Just In
- 1 hr ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 3 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 4 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- 6 hrs ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
Don't Miss
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சூரிய பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: புத்தாண்டு இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..!
ஜோதிடத்தில் மொத்தம் 32 ராஜயோகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கேந்திர திரிகோண ராஜயோகம். இந்த ராஜயோம் 2022 டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு செல்லும் போது உருவானது.
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களும், நட்சத்திரங்களும் அவ்வப்போது நகர்ந்து கொண்டே இருக்கும். அப்படி நகரும் போது அது மனித வாழ்க்கையை பாதிக்கும். மேலும் கிரகங்கள் ராசியை மாற்றும் போது அது சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். ஜோதிடத்தில், யோகம் என்பது கிரக சேர்க்கையால் உருவாவதைக் குறிக்கிறது. அந்த யோகம் ஒருவரது ஜாதகத்தில் எந்த வீட்டில் உருவாகிறதோ, அதைப் பொறுத்து பலன்கள் கிடைக்கும்.
யோகங்களில் ராஜயோகம் மிகவும் மங்களகரமானதாகும். ராஜயோகம் உருவானால், அது வாழ்வில் அமைதி, புகழ், ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செல்வம் ஆகியவற்றைத் தரும். ஜோதிடத்தில் மொத்தம் 32 ராஜயோகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கேந்திர திரிகோண ராஜயோகம். இந்த ராஜயோம் 2022 டிசம்பர் 16 ஆம் தேதி சூரியன் தனுசு ராசிக்கு செல்லும் போது உருவானது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் செழிப்பைப் பெறுவார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கேந்திர திரிகோண ராஜயோகம் என்றால் என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் படி, கேந்திர திரிகோண ராஜயோகமானது 1, 4, 7 மற்றும் 10 என்னும் கேந்திர வீடு மற்றும் திரிகோண வீடுகளான 1, 5, 9 ஆகிய வீடுகளுக்கு இடையே உள்ள இணைப்பால் உருவாகிறது. இந்த யோகம் மிகவும் மங்களகரமானதாக கருப்படுகிறது. வேத ஜோதிடத்தில், 1, 4, 7 மற்றும் 10 ஆகிய வீடுகள் விஷ்ணுவின் வீடுகள் என்றும், 1, 5 மற்றும் 9 ஆகிய வீடுகள் லட்சுமியின் வீடுகள் என்றும் அழைக்கப்படுகிறது. இப்போது சூரிய பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகத்தால் 2023 புத்தாண்டின் தொடக்கத்தில் நற்பலன்களைப் பெறும் அந்த ராசிக்காரர்களைப் பற்றி காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளாதால், அந்த வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணத்தை அதிகம் சேமிக்க முடிவதோடு, நல்ல நிதி பலன்களையும் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு மென்மையாகவும், இனிமையாகவும், ரொமான்டிக்காகவும் இருக்கும். தொழிலில் நற்செய்திகளைப் பெறுவார்கள். கூட்டு தொழில் தொடங்க சிறந்த காலம். வாழ்க்கையில் முன்னேற நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளதால், அந்த வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. எனவே இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பெறுவதோடு, வியாபாரத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களையும் பெறுவார்கள். மேலும் இந்த யோகத்தால் வாகனம் மற்றும் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். பணியிடத்தில் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள். 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தாயின் ஆதரவைப் பெறுவீர்கள்.
மீனம்
கேந்திர திரிகோண ராஜயோகமானது மீன ராசிக்காரர்களுக்கு 2023 புத்தாண்டின் தொடக்கத்திலேயே அற்புதமான பலன்கள் கிடைக்கும். வாழ்வில் முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும். பணியிடத்தில் உங்களின் வேலை சிறப்பாக பாராட்டப்படும். இக்காலத்தில் பலர் நல்ல வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். சிலர் புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)