுவனின் நிலை இறுதியாக மேம்படத் தொடங்கியது. அவரால் மீண்டும் பேச முடிந்தது, பெற்றோரை கூட அடையாளம் காண முடிந்தது. பின்னர் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.



Click it and Unblock the Notifications











