Just In
- 5 min ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 45 min ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 3 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
Don't Miss
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- News அண்ணாமலையை விடுங்க.. ஒரே நாளில் வியப்பூட்டிய தமிழகம்.. மகிழ்ச்சி, அதிருப்தி, பூரிப்பு.. இது ஹைலைட்ஸ்
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Automobiles மஹிந்திரா ஸ்கார்பியோ, பெயருக்கே காரை வாங்க கூட்டம் குவியுது!! டாடா நிறுவனத்தால் கிட்ட கூட நெருங்க முடியல!
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
சிவபெருமான் இந்த பாவங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டாராம்... இதனால் உங்களுக்கு நரகம்தானாம்...!
சிவபெருமான் இந்து மதத்தின் மிகமுக்கியமான கடவுளாவார். அழிவின் கடவுளான சிவபெருமானை எளிதில் மகிழ்விப்பது உண்மையில் எளிமையானதாகும்.
சிவபெருமான் இந்து மதத்தின் மிகமுக்கியமான கடவுளாவார். அழிவின் கடவுளான சிவபெருமானை எளிதில் மகிழ்விப்பது உண்மையில் எளிமையானதாகும். சிவபெருமானை தினமும் நீராடி சிவலிங்கத்தை வழிபட்டால் போதும் அதுவே சிவபெருமானை மகிழ்விக்க போதுமானது. வெளிப்புறமாக மூர்க்கமானவராக தெரியும் சிவபெருமான் உள்ளே மிகவும் இளகிய மனம் கொண்டவர். அதனால் அவர் போலேநாத் என்றும் அழைக்கப்படுகிறார்.
அசுரர்களுக்கு கூட வரங்களை அள்ளிக்கொடுக்கும் சிவபெருமான் மக்களின் சில பாவங்களை ஒருபோதும் மன்னிக்கமாட்டார். அவை எண்ணங்கள், பேச்சு அல்லது செயலால் செய்யப்படலாம். அவை தவறான செயல்கள் மட்டும் உங்களை சிவனின் கோபத்திற்கு ஆளாக்கும் கடுமையான பாவங்களாகும். மனிதர்கள் செய்யக்கூடாத பாவங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மற்றவரின் செல்வத்தை விரும்புதல்
மற்றொருவரின் பணத்தை ஒருபோதும் தவறாக பயன்படுத்த முயற்சிக்காதீர்கள். ஒருவருக்கு நீங்கள் செலுத்த வேண்டிய பணத்தைத் திருப்பிச் செலுத்த மறக்காதீர்கள். ஒருவர் மற்றவரின் பணத்தின் மீது ஆசைப்படவே கூடாது. இதனால் சிவன் அதிருப்தி அடைவார்.
வேறொருவரின் மனைவியை விரும்புவது.
வேறொருவரின் திருமண வாழ்க்கையை சீர்குலைக்க முயற்சிப்பது பெரும் பாவமாக சிவபெருமானால் கருதப்படுகிறது. ஒருவர் மற்றொருவரின் மனைவியை சொந்தமாக்கிக் கொள்ள விரும்பக்கூடாது அல்லது அவர்களது உறவில் வேறு எந்த விதத்திலும் பிரச்சனைகளை உருவாக்க முயற்சிக்கக் கூடாது.
மற்றவர்களுக்கு எதிராக தீய திட்டங்களைத் திட்டமிடுதல்
பிறருக்கு எதிராக தீமையான திட்டமிடுவதைக் கூட சிவபெருமான் விரும்புவதில்லை. மற்றவர்களுக்கு எதிராக தீய திட்டங்களை தீட்டுபவர்கள் அல்லது மற்றவர்களின் மகிழ்ச்சியை அழிக்க முயற்சிப்பவர்கள் சிவபெருமானால் ஒருபோதும் பாராட்டப்படுவதில்லை. அவரைப் போலவே அப்பாவி மக்களை அவர் விரும்புகிறார்.
பெண்களை அவமதிப்பவர்கள்
இந்து மதத்தில் ஒரு பெண்ணை அவமதிப்பது லட்சுமி தேவியை கோபமடையச் செய்கிறது, அதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறக்கூடும் என்று நம்பப்படுகிறது. இதனை சிவபெருமானும் வெறுக்கிறார். பெண்களை மதிக்காத வீட்டில் எந்த கடவுளும் தங்குவதில்லை. சிலர், அறியாமையால், பெண்கள் மீது அசுத்தமான மற்றும் ஆரோக்கியமற்ற கருத்துக்களை வீசுகிறார்கள், இது அவர்களை அவமானப்படுத்துவது மட்டுமல்லாமல், சிவபெருமானை அதிருப்திக்குள்ளாக்குகிறது.
மற்றவர்களை இழிவுபடுத்துதல்
சிவபெருமான் தன்னைப் போலவே குற்றமற்றவர்களையும் விரும்புகிறார். சமூகத்தில் இன்னொருவரின் கண்ணியத்தையும் மரியாதையையும் கெடுக்க யாராவது முயன்றால், அது சிவபெருமானுக்குக் கோபத்தை உண்டாக்கும். நீங்கள் ஒரு நபரை இழிவுபடுத்த முயற்சித்தால் அது பாவம் என்று அவர் கருதுகிறார். மற்றவர்களுக்கு எதிராக பொய்களைப் பயன்படுத்துவதும், வதந்திகளைப் பரப்புவதும் அவர் பார்வையில் தவறு. ஒருவரின் முதுகுக்குப் பின்னால் பேசுவதும் இதில் அடங்கும்.
திருடுதல்
கோவிலில் அல்லது வேறு யாரிடமிருந்தோ சொத்துக்களை திருடுவது சிவபெருமானுக்கு அதிருப்தி தருகிறது. இந்த தவறை சிவபெருமான் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்.
பெரியவர்களை அவமரியாதை செய்தல்
பெற்றோரை, ஆசிரியர்களை அவமரியாதை செய்வது அல்லது குறை கூறுவது சிவபெருமானின் கோபத்திற்கு ஆளாகிறது. ஒருவர் துறவிகளையும் அவமரியாதை செய்யக்கூடாது.